பருவநிலைகளுக்கு ஏற்ப உருகும் பனிப்பாறைகள்,  பூமியின் சமநிலை மாறுகிறதா?

 

பூமி நிலையான திடமான கோளம்போல் காட்சியளித்தாலும், அதன் நிறை மையம் (Centre of mass) பருவநிலைகளுக்கு ஏற்ப தொடர்ந்து ஊசலாடிக்கொண்டிருக்கிறது என்பதை நாசா (NASA) ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

பூமியை நாம் ஒரு நிலையான, திடமான பந்து போலப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்; ஆனால், உண்மை அதுவல்ல. பூமியின் நிறை மையம் (Centre of mass) ஒவ்வொரு நொடியும் ஓரிடத்தில் நிற்காமல் தொடர்ந்து ஊசலாடி கொண்டிருக்கிறது. பருவநிலைக்கு ஏற்ப தண்ணீர், பனிப் பாறைகள் மற்றும் காற்று போன்றவை கண்டங்களுக்கு இடையே இடம் மாறுவதால், பூமியின் வடிவியல் மையத்தில் இருந்து அதன் நிறை மையம் சில மில்லிமீட்டர்கள் அளவுக்கு அங்கும் இங்கும் நகர்கிறது.

இந்த நுண்ணிய மாற்றங்களை மில்லிமீட்டர் அளவுக்கு மிகத் துல்லியமாகக் கண்டறியும் புதிய தொழில்நுட்பத்தை நாசா (NASA) ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின் (JPL) புவி அறிவியல் ஆய்வாளர் டொனால்ட் ஆர்கஸ் (Donald Argus) தலைமையிலான குழுவினர் உருவாக்கியுள்ளனர். இந்த ஆய்வுக் கட்டுரை ஜியோபிசிகல் ஜர்னல் இன்டர்நேஷனல் (Geophysical Journal International) இதழில் வெளியாகியுள்ளது.