இந்திய வான்படை தளங்கள் மீது தாக்குதல் – பாகிஸ்தானின் Vedio வெளியீடு

 

நடத்தி அழித்ததாகக் கூறி, பாகிஸ்தான் வான்படை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கற்பனையான கார்ட்டூன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. எவ்வித ஆதாரமும் இல்லாத இந்த போலி வீடியோ வெளியீடு, சர்வதேச ராணுவ வல்லுநர்கள் மற்றும் சமூக வலைத்தளப் பயனர்களிடையே பெரும் கிண்டலுக்கும் சிரிப்பலைக்கும் உள்ளாகியுள்ளது.

பாகிஸ்தான் வான்படை தினத்தை முன்னிட்டு ‘ஃபிசாவோன் கே பாஸ்பான்’ என்ற தலைப்பில் ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட கணினி அனிமேஷன் வீடியோ ஒன்றை பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டது. அந்த வீடியோவில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ மோதலின் போது பாகிஸ்தானின் ஏவுகணைகள் இந்தியாவிற்குள் ஊடுருவி, இந்திய வான்படையின் 32 விமான தளங்கள், 2 எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ரஃபேல் உட்பட 8 போர் விமானங்களை அழித்ததாகக் கிராபிக்ஸ் மூலம் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த வீடியோவில் செயற்கைக்கோள் புகைப்படங்களோ அல்லது உண்மையான ஆதாரங்களோ எதுவும் இடம்பெறவில்லை. ஏற்கனவே பாகிஸ்தானின் எஸ்-400 அழிப்புத் தொடர்பான பொய்ப் பிரச்சாரங்களை இந்திய அரசின் ‘பிஐபி ஃபேக்ட் செக்’ அலகும், பிரதமர் நரேந்திர மோடியின் ஆதம்பூர் விமானப்படை தள விஜயமும் ஆதாரப்பூர்வமாகப் பொய்யாக்கியிருந்தன. மேலும், ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானின் எஃப்-16 மற்றும் ஜேஎஃப்-17 போர் விமானங்கள் இந்தியாவில் வீழ்த்தப்பட்டதை ஊர்ஜிதம் செய்யும் செயற்கைக்கோள் சான்றுகளை இந்திய வான்படை ஏற்கனவே வெளியிட்டிருந்தது.

நேரடி ராணுவ மோதல்களில் பெற்ற தொடர் தோல்விகளை மறைக்கவும், தங்களது நாட்டின் பொதுமக்களைத் திசைதிருப்பவும் பாகிஸ்தான் ராணுவம் கணினி அனிமேஷன் மற்றும் செயற்கை நுண்ணறிவுப் போலிகளை நம்பிப் பிரச்சாரம் செய்து வருவதாகப் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் விமர்சித்துள்ளனர். நிஜத்தில் நடத்த முடியாத தாக்குதல்களைத் திரையில் காட்டி பாகிஸ்தான் சுய திருப்தி அடைந்து கொள்வதாக நெட்டிசன்களும் கடுமையாகக் கேலி செய்து வருகின்றனர்.

பாகிஸ்தான் ஏஐ போலி வீடியோ, இந்திய வான்படை தளங்கள் தாக்குதல் போலி வீடியோ, ஆபரேஷன் சிந்தூர் பாகிஸ்தான் போலி பிரச்சாரம் 2026, பாகிஸ்தான் வான்படை ஏஐ அனிமேஷன் வீடியோ