கறுப்பு ஜூலை கலவரமும் எடுக்க வேண்டிய நடவடிக்கையும்

 

கறுப்பு ஜூலை இனக்கல­வரம் இடம்­பெற்று 43 வரு­டங்கள் கடந்து விட்­டன. தமிழ் மக்­களை இலக்­கு­வைத்து திட்­ட­மிட்ட வகையில் அரங்­கேற்­றப்­பட்ட இந்த இனப்­ப­டு­கொ­லை­யா­னது அன்­றைய அர­சாங்­கத்தின் பின்­ன­ணி­யி­லேயே இடம்­பெற்­றி­ருந்­தது.

யாழ்ப்­பாணம் திரு­நெல்­வேலி பகு­தியில் இடம்­பெற்ற கண்­ணி­வெடித் தாக்­கு­தலில் 13 இரா­ணு­வத்­தினர் கொல்­லப்­பட்­ட­தை­ய­டுத்து திட்­ட­மிட்ட வகையில் ஜூலை கல­வரம் அரங்­கேற்­றப்­பட்­டி­ருந்­தது. இதில் ஆயி­ரக்­க­ணக்­கான தமிழ் மக்கள் படு­கொலை செய்­யப்­பட்­ட­துடன் அவர்­க­ளது சொத்­துகளும் சூறை­யா­டப்­பட்­டி­ருந்­தன.

இந்த இனப்­ப­டு­கொ­லையின் தாக்கம் நாட்டில் இன்­று­வரை தொடர்ந்து வரு­கின்­றது. மூன்று தசாப்­த ­கால கொடூர யுத்­தத்­துக்கும் இதுவே வழி­வ­குத்­தி­ருந்­தது.

தமிழ் மக்கள் தமது அர­சியல் உரி­மை­க­ளுக்­காக இலங்கை சுதந்­தி­ரந்­தி­ர­ம­டைந்த காலத்­தி­லி­ருந்து போராடி வரு­கின்­றனர். தமிழ் மித­வாதத் தலை­வர்கள் அன்று அஹிம்சா வழியில் போராட்­டங்­களை நடத்­தி­யி­ருந்­தனர். தந்தை செல்­வ­நா­யகம் காலத்­தி­லி­ருந்து இந்த அஹிம்சைப் போராட்­டங்கள் தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வந்­தன. தெற்கின் அர­சியல் தலை­மை­க­ளுடன் கலந்­து­ரை­யா­டல்கள் மேற்­கொள்­ளப்­பட்டு பல்­வேறு ஒப்­பந்­தங்­களும் கைச்­சாத்­தி­டப்­பட்­டி­ருந்­தன.

தந்தை செல்வா காலத்தில் டட்லி – செல்வா ஒப்­பந்தம், பண்டா – செல்வா ஒப்­பந்தம் என உடன்­பா­டுகள் காணப்­பட்­டன. ஆனால், அந்த உடன்­பா­டுகள் எவையும் நிறை­வேற்­றப்­ப­டாது கிழித்­தெ­றி­யப்­பட்­ட­மையே வர­லா­றாக மாறி­யி­ருந்­தது.

அன்று தமிழ் மித­வாதத் தலை­வர்­களின் அஹிம்­சா­வழி போராட்­டங்­களை தெற்கின் அர­சியல் தலை­மைகள் கணக்கில் எடுத்­தி­ருக்­க­வில்லை. இத­னால்தான் தமிழ் இளைஞர், யுவ­திகள் ஆயுதம் ஏந்தி போராடும் நிலைமை உரு­வாக்­கப்­பட்­டது.

1980களில் போராட்­டத்­துக்­கான சூழல் உரு­வாக்­கப்­பட்­டது. 1983ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை இனக்கல­வ­ர­மா­னது தமிழ் இளை­ஞர்கள், யுவ­தி­களின் போராட்­டத்­துக்கு பெரும் உந்து சக்­தி­யாக அமைந்­தி­ருந்­தது. இத­னால்தான், மூன்று தசாப்­த­ கா­லத்­துக்கும் மேலாக நாடு பேர­ழி­வு­களை சந்­திக்கும் நிலை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.

தற்­போது யுத்தம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்டு 17 வரு­டங்கள் கடந்­துள்ள நிலையில் மீண்டும் தமிழ் மக்கள் தமது உரி­மை­க­ளுக்­காக அஹிம்­சா­ வ­ழியில் போராடும் நிலைமை தொடர்­கின்­றது.

மாறி மாறி ஆட்­சிக்கு வரு­கின்ற அர­சாங்­கங்கள் தமிழ் மக்­க­ளுக்­கான உரி­மை­களை வழங்­கு­வ­தற்கோ அவர்­க­ளது அபி­லா­ஷை­களை நிறை­வேற்­று­வ­தற்கோ தயா­ராக இல்லை. அன்று நாடு சுதந்­தி­ர­ம­டைந்­த­தி­லி­ருந்து அஹிம்­சா­வழி போராட்டம், பின்னர் ஆயுதப் போராட்டம், அதனைத் தொடர்ந்து மீண்டும் அஹிம்­சா­வழி போராட்டம் என்று தமிழ் மக்­களின் உரி­மைக்­கான போராட்­டங்கள் தொடர்ந்து வரு­கின்­றன.

இன்று கறுப்பு ஜூலை அரங்­கேற்­றப்­பட்டு 43 வரு­டங்கள் கடந்­துள்ள நிலை­யிலும் இன்­னமும் தமிழ் மக்­க­ளுக்கு அர­சியல் தீர்வு காணப்­ப­ட­வில்லை. அன்று ஆட்­சி­யி­லி­ருந்த அர­சாங்­கத்தின் பின்­ன­ணியில் கறுப்பு ஜூலை அரங்­கேற்­றப்­பட்­டதைப் போன்று 2009ஆம் ஆண்டு இறுதி யுத்­தத்தின் போது அன்­றைய ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி அர­சாங்­கத்­தினால் தமிழ் மக்கள் மீதான படு­கொலை கட்­ட­விழ்த்து விடப்­பட்­டது.

இறுதி யுத்­தத்தில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான தமிழ் மக்கள் கொன்று குவிக்­கப்­பட்­டி­ருந்­தனர். ஆயி­ரக்­க­ணக்­கானோர் காணாமல் போகச் செய்­யப்­பட்­டனர். ஆயி­ரக்­க­ணக்­கா­ன­வர்கள் படு­கா­ய­ம­டைந்­தனர். ஆயி­ரக்­க­ணக்­கானோர் அங்­க­வீ­னர்­க­ளாக்­கப்­பட்­டனர். 9ஆயிரம் சிறு­வர்கள் அநா­த­ர­வா­கினர், 90 ஆயிரம் பெண்கள் வித­வை­க­ளாக்­கப்­பட்­டனர். இவ்­வாறு திட்­ட­மிட்ட வகையில் 2009ஆம் ஆண்டும் இனப்­ப­டு­கொலை மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றது.

எமது நாட்டைப் பொறுத்­த­வ­ரையில் இன வன்­மு­றைகள் என்­பது தொடர்ச்­சி­யா­கவே இடம்­பெற்று வரு­கின்­றது. 1956ஆம் ஆண்டு, 1977ஆம் ஆண்டு, 1983 ஆம் ஆண்டு என்று இந்த இன வன்­மு­றைகள் தொடர்ந்­தி­ருந்­தன.

இதன் பின்­னரும் சிறு­பான்­மை­யின மக்கள் மீதான வன்­மு­றைகள் தொடர்­க­தை­யா­கவே மாறி­யி­ருந்­தன. முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரா­கவும் பல தட­வைகள் வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்து விடப்­பட்­டி­ருந்­தன.

தற்­போது கூட சிறு­பான்­மை­யின மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு உரிய தீர்வு காணப்­ப­டாத நிலையில் எப்­போது வேண்­டு­மா­னாலும் எது வேண்­டு­மா­னாலும் இடம்­பெ­றக்­கூ­டிய நிலைமை நாட்டில் நீடித்தே வரு­கின்­றது.

பெளத்த சிங்­கள பேரி­ன­வா­தத்தை பறை­சாற்றும் வகை­யி­லான செயற்­பா­டுகள் மாறி மாறி ஆட்­சிக்கு வரு­கின்ற அர­சாங்­கங்­க­ளினால் மேற்­கொள்­ளப்­பட்டே வரு­கின்­றன. வடக்கு, கிழக்கில் திட்­ட­மிட்ட வகையில் பெளத்த சிங்­கள பேரி­ன­வாத ஆதிக்­கத்தை நிலை­நாட்­டு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது.

தொல்­பொருள் திணைக்­களம் என்ற பெய­ரிலும் வன­வள திணைக்­களம், வன­ஜீ­வ­ரா­சிகள் திணைக்­களம் என்ற பெய­ரிலும் ஆக்­கி­ர­மிப்­புகள் தொடர்ந்து வரு­கின்­றன.

1983ஆம் ஆண்டு இடம்­பெற்ற கறுப்பு ஜூலை கல­வ­ர­மா­னது சிறு­பான்­மை­யின மக்­க­ளுக்கு இந்த நாட்டில் பாது­காப்பு இல்­லை­யென்ற செய்­தியையே சர்­வ­தே­சத்­துக்கு வழங்­கி­யி­ருந்­தது. இந்த இனக்கல­வ­ரத்­தினால் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்கள் வடக்கு, கிழக்கு பகு­தி­க­ளுக்கு இடம்­பெ­யர்ந்­தனர். இத­னை­விட கப்­பல்­கள் மூலம் தமி­ழ­கத்­துக்கு சென்­றி­ருந்­தனர்.

இவ்­வாறு நாட்டில் பாது­காப்­பற்ற தன்­மை­யையும் தமிழ் மக்­களின் இடம்­பெ­யர்­வையும் ஆரம்­பித்து வைத்த சம்­ப­வ­மா­கவே இந்த ஜூலை கல­வரம் திகழ்ந்­தி­ருந்­தது.

ஜூலை கல­வ­ரத்தில் கொழும்பு வெலிக்­கடை சிறைச்­சா­லையில் தமிழ் அர­சியல் கைதிகள் மீதும் தாக்­குதல் அரங்­கேற்­றப்­பட்­டி­ருந்­தது. அந்தத் தாக்­கு­தலில் குட்­டி­மணி, தங்­கத்­துரை, ஜெகன் உட்­பட 53 பேர் படு­கொலை செய்­யப்­பட்­டி­ருந்­தனர்.

இத்­த­கைய படு­கொ­லை­களும் தமிழ் இளைஞர், யுவ­திகள் ஆயுதப் போராட்­டத்தில் நம்­பிக்கை வைப்­ப­தற்கு மூல­கா­ர­ண­மாக திகழ்ந்­தது. இதன் கார­ண­மா­கவே தமிழ் போராட்டக் குழுக்­களில் பெரு­ம­ள­வான தமிழ் இளைஞர், யுவ­திகள் தம்மை இணைத்துக் கொண்­டி­ருந்­தனர்.

இத­னா­லேயே யுத்தம் வியா­பித்­தி­ருந்­தது. அது பேர­ழி­வு­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. இன்று இந்த நாடு பொரு­ளா­தா­ரத்தில் வங்­கு­ரோத்து நிலையை அடை­வ­தற்கும் அன்­றைய ஜூலை கல­வரம் உட்­பட்ட வன்­மு­றை­களே கார­ண­கர்த்­தாக்­க­ளாக அமைந்­தி­ருந்­தன.

அன்று சிங்­கப்­பூரை விட வளர்ச்­சி­ய­டைந்த நாடாக காணப்­பட்ட இலங்கை, இன்று தலை­கீ­ழாக மாறு­வ­தற்கும் இந்த இன வன்­மு­றை­களே பிர­தான கார­ண­மாக அமைந்­துள்­ளன.

நாடு எதிர்­கா­லத்தில் வளம்­பெற வேண்­டு­மானால் இனியும் இன­வன்­மு­றை­க­ளுக்கு இட­ம­ளிக்கக் கூடாது. அத்­துடன் இனங்­க­ளுக்­கி­டையே ஐக்­கி­யத்­தையும் நல்­லி­ணக்­கத்­தையும் ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மா­க­வுள்­ளது. இனங்­க­ளுக்­கி­டையே நல்­லி­ணக்கம் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்­டு­மானால் சிறு­பான்­மை­யின மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணப்­பட வேண்­டி­யது இன்­றி­ய­மை­யா­த­தாகும்.

இதற்­கான நட­வ­டிக்­கைகள் இனி­யா­வது எடுக்­கப்­பட வேண்டும். தற்­போது தேசிய மக்கள் சக்தி அர­சாங்கம் ஆட்சி பீடத்தில் அமர்ந்­தி­ருக்­கின்­றது. நாட்­டி­லுள்ள சகல மக்­களும் சமத்­து­வத்­துடன் வாழ வேண்டும் என்­பதே தேசிய மக்கள் சக்­தியின் கோட்­பா­டாக இருக்­கின்­றது. அது வர­வேற்­கத்­தக்க விட­ய­மாகும்.

ஆனால், இனங்­க­ளுக்­கி­டையே முரண்­பா­டு­களை தவிர்க்க வேண்­டு­மானால் சிறு­பான்மை மக்­களின் தனித்­துவம் பாது­காக்­கப்­பட வேண்டும். அவர்­க­ளது விழு­மி­யங்கள் கட்­டிக்­காக்­கப்­பட வேண்டும். அவ்­வா­றான சூழ்­நிலை ஏற்­பட வேண்­டு­மானால் நாட்டில் இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு என்­பது அவ­சி­ய­மா­க­வுள்­ளது.தேசிய மக்கள் சக்தி அர­சாங்கம் இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காணப்­படும் என்று வாக்­கு­றுதி வழங்­கி­யி­ருக்­கின்­றது. அந்த வாக்­கு­று­தியை நிறை­வேற்­று­வ­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதன் மூலம் அரசியல் தீர்வு காணப்படும் என்றே தேசிய மக்கள் சக்தி உறுதி வழங்கியிருந்தது.

இதன் காரணமாகவே சிறுபான்மையின மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு கடந்த பாராளுமன்ற தேர்தலிலும் ஜனாதிபதித் தேர்தலிலும் பேராதரவினை வழங்கியிருந்தனர். அந்த வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றினால் நாட்டில் இனங்களுக்கிடையே நல்லுறவு வளர்க்கப்படும்.

ஆனால், அதற்கான செயற்பாடுகளில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஈடுபடுவதாக தெரியவில்லை. புதிய அரசிய லமைப்பை உருவாக்குவது தொடர்பிலோ அரசியல் தீர்வு குறித்தோ அரசாங்கம் அக்கறையற்றிருக்கின்றது. அது குறித்து கலந்துரையாடுவதற்குக் கூட அரசாங்கம் தயாராக இல்லை.

இந்த நிலைமை நீடிக்கக் கூடாது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டுள்ள இந்த அரசாங்கமானது நாட்டில் இனியும் ஓர் இனக் கலவரம் வெடிக்கக் கூடாது என்று கருதினால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அரசியல் தீர்வைக் காண முன் வரவேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.