சிறுவர்கள் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு சிறுவர் பாதுகாப்பு சபை எச்சரிக்கை!

 

சிறுவர்களை புறக்கணித்தல் மற்றும் கைவிடுதல் அத்துடன் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துஷ்பிரயோகம் செய்தல் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாகத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன் சட்ட அமலாக்கல் பணிப்பாளர், சட்டத்தரணி சஜீவனி அபேகோன் இது குறித்துத் தெரிவிக்கையில், மாதாந்தம் 600 முதல் 1,000 வரையிலான முறைப்பாடுகள் தமக்குக் கிடைப்பதாகக் குறிப்பிட்டார்.

இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடும் பெற்றோருக்கு, தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் 2 ஆண்டுகளுக்கு குறைவற்ற மற்றும் 10 ஆண்டுகளுக்கு உட்பட்ட சிறைத்தண்டனையைப் பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் அவர் மேலும் எச்சரித்துள்ளார்.