அமெரிக்காவின் பிரபல தொழிலதிபரும் ‘பிளேபாய்’ இதழின் நிறுவனருமான ஹக் ஹெஃப்னர், பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் குறித்து அமெரிக்கக் புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ-யிடம் பலமுறை எச்சரிக்கை விடுத்திருந்த அதிர்ச்சித் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. சமீபத்தில் சட்டப்பூர்வமாக வெளியிடப்பட்ட எஃப்பிஐ-யின் இரகசிய விசாரணை ஆவணங்கள் மூலம் இந்த திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
‘பிளேபாய்’ அமைப்பைச் சேர்ந்த இளம் மாடல் மற்றும் பிளேமேட் ஒருவர், ஜெஃப்ரி எப்ஸ்டீன் மற்றும் அவளது கூட்டாளி கிஸ்லைன் மேக்ஸ்வெல்லால் பாலியல் வன்கொடுமைக்கும் கடத்தலுக்கும் ஆளாக்கப்பட்டதாகத் தகவல் கிடைத்ததைத் , ஹக் ஹெஃப்னர் அதிகாரிகளை நேரடியாகத் தொடர்புகொண்டு புகார் அளித்துள்ளார். எப்ஸ்டீனின் சட்டவிரோத நடவடிக்கைகளை முன்கூட்டியே தடுத்து நிறுத்த ஹெஃப்னர் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார் என்பதை இந்த ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன.
ஜெஃப்ரி எப்ஸ்டீன் தனது பணபலத்தைப் பயன்படுத்தி இளம் பெண்களையும் மாடல்களையும் தொழிலதிபர் ஹெஃப்னரின் பிளேபாய் மாளிகை மற்றும் விருந்துகளில் இருந்து கவர முயன்றதும், அதில் சிலரைத் தனது பாலியல் வலையில் வீழ்த்தியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து ஹெஃப்னர் அதிகாரிகளிடம் விரிவான தகவல்களைப் பகிர்ந்தபோதிலும், அப்போதே எஃப்பிஐ உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஏற்கனவே உலகின் பல்வேறு முன்னணி அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் அரச குடும்பத்தினருடன் எப்ஸ்டீனுக்கு இருந்த தொடர்புகள் குறித்த தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஹக் ஹெஃப்னரின் இந்த முன்கூட்டிய எச்சரிக்கை குறித்த செய்தி எப்ஸ்டீன் வழக்கிற்குப் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எஃப்பிஐ விசாரணை அமைப்பின் செயல்பாடு குறித்து அமெரிக்கப் பொதுமக்கள் மற்றும் சர்வதேச ஊடகங்கள் மத்தியில் மீண்டும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.



