செட்டிநாட்டு பரங்கிக்காய் கூட்டி அவித்தல்
சமையல் சுவையாக, எளிமையாக இருக்க வேண்டும், சில நிமிடங்களில் அற்புதமாக அசத்த வேண்டுமா? சமைப்பதே தெரியாமல் சில நிமிடத்தில் செய்திடலாம் இந்த பரங்கிக்காய் கூட்டி அவித்தல். இதன் பெயரே செய் முறை கூறும், எல்லாவற்றையும் ஒன்றாக கூட்டி அவித்தல் அவ்வளவுதான். இது செட்டிநாட்டில் பல விருந்துகளில் முக்கியமாக பரிமாறப்படும் ஒன்று குறிப்பாக, கோவில் வைபவ விருந்துகளில் இது செய்வதுண்டு பூசைக்கு வடிப்பது ஒரு முக்கிய அம்சம் அதில் இது கண்டிப்பாக இடம்பெறும் அனைவராலும் விரும்பி கேட்டு உண்ணும் கறி வகை
செய்முறை :
பரங்கிக்காய்-250 கிராம் தோல் நீக்காமல் பெரிய துண்டாக வெட்டி வைத்துக்கொள்ளவும்
சின்ன வெங்காயம்-15, வெட்டி வைத்துக்கொள்ளவும்
பூண்டு-3, வெட்டி வைத்துக்கொள்ளவும்
தக்காளி-1, வெட்டி வைத்துக்கொள்ளவும்
கறிவேப்பிலை 2 கொத்து
புளி தண்ணீர்- 1 எலுமிச்சை அளவு எடுத்து கரைத்து வைத்துக்கொள்ளவும்.
உப்பு-1 தேக்கரண்டி
மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி
மிளகாய் பொடி-3 தேக்கரண்டி (சாம்பார் மசாலா பொடி)
சோம்பு, சீரகம் -1 தலா தேக்கரண்டி
வெந்தயம்-சிறிது
எண்ணெய் -3 தேக்கரண்டி
வெல்லம் சிறு துண்டு
செய்முறை:
இது தாளிக்கவோ, எண்ணெயில் வதக்கவோ, தேவையில்லை, எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து கொதிக்க வைத்து பரிமாறவும், இது கெட்டியாக இருக்க வேண்டும் அப்போதுதான் சுவை நன்றாக இருக்கும்.
ஒரு பாத்திரத்தில் பரங்கிக்காய், வெங்காயம், பூண்டு, நறுக்கிய தக்காளி, உப்பு, புளி தண்ணீர், மிளகாய் தூள் மஞ்சள் தூள், சோம்பு, சீராகம், கறிவேப்பிலை, எண்ணெய் மற்றும், தண்ணீர் 1 கோப்பை எல்லாம் சேர்த்து கலந்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.(பரங்கிக்காய் சீக்கிரம் வெந்துவிடும் அளவாக தண்ணீர் சேர்த்தால் போதுமானது)
தண்ணீர் அதிகம் தேவியில்லை இது சற்று சேர்ந்தார்ப்போல் இருக்க வேண்டும் நீர்க இருக்க கூடாது.
நன்கு வெந்து குழம்பு சுண்டி வரும்போது வெல்லம் சேர்த்து மிதமான தீயில் ஒரு நிமிடம் வைத்து இறக்கி பரிமாறலாம். சுவையும் மனமும் அற்புதமாக இருக்கும் . உடன் வடித்த சத்தம் சேர்த்து அல்லது துணை காயாக கூட பரிமாறலாம். 5 நிமிடத்தில் தயார்!
பருப்பரைத்து கொதிக்க விடுதல்:
அதன் பெயரிலேயே முறை விளங்கிவிடும் அவ்வளவு எளிய சுவையான ஒரு குழம்பு வகை. இது கேழ்வரகு கூழ், கம்பங்கூழ் மற்றும் சாதத்திற்கு ஏற்றது .
எந்தெந்த சூழ்நிலையில் எப்படி வாழ்வது என்பதை வாழ்ந்து காட்டி உள்ளனர் நம் முன்னோர்கள். சூழ்நிலைக்கேற்ப வாழக் கற்றுக்கொள்வது சிறப்பு, வசதியான சமயத்தில் சிறிது சுகமாகவும், சிக்கனம் கையாளவேண்டிய தருணத்தில் சாமர்த்தியமாகவும் எப்படி வாழ்வது என்பதை நாம் உட்கொள்ளும் உணவு வழியாகத் தெரியப்படுத்தியிருக்கிறார்கள்.
எளிமையான உணவுமுறையிலும், சிக்கனம் சோறு போடும் என்பதற்கு ஏற்ப, பருவகால காய்கறிகளை பதப்படுத்ததி வத்தல் வகை, பருப்பு, தானியம், உப்புக்கண்டம் போன்றவற்றை ஆரோக்கியமானதாகவும் சூழ்நிலைக்கேற்ப சமைத்து நமக்கு வாழ்கை முறையை செவ்வனே வாழ வழி வகுத்திட்ட நம் முன்னோர்களின் திட்டமிட்ட வாழ்க்கையைக் கண்டு பெருமைப்படுவோம்.
அப்படி ஒரு எளிய வகையான பருப்பு குழம்பு அனைவரும் பயன் பெரும் வகையில் இங்கு பகிரப்பட்டுள்ளது
செய்யத்தேவையான பொருட்கள்:
அரைக்க:
துவரம்பருப்பு-2 மேஜைக்கரண்டி (4 பேருக்கு பரிமாறும் அளவு)
வர மிளகாய்-1
சீரகம்-1/4 தேக்கரண்டி
பூண்டு -3 பல்
தாளிக்க:
கடுகு-1/4 தேக்கரண்டி பெருங்காயம்-2 சிட்டிகை
மாங்காய் வத்தல்-4 (அல்லது தக்காளி-1)
மாவதால் நன்கு கழுவி 20 நிமிடம் ஊறவைக்கவும்.
சிறிய வெங்காயம்-5
செய்முறை:
பருப்பு 30 நிமிடம் ஊறவைத்து ஊறியதும், பூண்டு, சீரகம் மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
வானலியில் எண்ணெய் காயவைத்து கடுகு, பெருங்காயம், தாளித்து கறிவேப்பிலை,வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
இப்போது ஊறிய மாவத்தல் சேர்த்து கொதிக்கவிடவும்.நன்கு கொதிக்கும் சமயம் அரைத்த விழுது, உப்பு சேர்த்து கொதிக்க விடவும் பருப்பு மாவத்தல் குழம்பு தயார். இது கேழ்வரகு கூழ், கம்பங்கூழ் மாற்றும் சாதத்திற்கு ஏற்றது.
தட்டை பயறு கத்திரிக்காய் குழம்பு :
காய்கறி சுருக்கமான சமயத்தில் சுவையான குழம்பு வகை செய்ய எண்ணினால் இதை செய்யலாம்.
அதிக சிரமம் தேவையில்லை, உடன் காய் செய்யாமலே!!! சுட்ட அப்பளம் சுவை கூட்டும் ரகசியம்.
இந்த தட்டை பயறு வைத்தே சாப்பிடலாம், பருப்பு துவையலோ, தக்காளி பச்சடியோ செய்து சுலபமாக பரிமாறலாம்.
இதில் சேர்க்கும் தட்டிய பூண்டு, சோம்பு, சீரகம் இவை அனைத்தும் வாய்வுத் தொல்லை குறைக்கும் குணமுடையது
செய்யத்தேவையான பொருட்கள்:
தட்டை பயறு-1/2 கோப்பை கத்திரிக்காய் 2 அல்லது 3
தக்காளி-1
வெங்காயம்-1
உப்பு-1 தேக்கரண்டி
மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி
புளி கரைத்த சாறு-2 மேஜைக்கரண்டி (சிறி எலுமிச்சை அளவு புளி எடுத்து கரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும்)
சாம்பார் மிளகாய் போடி-2 தேக்கரண்டி
(மசாலா அரைத்தும் செய்யலாம் குழம்பு அதிக கனிசமான அளவு கிடைக்கும்-குறிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது)
தாளிக்க:
எண்ணெய் -1 மேஜைக்கரண்டி சோம்பு-1/2
சீரகம்-1/4
கறிவேப்பிலை, தட்டிய பூண்டு பூண்டு- 3 பல், கடைசியாக சேர்க்கவும்
செய்முறை:
தட்டை பயறு வாணலியில் சிறிது வெதுப்பி (வறுத்து) பின் சிறிது மலர வேகவைத்துக்கொள்ளவும். (3/4 பதம் வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்)
வெந்ததும், உப்பு, கரைத்த புளி, மஞ்சள் தூள், மசாலா போடி சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
3 நிமிடம் கொதித்ததும் தாளிதம் செய்யவும், வெங்காயம், கறிவேப்பிலை, வெட்டிய கத்தரிக்காய், தக்காளி, சேர்த்து வதக்கவும்.
தாளித்து, குழம்பை சேர்த்து 3-5 நிமிடம் இளந்தீயில் கொதிக்க விடவும் நன்கு கொதித்து காய் வெந்ததும் தட்டிய பூண்டு சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.
குறிப்பு:
அரைக்க-சோம்பு-1/4 தேக்கரண்டி
சீரகம் -1/4 தேக்கரண்டி, மிளகாய்-5
மல்லி விதை -1 மேஜைக்கரண்டி
தேங்காய் -1 மேஜைக்கரண்டி
சிறு துண்டு இஞ்சி
நல்ல விழுதாக அரைத்து வெந்த பயறு சேர்த்து கொதிக்க விடவும்.
தட்டை பயறு குழம்பு ரெடி.
முட்டைக்குழம்பு
முட்டைக்குழம்பு, பார்க்கும்போதே பசியைத்தூண்டும் அவித்தமுட்டை காரக்குழம்பு. பெரும்பாலும் முட்டையை விரும்பி உண்ணுபவர்கள் அதிகம் சிலருக்கு அவித்தமுட்டை, சிலருக்கு பொரித்த முட்டை இன்னும் சிலர் தோசை வகையில் விருப்பாம் காட்டுவார்கள். இந்த முட்டைக்குழம்பு சுவையும் மனமும் நிறைந்த ஒன்று, அவித்தமுட்டையோடு, குழம்பு கொதிக்கும் பொது ஒரு முட்டையை உடைத்து நடுவில் ஊற்றி கொதிக்கவைத்து செய்வது இன்னும் சுவையைக் கூட்டும். இதன் முறை விளக்கம் காண்போம்.
முட்டை க்குழம்பு
முட்டை க்குழம்பு
தேவையான பொருட்கள்:
முட்டை-4(3+1)
வெங்காயம்-1
பூண்டு 7 பல்
தக்காளி-1
உப்பு-1 தேக்கரண்டி
மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி
சாம்பார் மிளகாய்த்தூள்-2 1/2 தேக்கரண்டி, அல்லது மிளகாய்த்தூள்-1 மல்லித்தூள் 1 என்னும் விகித்தில் எடுத்துக்கொள்ளவும்.
புளிச்சாரு -2 மேஜைக்கரண்டி
செய்முறை:
1.முட்டை 3 அவித்துக்கொள்ளவும்.அவித்த முட்டையின் மேல் சிறிய கீறல்கள் போடவும் இதனால் குழம்பு உள்ளே சென்று முட்டயின் சுவயைக்கூட்டும். ஒரு முட்டையை குழம்பு கொதிக்கும்போது ஊற்றவேண்டும்.
2.வெங்காயம், தக்காளி, பூண்டு இவற்றை நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
3.வானலியில் எண்ணெய் காயவைத்து சோம்பு, சீரகம், வெந்தயம் தாளிக்கவும்.
4.பிறகு, வெங்காயம் பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும், வதங்கியதும் தக்காளி சிறிது உப்பு சேர்த்து, தோல் விட்டு வரும் வரை வதக்கவும்.
5.இப்போது, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு மற்றும் புளிகரைச்சல் சேர்க்கவும்.
6.இரண்டு கோப்பை தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் வரைகொதிக்கவிடவும்.
முட்டை க்குழம்பு
7.நன்கு கொதிக்கும் பொது தீயை சிம்மில் வைத்து உடைத்த முட்டயை நிதானமாக நடுவில் ஊற்றவும். 8.இரண்டு நிமிடம் இளந்தீயில் கொத்திதபின் தீயை கூட்டவும், நன்கு கொதிவரும்போது அவித்த முட்டையை சேர்த்து இன்னும் 3 நிமிடம் வரை கொதிக்க விடவும்.
9. சுவையான முட்டை குழம்பு தயார்.
குறிப்பு:
மிதமான தீயில் சமைத்தால் எண்ணெய் மேலே மிதந்து வரும்.
உடைத்தமுட்டை ஊற்றும் பொது கண்டிப்பாக தீயை குறைக்கவேண்டும் இல்லாவிட்டால் முட்டை பிரிந்துவிடும்.
ஊற்றிய முட்டை வேகும்வரை கரண்டி போட்டு கிளறக்கூடாது.(3 நிமிடம் )
சாம்பார் மிளகாய்த்தூள்
தென் இந்தியாவில் புகழ் பெற்றது சாம்பார், பாரம்பரிய உணவான இந்த சாம்பார் அன்றாட உணவில் முக்கிய இடம்வகிக்கிறது. சாம்பாரின் சுவை ரகசியம் சாம்பார் பொடி, இந்த சாம்பார் பொடி கூடுதல் சுவையும், மனமும் அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. தேர்தெடுக்கப்பட்ட மசாலா பொருட்களை குறிப்பான விகிதத்தில் கலந்து பக்குவமாய் வறுத்து அரைப்பதே இந்த செட்டிநாடு சாம்பார் மசாலாவின் தனிச்சிறப்பு. கடைகளில் கூடுதல் விலைக்கு வாங்கும் சாம்பார் பொடியை விட பல மடங்கு பயனளிக்கக்கூடியது, கணிசமும் அதிகம். இதை ஆறு மாதம் வரை காற்று புகாத கொள்கலனில் அடைத்து வைத்து பயன்படுத்தலாம். இது சாம்பார், காரக்குழம்பு கூட்டு, மசாலா வகை, பொரியல்,பச்சடி,மற்றும் சைவம், அசைவம் இரண்டுக்கும் ஏற்றது.
சாம்பார் மிளகாய்த்தூள்
தேவையான பொருட்கள்:
சிவப்பு மிளகாய் – 1 கிலோ
மல்லி – 1 கிலோ
சோம்பு -200 கிராம்
சீரகம் – 200 கிராம்
வெந்தயம்- 100 கிராம்
பெருங்காயம் – 50 கிராம்
மஞ்சள் -50 கிராம்
மிளகு – 50 கிராம்
கடலை பருப்பு-100 கிராம்
துவரம் பருப்பு- 50 கிராம்
பச்சரிசி – 50 கிராம்.Untitled
செய்முறை :
ஒவ்வொன்றையும் தனித்தனியாக வாணலியில் எண்ணெய் சேர்க்காமல் வறுக்கவும்.
பொன்னிறமாக வறுத்தபின் அதை ஒன்று கலந்து ஆறவிடவும்.
ஆறியபின் மில்லில் கொடுத்து நைசாக அரைக்கவும்
பிறகு அரைத்த் பொடியை மறுபடியும் ஆற விடவும்.
செட்டிநாட்டு சாம்பார் மசாலா பொடி தயார்.
குறிப்பு:
காரம் குறைவாக பயன்படுத்துபவர்கள் மல்லியை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.
(சமமாக அளந்து வறுக்கவும் 1கிலோ மிளகாய்,1 கிலோ மல்லி )
வெண்டைக்காய் மோர் குழம்பு
குழம்பு வகைகளில் தனிச்சுவை பெற்றது இந்த மோர் குழம்பு வகை.
அளவான புளிப்பு, காரம் செரிமான சக்தியை த்தூண்டும் இஞ்சி, மிளகு,சீரகம் போன்ற மருத்துவ குணம் நிறைந்த பொருட்களுடன் செயப்படும் இந்த மோர்குழம்பு சுவையும் மணமும் நிறைந்தது. செய்முறை எளிதானது, உட்பொருளும் குறைவு.தென்னிந்திய விருந்துகளில் இது முக்கியமாக இடம் பெரும்.
மோர் குழம்பு, நம் விருப்பத்திற்கு ஏற்ப பரங்கிக்காய், பூசனிக்காய், சேப்பங்கிழங்கு போன்ற காய்களை வைத்தும் செய்யலாம்.
வெண்டைக்காய் மோர் குழம்பு
தேவையான பொருட்கள்: 4 அல்லது 5 பேருக்கு பரிமாறலாம்.
தயிர் -3/4 கோப்பை அல்லது 150 மில்லி
உப்பு-1 தே.க
மஞ்சள்த்தூள்-1/4 தே.க
தக்காளி-1/2
வெண்டைக்காய்-5
அரைக்கத்தேவயான பொருட்கள்:
துவரம் பருப்பு-1 தே.க
பச்சரிசி-1 தே.க
இஞ்சி-1 அங்குலம் பச்சைமிளகாய்-3
சீரகம்-1/2 தே.க
மிளகு-1/2 தே.க
தேங்காய்-1 1/2 மேஜைக்கரண்டி துருவியது அல்லது 3 கீற்று
12308931_990551800986430_1763690643_n
தாளிக்க:
எண்ணெய் -1தே.க
கடுகு-1/2தே.க
வரமிளகாய்-1
சீரகம்-1/4 தே.க
செய்முறை:
அரிசி, பருப்பை 20 நிமிடம் ஊறவைத்து, அரைக்கும் பொருட்களுடன் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
தயிரை சம அளவு நீர் சேர்த்து மோராக்கிக்கொள்ளவும்.
வெண்டைக்காய் தக்காளியை சிறிய துண்டுகளாக வெட்டிவைத்துக்கொள்ளவும்.
வாணலியில் 3 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி வெண்டைக்காயை வதக்க வேண்டும்.
நன்கு வதங்கி வரும் பொது தக்காளி, உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும், தக்காளி தோல்விட்டு வரும் போது அரைத்த கலவையில் சிறிது நீர் கலந்து வதக்கிய காயுடன் சேர்த்துக் கிளறவும்
கொதித்து வரும் சமயம் கலந்த மோரை சேர்க்கவும், ஒன்றாக கொதி நிலையை அடைந்த பொது அடுப்பிலிருந்து இறக்கவும். அதிகம் கொதிக்கக்கூடது கவனமாக செய்ய வேண்டும்.
இப்போது கடுகு, வரமிளகாய் கறிவேப்பிலை தாளித்து பரிமாறவும்.
மோர் குழம்பு தயார்.
சோயா குழம்பு:
சிறந்த கால்சியம் சத்து நிறைந்த சோயா அல்லது மீல் மேக்கரில், மசாலா பொடிமாஸ், பிரயாணி என பலவகை செய்வதுண்டு.இந்த குழம்பு வகை ஒரு நல்ல சுவை நிறைந்தது, பொது வாக இந்த சோயாவில் நாம் சேர்க்கும் உப்பு, காரம் போன்ற பதார்த்தங்களளை ஈர்க்கும் தன்மை குறைவு, அனால் இந்த குழம்பு வகையில் நன்றாக சார்ந்து சுவைகூட்டும் வண்ணம் அமைவது சிறப்பு. சைவர்கள் விரும்பி ஏற்பது இந்த சோயா செய்முறை.
தேவையான பொருட்கள்:
சோயா -1 கோப்பை
இஞ்சி பூண்டு விழுது-1தே.க
தக்காளி-1
மிளகாய்த்தூள்-1 1/2
மஞ்சள் தூள்-1/4 தே.க
வெங்காயம்-1
மல்லித்தழை -சிறிது
அரைக்க:
சோம்பு-1தே.க
சீரகம் 1/2தே.க
பாதாம்-4
தேங்காய்-2 மேஜைக்கரண்டி
மிளகு-1/2தே.க
எண்ணெய் -1 மேஜைக்கரண்டி
பட்டை-1இன்ச்
கிராம்பு-1 2
லவங்க இலை
கறிவேப்பிலை-1 கொத்து
செய்முறை:
சோயாவை 20 நிமிடம் வரை வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து இரண்டு துண்டுகளாக வெட்டிவைத்துக்கொள்ளவும்.
தக்காளி, வெங்காயம் நறுக்கிக்கொள்ளவும்.
அரைக்க பொருட்களை அரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் காயவைத்து தாளிதம் செய்யாவும்.
கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
வெங்காயம், தக்காளி, சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்னர் வெட்டி வைத்துள்ள சோயாவை சேர்த்து சிறிது வதக்கி, உப்பு மிளகாய்ப்பொடி, மஞ்சள் போடி, அரைத்த விழுதையும் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
ஆறியதும் மல்லி இல்லை சேர்த்து பரிமாறவும்.
இது சாதம், சப்பாத்தி, பூரிக்கு கூட பரிமாறலாம்.பிரியாணிக்கு சால்னா போன்றும் சேர்த்துக்கொள்ளவும்.
மொச்சை கத்திரிக்காய் குழம்பு:
மொச்சை கத்திரிக்காய் குழம்பு, பாரம்பரிய சமையல் முறையில் நம் முன்னோர் கற்றுத்தந்த ஒரு நல்ல ருசியான கலவை. மொசைக்கு குறிப்பான ஒரு நல்ல சுவையுண்டு. புரதச்சத்து, கால்சியம், அமினோ அமிலம் போன்ற சத்துக்கள் நிறைந்தது மற்றும் நோய் எதிர்ப்புத்தன்மை கொண்டது.
இந்த மொச்சை கத்திரிக்காய் குழம்பு சூடான சாதம், இட்லி, தோசை மற்றும் கொழுக்கட்டைக்கு நல்ல பொருத்தமானது.
மொச்சை கத்திரிக்காய் குழம்பு
மொச்சை கத்திரிக்காய் குழம்பு
தேவையான பொருட்கள்:
மொச்சை-1/2 கோப்பை கத்திரிக்காய் பிஞ்சாக-5
பூண்டு-7 பல்
சின்ன வெங்காயம்- 9
கறிவேப்பிலை-1 கொத்து
தக்காளி-1
உப்பு-1 1/2 தே.க
மஞ்சள் தூள்-1/4
புளிச்சாறு -2 மேஜைக்கரண்டி
சாம்பார் மிளகாய்ப்பொடி-2 1/2 தேக்கரண்டி
அல்லது
தனி மிளகாய்த்தூள் -1 1/2, மல்லித்தூள்-1 தேக்கரண்டி
தளிக்க :
எண்ணெய் -1 1/2 மேஜைக்கரண்டி
சோம்பு-1 தே.க
சீரகம்-1/2 தே.க
வெந்தயம்-1/4 தே.க
செய்முறை:
மொச்சையை 6 மணிநேரம் ஊறவைக்கவும். குக்கரில் 2 விசில் வேக வைத்துக்கொள்ளவேண்டும்.
கத்திரிக்காயை நான்காக வெட்டிக்கொள்ளவும்.
வெங்காயம் பூண்டு தோலுரித்து நறுக்கிக்கொள்ளவும். தக்காளியை சிறிதாக வெட்டிக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் காய வைத்து தாளிதம் செய்யவும்.
கறிவேப்பிலை,வெங்காயம் பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும், பின்னர் வெட்டிய கத்திரிக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.
கத்திரிக்காய் நிறம் மாறி வதங்கி வரும் பொது தக்காளி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
பின்னர் புளிச்சாறு , மிளகாய்த்தூள் மற்றும் 2 கோப்பை தண்ணீர் செர்த்துக்கொதிக்கவிடவும். கத்திரிக்காய் வெந்ததும் வேகவைத்த மொச்சை சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
குழம்பு கெட்டியானதும் சூடான சாதத்துடன் பரிமாற மொச்சை கத்திரிக்காய் குழம்பு ரெடி.
மொச்சை ஊறியதும், மறுநாள் காலை தோலுரித்தும் பயன்படுத்தலாம்.
ஆள்காட்டி விரல் ,கட்டை விரல் கொண்டு லேசாக அழுத்தினால் தோல் அகன்றுவிடும்.
சிறு துண்டு இஞ்சி பொடியாக நறுக்கி தளிக்கும் பொது சேர்க்கலாம்.
இஞ்சியின் மருத்துவ குணம் கணக்கில் அடங்காதது, இஞ்சியை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள பெரும்பாலான நோய்கள் குறைந்துவிடும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பசியைய்த்தூண்டும், ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
பூண்டு இஞ்சி குழம்பு :
அதிக மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த பூண்டு, இஞ்சியை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது சிறப்பு என்பது அறிந்திருந்தும் அதை எப்படி சேர்ப்பது என்ப ஒரு கேள்வியாகவே இருந்து வருகிறது ஒரு சில பதார்த்தங்களில் மிகவும் குறைவான அளவே உட்கொள்ள முடிகிறது என்பது அடுத்த குழப்பம், இப்படியாக உணவில் இதை எப்படி கலந்துசுவையாக சமைத்து சாப்பிடுவது என்பது பற்றி ஒரு சிறு சமையல் விளக்கத்துடன் இங்கு பரிமாற உள்ளோம்.
இஞ்சி காரம் மற்றும் பூண்டு வாடை அதிகமான ஆகையால் அதை நாம் உணவில் குறைவாகவே பயன்படுத்துகிறோம். இந்த குழம்பு செய்து வைத்துக்கொண்டால் ஒரு வாரம் வரை வைத்து சாப்பிடலாம். சூடு சாதத்தில் சேர்த்த்தோ! அல்லது கெட்டியாக சுண்ட வைத்து தயிர் சாதத்திற்கு உடன் சேர்த்தோ சாப்பிடலாம். அருமையான சுவை சொன்னாலோ பார்த்தாலோ தெரியாது சுவைத்துப்பாருங்கள். இதோ ரெசிப்பி
இஞ்சியின் முக்கியத்துவம் பற்றி சில தகவல்கள் இங்கே உங்களுக்காக:
இஞ்சி, தூள், உலர்ந்த சுக்கு, எண்ணெய் அல்லது சாறு போன்ற வகையில் பயன்படுத்தலாம்.
சில நேரங்களில் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் ஒப்பனையிலும் சேர்க்கப்படுகிறது.
இது சமையலில் ஒரு பொதுவான பொருளாக உள்ளது.குமட்டலைக்குறைக்க மற்றும் காய்ச்சல், ஜலதோஷம் தசை வலியையும் குறை உதவும் ஒரு அருமையான கை வைத்தியம்.
இஞ்சி குறைந்த இரத்த சர்க்கரை மற்றும் இதய நோய் ஆபத்து காரணிகலில் இருந்து விடுபட உதவும்.
இஞ்சி ட்ரீட் நாள்பட்ட அஜீரணத்துக்கு உதவலாம்.
இஞ்சி தூள் குறிப்பிடத்தக்க வகையில் மாதவிடாய் வலியைக் குறைக்கும்
இஞ்சி உட்கொள்ளுவதால் கொழுப்பு நிலைகலை பெருமளவில் குறைக்கும்.
இஞ்சி புற்றுநோய் தடுக்க உதவும் என்று ஒரு பொருள் கொண்டுள்ளது. இஞ்சி மூளை செயல்பாட்டை மேம்படுத்த மற்றும் அல்சர் நோய் எதிராக பாதுகாக்க உதவும்.
தேவையான பொருட்கள்:
இஞ்சி -3 அங்குலம் அல்லது 50 கிராம்
பூண்டு – 25 கிராம் அல்லது 10பல்
சோம்பு-1/2 தே .க
சீரகம்- 1/2தே.க
புளி – சிறிய நெல்லிக்கனி அளவு
உப்பு-1 தே .க
மிளகாய்த்தூள்-1 1/2 தே.க தக்காளி-1
துருவிய தேங்காய்-1 மேஜைக்கரண்டி
வெல்லம் -1 1/2 தே .க
தளிக்க:
வெங்காயம் நறுக்கியது – 1
எண்ணெய் -1 மேஜைக்கரண்டி கடுகு-1 தே .க
கறிவேப்பிலை-2 கொத்து
செய்முறை:
1.இஞ்சி, பூண்டு தோல் உரித்து, மேல் கூறிய அனைத்தையும் (வெல்லம் தவிர) ஒன்றாக நல்ல விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
2. வாணலியில் எண்ணெய் காய வைத்து தாளிதம்செய் து வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து மணம் வரும் வரை வதக்கவும்.
பின்னர் அரைத்த விழுதை சேர்த்து நன்கு பச்சைவாடை மாறும் வரை வதக்கவும்.
1 1/2 கோப்பை நீர் சேர்த்து எண்ணெய் மேலே வரும் வரை, 5 நிமிடம் இளந்தீயில் கொதிக்கவிடவும் வெல்லம் சேர்த்துகலக்கவும்.
இஞ்சி குழம்பு ரெடி. சூடான சதம் மற்றும் இட்லி தோசைக்கு பயன் படுத்தலாம்.
இஞ்சி, பூண்டு லேசாக வதக்கியும் அரைக்கலாம்.
சிறிய வெங்காயம் சேர்த்தல் இன்னும் சுவையைக்கூட்டும். பொடியாக நறுக்கிய இஞ்சியை தளிக்கும் பொது சிறிது சேர்க்கலாம்.
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு:
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு எல்லோராலும் விரும்பி ஏற்கக்கூடியது. கத்திரிக்காய் எண்ணெய்யில் நன்கு வேகும் வரை வதக்கி, புளிச்சருடன் சேர்த்து மசாலா கலவையில் கொதிக்க வைத்து எண்ணெய் அழகாய் மேலே மிதக்கும் போது எண்ணெய் கத்திரிக்காய் குழம்புபின் மணமும் சுவையும் நம்மை பசியில் ஏங்க வைக்கும். காரக்குழம்பு அல்லது புளி குழம்பின் பிரதானம் இந்த எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு, அதிலுள்ள காயும் சரி, குழம்பும் சரி அற்புதமான சுவையுடையது.
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு
செய்யத்தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய் -1/4 கிலோ (பிஞ்சாக)
சின்ன வெங்காய -10
பூண்டு – 5
தக்காளி-1 பெரியது
புளி -எலுமிச்சம்பழம் அளவு -1 கரைத்து சாறு எடுத்துக்கொள்ளவும்.
உப்பு- 1 தே .க
மஞ்சள் தூள்-1/4 தே .க
மசாலாமிளகாய்த்தூள் -2 1/2 அல்லது
மிளகாய்த்தூள்-1 +மல்லித்தூள்-1 1/2 தே .க
தளிக்க:
எண்ணெய் -2 மேஜைக்கரண்டி
சோம்பு-1/2 தே .க
சீரகம்-1/4 தே .க
வெந்தயம்-1/4தே .க
கறிவேப்பிலை-1 கொத்து
செய்முறை:
1. கத்திரிக்காயை பாதியாக வெட்டி , மேலே இரண்டு கீறல் செய்து நீரில் போட்டு வைக்கவும்.
2. வெங்காயம், பூண்டு தோல் உரித்து, நீள வாக்கீல் நறுக்கிக்கொள்ளவும்.
3. தக்காளியையும் அதே போல் நறுக்கிக்கொள்ளவும்.
4. அடி கனமான பாத்திரத்தைக்காயவைத்து தாளிதம் செய்யவும்.
உடன் நறுக்கிய கத்திரிக்காய், வெங்காயம், பூண்டு சேர்த்து மிதமான தீயில் 5 முதல் 8 நிமிடம் வரை வதக்கவும்.
5. தோல் சுருங்கி, நிறம் மாறி வரும் சமயம் கறிவேப்பிலை, தக்காளியை சேர்த்து வதக்கவும்.
6. இப்போது கரைத்த புளிச்சாரு, உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்த்தூள் தண்ணீர் 2 கோப்பை சேர்த்து கொதிக்கவிடவும். கத்திரிக்காய் வெந்து,குழம்பு கெட்டியாகி, எண்ணெய் மேலே மிதந்து வரும் .
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு ரெடி
7. சூடான சாதத்தோடு பரிமாறவும்.
சைவ மீன் குழம்பு / வாழைப்பூ மீன் குழம்பு
மீன் குழம்பின் அரிய சுவையை அனைவரும் உண்டு மகிழ அதே செய்முறையை வாழைப்பூ கொண்டு சமைக்கலாம் . வாழைப்பூ அற்புதமான மருத்துவ குணம் கொண்டது. முக்கியமாக இரும்புச்சத்து, நார்ச்சத்து அதிகம் நிறைந்தது என்பதால் பெண்களுக்கு மாத விளக்கு சமயத்திலும் கர்ப்ப காலத்திலும் இது மிகச் சிறந்த உணவாக உட்கொள்ளுதல் நலம் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்.
வாழைப்பூ தொவட்டல், வாழைப்பூ கூட்டு, போரியல் வடை என பல வகையுண்டு.
இங்கு வித்தியாசமான வாழைப்பூ மீன் குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம். இதற்கு வாழைப்பூவின் உட்பகுதி பூக்களே மிகவும் சிறந்தது , ஒவ்வொரு பூவின் உள்ளும் இருக்கும் நரம்புகளை (பிளாஸ்டிக் போன்ற) அகற்றி, மோர் கலந்த நீரில் போட்டு வைத்துக்கொள்ளவும் நிறம் மாறாமல் இருக்கும்.தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
செய்யத்தேவையான பொருட்கள் :
வாழைப்பூ-1 கோப்பை
சின்ன வெங்காயம்-9 சிறிதாக வெட்டிக்கொள்ளவும்
பூண்டு-7 பல் வெட்டிக்கொள்ளவும்
பச்சை மிளகாய் -2
கறிவேப்பிலை-1 கொத்து
தக்காளி-1 சிறிதாக வெட்டிக்கொள்ளவும்
உப்பு-1 தே க
மிளகாய்த்தூள் -2 தே க (சாம்பார் மசாலாத்தூள் )
புளி கரைத்தது 1/4 கோப்பை (1 எலுமிச்சை அளவு )
மஞ்சள் த்தூள் -1/4தே க
தாளிக்க :
எண்ணெய் -2 மே .க
சோம்பு-1/4 தே க
வெந்தயம்-சீரகம்-1/4 தே க
அரைக்கத்தேவயான பொருட்கள்:
வெங்காயம்-1
தக்காளி-1
சோம்பு-1
சீரகம்-1/2
இவற்றை விழுதாக அறித்துக்கொள்ளவும். இவற்றை லேசாக வதக்கியும் அரைக்கலாம்
செய்முறை:
கடாயில் எண்ணெய் காய வைத்து “தளிக்க” பொருட்களைத் தாளித்துக்கொள்ளவும்.
வெட்டிய வெங்காயம், பச்சைமிளகாய், வாழைப்பூ, கறிவேப்பிலை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். பின்னர் தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.
மிளகாய்ப்பொடி, மஞ்சள்பொடி, புளித்தண்ணீர், தண்ணீர் 2 கோப்பைசேர்த்து 3 நிமிடம் வரை கொதிக்கவிடவும்.
அரைத்த விழுதை சேர்த்து நன்கு கொக்கவிடவும்.
சைவ மீன் குழம்பு ரெடி .
மிளகு குழம்பு :
காரசார மான மிளகு குழம்பு மனமும், சுவையும் நிறைந்தது, இந்த மிளகு குழம்பு ஜீரன சக்தி, வாயுதொல்லை, சளி, இருமல் போன்றவற்றை எளிதில் குணப்படுத்தும் மருந்தாகப்பயன்படுகிறது மேலும், கருப்பு மிளகின் மூலம் செரிமானம் மேம்படுத்தப்படுகிறது, ஒரு வழியில் சுவை மொட்டுகளை தூண்டி ஹைட்ரோகுளோரிக் அமிலம் வயிற்றில் புரதம் மற்றும் இதர உணவு பொருட்களை செரிமானம் செய்யத்தூண்டுகிறது. இதில் மற்றொரு வழி – உங்கள் உடல் பல நன்மைகளை ஈர்க்க கருப்பு மிளகு உதவி செய்கிறது , மிளகின் மெளிதான வெளி அடுக்கு கொழுப்பை எரிக்கும் ஆற்றல் உள்ளது தேவையில்லாத கொழுப்பு செல்களை முறிக்கத் தூண்டுகிறது. கறிவேப்பிலையின் நற்குணமும் சேர்ந்து உடலுக்கு நன்மை பயக்கும். நல்ல பசியைத்தூண்டும். சுடு சாதத்துடன் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும்.
மிளகு குழம்பு / Milagu kulambu
மிளகு குழம்பு / Milagu kulambu
செய்யத்தேவையான பொருட்கள்:
மிளகு – 2 தேக்கரண்டி
தேங்காய்- 1 மேஜைக்கரண்டி
கடலைப்பருப்பு -1மேஜைக்கரண்டி
மல்லி -1 மேஜைக்கரண்டி
உளுந்து- 1 மேஜைக்கரண்டி
கறிவேப்பிலை-1 கைப்பிடி அளவு
உப்பு -1 1/2
சிவப்பு மிளகாய் 3
சீரகம் -1தேக்கரண்டி
புளி-1 சிறய எலுமிச்சம்பழம் அளவு
செய்முறை
1.வாணலியைக் காயவைத்து, 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு மேல் குறிப்பிட்டுள்ள அனைத்தையும்மிதமான தீயில் வறுத்துக்கொள்ளவும்.(பொன்னிறமாக) எடுத்து ஒரு தட்டில் வைத்துக்கொள்ளவும்.
2. ஆறியதும் உப்பு, புளி, சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
3. அதே வாணலியில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து அரைத்த கலவையைச்சேர்க்கவும், இளந்தீயில் கொதிக்க விடவும் 3 நிமிடம் வரை கொதித்ததும், வெல்லம்- 1 தேக்கரண்டி சேர்த்து இறக்கவும் மிளகு குழம்பு தயார்.
4.பத்து நாட்களுக்கு ஒரு முறையாவது மிளகுக்குழம்பு உட்கொள்ள உடல் ஆரோகியம் பெரும்
அடித்த முட்டைக்குழம்பு:
நாம் சாதாரணமாக செய்யும் முட்டைக்குழம்பு முழு முட்டையை அவித்து, காரக்குழம்பு செய்வது போல் அல்லாமல், இது அடித்தமுட்டையில், பொடியாக வெட்டிய வெங்காயம் சேர்த்து வேகவைத்து, சதுரமாக வெட்டி குழம்பில் சேர்க்கிறோம். இதனால் முட்டையின் வாடை குறைந்து குழம்பை நன்கு உறுஞ்சி அந்த முட்டை உண்ணும் பொழுது சுவை அதிகரித்துள்ளதை உணரலாம்.
அடித்த முட்டைக்குழம்பு:
அடித்த முட்டைக்குழம்பு
தேவையான பொருட்கள் -1 :
முட்டை-3
வெங்காயம்-1
குடைமிளகாய் -1 தேவைப்பட்டால்
மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி
உப்பு-1/4 தேக்கரண்டி
மிளகுத்தூள் -1/4 தேக்கரண்டி
தேவையான பொருட்கள் -2
சின்ன வெங்காயம் -9
பூண்டு-7
தக்காளி-1 பெரியது
கறிவேப்பிலை,
புளிச்சாறு-2 மேஜைக்கரண்டி
மிளகாய்த்தூள் (சாம்பார் மிளகைய்த்தூள் ) -2 1/2 தேக்கரண்டி
மஞ்சள்த்தூள்-1/4 தேக்கரண்டி
உப்பு-1 தேக்கரண்டி
தளிக்க:
எண்ணெய் -5 தேக்கரண்டி
சோம்பு-1/2 தேக்கரண்டி
சீரகம் 1/2 தேக்கரண்டி
வெந்தயம் 1/4 தேக்கரண்டி
செய்முறை:
1. ஒரு பத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றிக்கொள்ளவும், பொடியாக வெட்டியா வெங்காயம் , குடைமிளகாய், உப்பு, மஞ்சள் தூள் மிளகுத்தூள் சேர்த்து நன்கு அடித்துக்கொள்ளவும் .தேவைப்பட்டால் முட்டை அடிக்கும் போது 1 தேக்கரண்டி கடலை மாவு சேர்த்துக்கொள்ளலாம்.
2. அகலமான ஒரு பானில் எண்ணெய் தடவி அடித்த முட்டைக்கலவையை ஊற்றவும்.
3. இட்லி பத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து, ஆவியில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
4. ஆறியதும் சதுரமாக வெட்டிவைதுக்கொள்ளவும்.
dsc08040 (1)
5. மற்றொரு கடாயில் எண்ணெய் காய வைத்து தாளிதம் சேர்த்து தாளித்துக்கொள்ளவும்.
6. வெட்டிய வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும் பொன்னிறமாகவதக்கவும்.
7. மிளகாய்ப்பொடி, மஞ்சள்தூள் உப்பு,கரைத்த புளிச்சாறு சேர்க்கவும், 1 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்துக்கொதிக்க விடவும்,
8. 5 நிமிடம் கொதித்த பின்னர் வேகவைத்து வெட்டிய முட்டையை சேர்த்து இன்னும் 3 நிமிடம் கொதிக்க விடவும்.
குறிப்பு: தேவைப்பட்டால் முட்டை அடிக்கும் போது 1 தேக்கரண்டி கடலை மாவு சேர்த்துக்கொள்ளலாம்.
குழி பணியாரக்கல்லில் கூட அடித்த முட்டையை ஊற்றி எடுத்து குழம்பில் சேர்க்கலாம்.



