இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை புனித ஜோர்ஜ் கோட்டையில் நடைபெற்ற விழாவில், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான திரிஷா தனது தாயாருடன் நேரில் சென்று கலந்துகொண்டார்.
தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கதாநாயகியாகத் தொடர்ந்து வலம் வரும் நடிகை திரிஷா, தற்போதும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், இன்று இந்திய நாட்டின் 80ஆவது சுதந்திர தினம் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனை முன்னிட்டு, சென்னை கோட்டையில் நடைபெற்ற அதிகாரப்பூர்வ சுதந்திர தின விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
சுதந்திர தின நிகழ்வுகளை நேரில் காண்பதற்காக நடிகை திரிஷா, தனது தாயார் உமாவுடன் வருகை தந்திருந்தார்.
இதன்போது விழா மேடையில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜயின் பெற்றோரான எஸ்.ஏ. சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர் ஆகிய இருவருக்கும் பக்கத்து நாற்காலியில் திரிஷா அமர்ந்தமை பார்வையாளர்களை ஈர்த்திருக்கிறது.
மேலும், திரையுலக முக்கிய பிரமுகர்கள் பலர் இந்நிகழ்வில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.



