மா ஓயா ஆற்றில் குளித்து கொண்டிருந்த போதுநீரில் மூழ்கிய 3 இளம் பெண்கள் உட்பட 4 பேர் மாயம்

 

கம்பஹா, படல்கம பகுதியில் உள்ள மா ஓயா ஆற்றில் குளித்து கொண்டிருந்த போது, ​​3 இளம் பெண்கள் உட்பட 4 பேர் நீரில் மூழ்கி காணாமல் போன நிலையில் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் இன்று பிற்பகல் 2:00 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரு ஆணின் உடலமும் ஒரு பெண்ணின் உடலமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

3 இளம் பெண்கள் மற்றும் பதின்ம வயது இளைஞன் அடங்கிய குழுவினர் மா ஓயா ஆற்றில் குளிக்க சென்றிருந்தனர்.

அவர்களில் நால்வர் பாதுகாப்பற்ற பகுதியில் குளித்துக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

அவர்களில் ஒரு இளம் பெண் நீரில் மூழ்கத் தொடங்கிய போது, ​​அவரை மீட்க முயன்ற ஏனைய மூவரும் நீரில் மூழ்கி காணாமல் போனதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போனவர்களை தேடும் பணியை உள்ளூர் மக்களும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.