பன்றிக்காய்ச்சல் தமிழ்நாட்டில் வேகமாக பரவி வருவதால் மருத்துவமனைகளில் கூட்டம் அதிகரிப்பு

 

தமிழ்நாட்டில் பருவமழைக்கு முன்பே பன்றிக்காய்ச்சல் எனப்படும் H1 வகை காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் மருத்துவமனைகளில் கூட்டம் அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரியில் 19 ஆக இருந்த பாதிப்பு தற்போது 339 ஆக உயர்ந்துள்ளது. லேசான சளி, காய்ச்சல், இருமல், தொண்டை வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தபட்டுள்ளது.

பன்றிக் காய்ச்சல் சோதனை (H1N1) என்பது உங்கள் உடலில் பன்றிக் காய்ச்சலைக் கண்டறிய உதவும் தொடர்ச்சியான நோயறிதல் சோதனைகள் ஆகும். H1N1 என்பது “ஹெமகுளுட்டினின் வகை 1 மற்றும் நியூராமினிடேஸ் வகை 1” என்பதைக் குறிக்கிறது, இது H1N1 இன்ஃப்ளூயன்ஸா வைரஸின் மேற்பரப்பில் காணப்படும் குறிப்பிட்ட புரதங்களைக் குறிப்பிடுகிறது. H1N1 இன்ஃப்ளூயன்ஸா அல்லது பன்றிக் காய்ச்சல் என்பது பன்றிகளிடமிருந்து தோன்றிய ஒரு வைரஸ் ஆகும், இது மனிதர்களையும் தொற்றிக்கொள்ளும் வகையில் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது.

பன்றிக் காய்ச்சலுக்கான பரிசோதனை முடிவுகள் நேர்மறை அல்லது எதிர்மறையாக இருக்கும். பன்றிக் காய்ச்சல் (H1N1) பரிசோதனையில் உங்கள் முடிவு எதிர்மறையாக வந்தால், உங்களுக்கு இந்த நோய் இல்லை, ஆனால் சாதாரண பருவகால காய்ச்சல் இருக்கலாம் என்று அர்த்தம். இருப்பினும், உங்கள் முடிவு நேர்மறையாக வந்தால், நீங்கள் H1N1 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்றும் உங்களுக்கு சிகிச்சை தேவை என்றும் அர்த்தம்.

இருமல், தொண்டை வலிமூக்கடைப்பு அல்லது மூக்கில் நீர் வடிதல்சோர்வு மற்றும் தலைவலி அறிகுறிகள் இருக்கும். பாதிக்கப்பட்டவர்கள் தும்மும்போது இருமும்போது வெளிவரும் நீர்த்துளிகள் மூலம் மற்றவர்களுக்குப் பரவுகிறது.கிருமி தொற்றயப் பொருட்களைத் தொட்டுவிட்டு கண்களையோ, மூக்கையோ தொடும்போதும் பரவக்கூடும். காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்து வீட்டில் ஓய்வெடுக்கவும்.கைகளைச் சோப்பு போட்டு அடிக்கடி சுத்தமாகக் கழுவவும்.காய்ச்சல் இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவும்.