இத்தாலியின் Perdifumo பகுதியில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பண்ணை வீடு ஒன்றின் நீச்சல் குளத்தில் இலங்கையை சேர்ந்த 36 வயதுடையவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த 5 நாட்களுக்கு முன்னர் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மருத்துவக் குழுவினர்
சமீபத்தில் பண்ணை வீட்டில் வேலைக்குச் சேர்ந்திருந்த இலங்கையரை சடலமாக கண்ட பண்ணை வீட்டின் உரிமையாளர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு சென்ற மருத்துவக் குழுவினர், அந்த நபர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
உடற்கூறு ஆய்வு
Perdifumo பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் அக்ரோபோலி நிறுவனத்தின் பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
உயிரிழப்புக்கான சரியான காரணத்தை அறிய, உடற்கூறு ஆய்வு செய்ய நடவடிக்கை எடுத்தக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் நடைபெறவிருக்கும் உடற்கூறு ஆய்வின் முடிவிலேயே, மரணம் குறித்த விபரங்கள் தெரியவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



