அமெரிக்​கர்​களுக்கு தலா 5,000 டாலர்-ட்ரம்ப் நா​டாளு​மன்​றதேர்தலில் வென்றால்

 

அமெரிக்க நாடாளு​மன்​ற இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றிபெற்றால், ஒவ்​வொரு அமெரிக்​கருக்​கும் தலா 5,000 டாலர்​கள் வழங்​கப்​படும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் வாக்குறுதி அளித்​துள்​ளார்.

டல்​லாஸ் நகரில் புதனன்று நடை​பெற்ற குடியரசுக் கட்​சி​யின் மாநாட்​டில் அதிபர் ட்ரம்ப் பேசுகை​யில், “வரும் நவம்​பர் மாதம் நடை​பெறவுள்ள இடைத்​தேர்​தலில் ஆளும் குடியரசுக் கட்சி வெற்றி பெற்​றால், உங்​களுக்​கும் வெற்றி நிச்​ச​யம். ஒவ்​வொரு அமெரிக்​கருக்​கும் 5,000 டாலர் (ரூ.4.8 லட்சம்) கிடைக்​கும். இது ட்ரம்ப் ஈவுத்​தொகை என அழைக்​கப்​படும்” என்று தெரி​வித்​தார்.

ஆனால், இத்​திட்​டத்​திற்​குத் தேவைப்​படும் சுமார் 1 டிரில்​லியன் டாலருக்​கும் அதி​க​மான பெருந்​தொகை எங்​கிருந்து திரட்​டப்​படும் என்ற விவரத்தை ட்ரம்ப் குறிப்​பிட​வில்​லை. எனினும், நமது நாடு தற்​போது அதி​கள​வில் வரு​வாய் ஈட்டி வரு​கிறது என்று மட்​டும் அவர் குறிப்​பிட்​டார். அமெரிக்க ஊடகங்​கள் நடத்​திய கருத்​துக் கணிப்​பு​களில் குடியரசுக் கட்சி பின்​னடைவைச் சந்​தித்து வருகிறது.

இந்நிலை​யில், ஆதர​வாளர்​களிடையே உரை​யாற்​றிய ட்ரம்ப், “வரும் இடைத்தேர்​தலில் வாக்​களிக்​கும் போது, வாக்​குச் சீட்​டில் எனது பெயர் இருப்​ப​தாகவே கரு​திக்​கொண்டு குடியரசுக் கட்சிக்கு வாக்​களி​யுங்​கள்” என்று வேண்​டு​கோள் விடுத்​தார்.

ஈரான் மீதான போர் மற்​றும் விலை​வாசி உயர்வு காரண​மாக ட்ரம்பின் ஆதரவு விகிதம் 30% ஆகக் குறைந்​துள்​ள​தாகக் கருத்​துக்​கணிப்​புகள் தெரிவிக்கின்றன.