கண் திருஷ்டி என்பது ஒருவர் ஆசைப்படும், தன்னுடைய வாழ்க்கையில் நடக்க வேண்டும் என நினைக்கும் அல்லது முயற்சி செய்யும் விஷயங்கள் தனக்கு நடக்காமல் தன்னை சுற்றி இருக்கும் வேறு ஒருவருக்கு நடக்கும் போது அதை பார்த்து பொறாமைப்படுவது, ஏக்க பெருமூச்சு விடுவது ஆகும். மற்றவர்களின் பொறாமை, ஏக்கம் காரணமாக நம்மை சுற்றி எதிர்மறை ஆற்றல்கள், எதிர்மறை அதிர்வலைகள் உருவாகும். இதனால் நமக்கு பலவிதமான துன்பங்கள் ஏற்படும். இதையே கண் திருஷ்டி என்கிறோம்.
துரதிஷ்டம் :
அடுத்தடுத்த விபத்துக்கள், தொடர்ந்து எடுக்கிற காரியங்களில் எல்லாம் தோல்வி, அடுத்தடுத்து கெட்ட விஷயங்களாக நடப்பது ஆகியவை இருந்தால் நீங்கள் கண்திருஷ்டியால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்று அர்த்தம். தொடர்ந்து காரணமே இல்லாமல் தடைகள், பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேர்ந்தாலும் நீங்கள் கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்று அர்த்தம்.
பயம் :
காரணமே இல்லாமல் எப்போது கவலையான உணர்வு அல்லது பய உணர்வுடனேயே காணப்படுவது. நமக்கு ஏதாவது தவறாக நடந்து விடுமோ என எப்போதும் பதற்றத்துடனும், பயத்துடன் காணப்பட்டால் கண் திருஷ்டி பாதிப்பிற்கு ஆளானதாக அர்த்தம்.
நடவடிக்கையில் மாற்றம் :
கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டவர்களின் நடவடிக்கைகள், பழக்கங்கள் திடீர் திடீரென மாறிக் கொண்டே இருக்கும். அவர்களின் மனநிலையும் மாறிக் கொண்டே இருக்கும். நிலையான ஒரு கருத்துடன் இருக்க முடியாது. மனம் தடுமாறிக் கொண்டே இருக்கும். மன அமைதி இழந்து, வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவிலான உணர்வுகளை சந்திக்க நேரிடும்.
சோர்வு :
எப்போதும் சோர்வுடனும், சுறுசுறுப்பு இன்றியும், அனைத்து விஷயங்களிலும் மந்தமாக நடந்து கொள்வது, மனமும், உடலும் எந்த மருந்திற்கும் கட்டுப்படாமல், அப்போதும் நோயால் பாதிக்கப்பட்டது போன்ற உணர்வு ஏற்பட்டுக் கொண்டே இருந்தாலும், எதிலும் மனம் நாட்டம் இருந்தாலும் அவர்கள் கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அர்த்தம்.
தடுமாற்றம் :
கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டவர்கள் கவனத்துடன் மனம் ஒன்றி எந்த ஒரு செயலை செய்ய முடியாமல் ஒரு விதமான குழப்பத்துடனேயே காணப்படுவார்கள். எந்த ஒரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பம், தடுமாற்றத்துடனேயே இருப்பார்கள். இதனால் எந்த வேலையிலும் அவர்களால் ஈடுபாட்டுடன் செய்ய முடியாது.



