இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியைச் சேர்ந்த ரேணு தரியல், உயிருடன் இருக்கும் பெண்களில் உலகிலேயே மிக நீளமான தலைமுடி கொண்டவர் என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளார்.
ரேணுவின் தலைமுடி உத்தியோகபூர்வமாக 271.50 சென்றிமீற்றர், அதாவது சுமார் 8 அடி 10 அங்குலம் நீளமாக அளவிடப்பட்டுள்ளது.
இதற்காக அவரது பெயர் ‘கின்னஸ் உலக சாதனை’ புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தத் தனித்துவமான உலக சாதனையில் இதற்கு முன், உக்ரேனைச் சேர்ந்த அலியா நசிரோவா இடம்பிடித்திருந்தார்.
இவரது தலைமுடியின் நீளம் 8 அடி 5.3 அங்குலம் (257.33 செமீ) ஆகும். இந்நிலையில், அலியாவின் சாதனையை தற்போது ரேணு தரியால் முறியடித்துள்ளார்.



