.
பொதுவாக தனக்கு பிடிக்காத ஒருவரை கொலை செய்வதற்கு ஒருவர் மற்றொரு கூலிப்படை வைப்பது பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இங்கிலாந்தில் வசித்து வந்த ஒரு பெண் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்வதற்கு அவரே பணம் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இங்கிலாந்தை சேர்ந்த 32 வயது பெண் சோனியா. இவர் ஒரு பள்ளியில் இசை ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த சில மாதங்களில் ஆன்லைன் வழியாக 53 வயது நபர் ஒருவர் பழக்கமாகியிருக்கிறார்.
அந்த நபரிடம் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிடு எனக்கூறி அவருக்கு 4,000 டாலரை சோனியா கொடுத்திருக்கிறார். அதோடு இங்கிலாந்திலிருந்து புளோரிடா சென்று அந்த நபரை சந்தித்திருக்கிறார். தற்போது சோனியாவின் உடல் போலீசாரால் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. தற்போது அந்த 53 வயது நபர் போலீசாரல் கைது செய்யப்பட்டுள்ளார்.



