–
சீனா ஈரானுக்கு 300 முதல் 400 தோள்மீது வைத்து இயக்கும் வான் பாதுகாப்பு ஏவுகணை செலுத்தும் கருவிகளை வழங்கவுள்ளதாக வெளியான செய்திகளை சீனாவின் வெளியுறவு அமைச்சு முற்றாக மறுத்துள்ளது.
இந்த ஆயுதங்களின் மதிப்பு 60 முதல் 70 மில்லியன் டொலர் வரை இருக்கும் என சர்வதேச ஊடகங்கள் அண்மையில் தெரிவித்திருந்தன.
இந்நிலையில், இந்த செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை மற்றும் ஆதாரமற்றவை என்றும், அமைதியை ஏற்படுத்தவும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரவுமே சீனா எப்போதும் பாடுபட்டு வருகிறது என்றும் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் சின்ஹுவா கூறியுள்ளார்.
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கினால் அது தமக்கு பெருத்த ஏமாற்றமளிக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று தெரிவித்திருந்ததன் பின்னணியில், சீனாவின் மேற்படி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈரான் தனது முக்கிய வெளிநாட்டுப் பங்காளிகளின் உதவியுடன் சில ஆயுத அமைப்புகளை மீண்டும் நிரப்ப முயன்று வரும் வேளையில், அமெரிக்க உளவுத்துறையினால் குறித்த ஆயுதங்கள் தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டிருந்தாக சில அமெரிக்க ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



