அடர்த்தியான முடி வளர ஹேர் ஆயிலுடன் சேர்க்க வேண்டிய 3 பொருட்கள்

 

கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்க ஹேர் ஆயிலுடன் வெந்தயம், நெல்லிக்காய், ரோஸ்மேரி எப்படி சேர்க்க வேண்டும் ? அவை கூந்தலுக்கு அளிக்கும் நன்மைகளை பற்றி விரிவாக பார்க்கலாம்

மன அழுத்தம், தவறான உணவு முறை, கடின நீர் பயன்பாடு போன்ற காரணங்களால் முடி உதிர்தல் பிரச்சனை பலருக்கும் ஏற்படுகிறது. முடியை உடனே வளர்க்கவைக்கும் மேஜிக் ஹேர் ஆயில் எதுவும் இல்லையென்றாலும், சில பொருட்கள் கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிப்பதாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதில் நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் மற்றும் எள் எண்ணெய் ஆகியவற்றுடன் பயன்படுத்தக்கூடிய 3 பொருட்களை பார்க்கலாம்.

முடி வளர்ச்சியை தூண்டவும், உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், முடி மெலிதல் பிரச்சனையை தடுக்கவும் ரோஸ்மேரி ஆயில் சிறந்த தேர்வாகும். 2015ல் National Library of medicine-ல் வெளியான ஆய்வின்படி, முடி உதிர்வுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் 2% Minoxidil மருத்துக்கு இணையான சக்தி ரோஸ்மேரி எண்ணெயிலும் உள்ளது.


பயன்படுத்தும் முறை: ரோஸ்மேரி ஆயிலை நேரடியாக பயன்படுத்தக் கூடாது. உங்கள் வழக்கமான தேங்காய் அல்லது பாதாம் எண்ணெயில் சில துளிகள் கலந்து பயன்படுத்த வேண்டும்.

 

கிச்சனில் எப்போதும் இருக்கும் வெந்தயம், சமையலுக்கு மட்டுமல்ல கூந்தல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் சிறந்தது. MDPI தளத்தில் Pharmaceutics பிரிவில் வெளியான ஆய்வின்படி, வெந்தயச் சாறு அடங்கிய சப்ளிமென்ட், முடியின் அடர்த்தி மற்றும் வளர்ச்சியை மேம்படுத்த உதவக்கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது. வெந்தயத்தில் இதில் புரதம், இரும்புச்சத்து மற்றும் தாவர ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

பயன்படுத்தும் முறை: வெந்தயத்தை லேசாக நசுக்கி, வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயில் சில மணிநேரங்கள் அல்லது இரவு முழுவதும் ஊறவைத்து, அந்த எண்ணெயை தலையில் தேய்க்கலாம். எண்ணெயில் லேசான நட்ஸ் வாசனை வருவதோடு அதன் தன்மையும் அடர்த்தியாகிறது.

நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்டுகள் உள்ளன. முடியை வலுப்படுத்தவும், முடி உதிர்வை குறைக்கவும், நரைமுடி வருவதை தடுக்கவும் உதவும்.
2014ம் ஆண்டு globalresearchonline தளத்தில் வெளியான ஆய்வின்படி, நெல்லிக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உச்சந்தலையின் ஆரோக்கியத்தை ஆதரிக்க உதவக்கூடும்.
பயன்படுத்தும் முறை: காய்ந்த நெல்லிக்காய் துண்டுகள் அல்லது நெல்லிக்காய் பொடியை வெதுவெதுப்பான எண்ணெயில் கலந்து ஊறவைத்து பயன்படுத்தலாம். இது எண்ணெயைக் கருமையாகவும், பாரம்பரியமான இயற்கை மணமாகவும் மாற்றும்.

எந்தவொரு எண்ணெயுடன் முடி வளர்ச்யின் வேகத்தை உனடியாக மாற்றமுடியாது. உண்மை என்னவென்றால், இந்த பொருட்கள் முடி ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. முடி உடைவதை குறைத்து, உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்துக்கொள்கின்றன.

முடி ஆரோக்கியம் என்பது வெளியில் தடவும் எண்ணெயில் மட்டுமல்ல, உடலின் உட்புற ஆரோக்கியத்திலும் உள்ளது. இரும்புச்சத்து குறைபாடு, தைராய்டு, மன அழுத்தம், தூக்கமின்மை, மற்றும் போதிய புரதச்சத்து இல்லாதது போன்ற பிரச்சனைகள் இருந்தால், எந்த எண்ணெய் தேய்த்தாலும் எதிர்பார்த்த பலன் கிடைக்காது. எனவே, ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பது அவசியம்
குறிப்பு: முடி உதிர்தல் அதிகமாக இருந்தால், வீட்டு வைத்தியங்களை மட்டுமே நம்பியிருக்காமல் தகுதியான தோல் மருத்துவரை அணுகுவது சிறந்த முறையாகும்.