சீனாவுக்கு உளவு பார்த்ததாக பிரான்ஸ் கடற்படையில் விமானியாக பணியாற்றியவரை அந்நாட்டு அதிகாரிகள் பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்திய விமானப்படை ரபேல் போர் விமானங்களை பிரான்சிடம் இருந்து வாங்கி உள்ளது. பிரான்ஸ் கடற்படையில் விமானியாக பணியாற்றிய ஹென்றி சூயட் என்பவர், ஆபரேஷன் சிந்தூரில் ரபேல் போர் விமானங்களின் திறன் குறித்து கேள்வி எழுப்பியதுடன், அதனை சீன விமானங்கள் தாக்கி அழித்துவிட்டதாக தெரிவித்து இருந்தார்.
ரபேல் போர் விமானங்கள் குறித்த இந்த தகவலை இந்தியா மற்றும் பிரான்ஸ் மறுத்து இருந்தன. இந்நிலையில், இவர், முக்கியமான தகவல்களை திரட்டி சீனாவுக்கு அளித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். பிரான்ஸ், கனடா குடியுரிமை பெற்ற இவர் 2021ம் ஆண்டு வரை கடற்படையில் விமானியாக பணியாற்றிய அவர், ரபேல் உள்ளிட்ட பல்வேறு போர் விமானங்களை இயக்கி உள்ளார்.



