இனிப்பு சாப்பிட்டால் மட்டுமே சர்க்கரை அளவு உயரும் என்பது தவறான நம்பிக்கை. இனிப்பு சாப்பிடாவிட்டாலும் மன அழுத்தம், தூக்கமின்மை, உடற்பயிற்சி இல்லாமை போன்ற காரணங்களால் ரத்தத்தில் சர்க்கரை அளவு உயர செய்யலாம். 7 முக்கிய காரணங்களை இங்கு அறிந்துகொள்ளலாம்.
பொதுவாக, சாக்லேட், இனிப்பு, கேக், குளிர்பானம் போன்றவற்றை சாப்பிட்டால்தான் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், அது முழுமையாக உண்மையல்ல. இனிப்பு சாப்பிடாதவர்களுக்கும் ரத்த சர்க்கரை அதிகரிக்கலாம். இதற்கு காரணம், ரத்த சர்க்கரை அளவை உணவு மட்டுமல்ல; இன்சுலின் செயல்பாடு, கல்லீரல், மன அழுத்தம், தூக்கம், உடல் இயக்கம் உள்ளிட்ட பல காரணிகளும் பாதிக்கின்றன.
ரத்த சர்க்கரை இனிப்பால் மட்டும் அதிகரிக்காது!
இன்சுலின் என்பது ரத்த ஓட்டத்தில் உள்ள குளுக்கோஸை உடலின் செல்களுக்குள் கொண்டு செல்ல உதவும் ஒரு ஹார்மோன் ஆகும். ஆனால் இன்சுலின் எதிர்ப்பு ஏற்பட்டால், செல்கள் இன்சுலினுக்கு சரியாகப் பதிலளிப்பதை நிறுத்துகின்றன. இதன் விளைவாக ரத்தத்தில் சர்க்கரை அளவு படிப்படியாக அதிகரிக்கிறது.
இன்சுலின் எதிர்ப்பு ஏற்படுவதற்கு அதிக உடல் எடை, உடல் உழைப்பு இல்லாமை, தூங்காமல் இருப்பது, மன அழுத்தத்தில் இருப்பது மற்றும் மரபணு என பல காரணங்கள் உள்ளன.
இன்சுலின் எதிர்ப்பு
இன்சுலின் என்பது ரத்த ஓட்டத்தில் உள்ள குளுக்கோஸை உடலின் செல்களுக்குள் கொண்டு செல்ல உதவும் ஒரு ஹார்மோன் ஆகும். ஆனால் இன்சுலின் எதிர்ப்பு ஏற்பட்டால், செல்கள் இன்சுலினுக்கு சரியாகப் பதிலளிப்பதை நிறுத்துகின்றன. இதன் விளைவாக ரத்தத்தில் சர்க்கரை அளவு படிப்படியாக அதிகரிக்கிறது.
இன்சுலின் எதிர்ப்பு ஏற்படுவதற்கு அதிக உடல் எடை, உடல் உழைப்பு இல்லாமை, தூங்காமல் இருப்பது, மன அழுத்தத்தில் இருப்பது மற்றும் மரபணு என பல காரணங்கள் உள்ளன.
கல்லீரல் அதிகப்படியான குளுக்கோஸை வெளியிடுதல்
நாம் சாப்பிடாத நேரங்களிலும் உடலுக்கு சக்தி தேவைப்படுகிறது. அதற்காக கல்லீரல் குளுக்கோஸை உற்பத்தி செய்து அல்லது சேமித்து வைத்திருப்பதை வெளியிடுகிறது.ஆனால், நீரிழிவு அல்லது இன்சுலின் எதிர்ப்பு உள்ளவர்களில், இந்த செயல்முறையின் கட்டுப்பாடு பாதிக்கப்படலாம். இதனால் கல்லீரல் அதிக குளுக்கோஸை வெளியிடுவதால், சிலருக்கு வெறும் வயிற்றில் ரத்த சர்க்கரை அதிகமாக இருக்கலாம்.
மன அழுத்தம்
மன அழுத்தம் ஏற்பட்டால் உடலில் கார்டிசோல் மற்றும் அட்ரினலின் போன்ற ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கின்றன.இந்த ஹார்மோன்கள் கல்லீரல் குளுக்கோஸை உற்பத்தி செய்து ரத்தத்தில் வெளியிடுவதை அதிகரிக்கக்கூடும். இதனால் மன அழுத்தம் அல்லது கவலை உள்ள சமயங்களில் உணவு உண்ணாமலேயே ரத்த சர்க்கரை உயரலாம்.
தூக்கமின்மை
தொடர்ச்சியாக போதிய தூக்கம் இல்லாதது, உடலில் இன்சுலின் செயல்பாட்டை பாதித்து, ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். மேலும், தூக்கக் குறைபாடு கார்டிசோல் போன்ற மன அழுத்த ஹார்மோன்களின் அளவையும் அதிகரிக்கலாம். இதனால், சிலருக்கு ரத்த சர்க்கரை அளவு உயர வாய்ப்புள்ளது.
நோய் அல்லது தொற்று
உடலில் காய்ச்சல் அல்லது தொற்று ஏற்பட்டால், அதை எதிர்க்க நோய் எதிர்ப்பு அமைப்பு பல ஹார்மோன்களை வெளியிடுகிறது. இந்த ஹார்மோன்கள், கல்லீரல் குளுக்கோஸ் உற்பத்தியை அதிகரிக்க செய்யலாம். இதனால், காய்ச்சல், வைரஸ் தொற்று அல்லது பிற நோய்களின் போது ரத்த சர்க்கரை தற்காலிகமாக உயரலாம்.
அதிக கார்போஹைட்ரேட் உணவுகள்
வெள்ளை அரிசி, மைதா பொருட்கள், பேக்கரி பொருட்கள் மற்றும் வெள்ளை ரொட்டி சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகள் செரிமானத்திற்குப் பிறகு விரைவாக குளுக்கோஸாக மாறுவதால், ரத்த சர்க்கரை அளவு வேகமாக உயரக்கூடும்.
உடற்பயிற்சி இல்லாமை மற்றும் அதிக உடல் எடை
தசைகள் ஆற்றலுக்காக குளுக்கோஸை பயன்படுத்துகின்றன. தொடர்ச்சியான உடற்பயிற்சி இல்லாதது, தசைகள் குளுக்கோஸை பயன்படுத்தும் திறனை குறைத்து, காலப்போக்கில் ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை பாதிக்கக்கூடும். குறிப்பாக வயிற்றுப் பகுதியில் அதிக கொழுப்பு இருப்பது, இன்சுலின் எதிர்ப்புக்கு வழிவகுத்து ரத்த சர்க்கரை அளவை உயர்த்தலாம்.
ரத்த சர்க்கரையை சீராக வைத்திருக்க எளிய வழிகள்
புரதம், நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள்.
சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சர்க்கரை பானங்கள் நுகர்வை கட்டுப்படுத்துங்கள்.
தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யுங்கள்.
ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரியுங்கள்.
தினமும் 7 முதல் 9 மணி நேரம் தூங்குவது பழக்கத்தை ஏற்படுத்தவும்
யோகா, தியானம் போன்ற மன அழுத்தம் பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்
மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை தவறாமல் எடுத்துக்கொள்ளுங்கள்.
எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?
தொடர்ச்சியாக ரத்த சர்க்கரை அதிகமாக இருப்பது
அடிக்கடி தாகம் எடுப்பது
அடிக்கடி சிறுநீர் கழிப்பது
காரணமில்லாமல் உடல் எடை குறைவது
மங்கலான பார்வை
அதிக சோர்வு
காயங்கள் மெதுவாக ஆறுவது
மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக ஒரு மருத்துவ நிபுணரை அணுகி ஆலோசனை பெறுவது சிறந்தது.



