அரசியல் தீர்வுக்கு ஒத்துழைப்பது இந்தியாவின் தார்மீகக் கடமை

 

‘மாகாண சபைத் தேர்தல் அல்­லது இலங்கை தேசிய இனப்­பி­ரச்­சினை விவ­கா­ரங்­களில் இந்­தி­யாவை மீண்டும் இழுத்து உள்ளே விடு­வது, எமக்கும் சரி, இந்­தி­யா­வுக்கும் சரி நன்மை பயக்­காது. வட-­கி­ழக்கை இணைத்து, இந்­தி­யாவால் தர முடிந்த மாகாண சபையை, முதல் கட்ட தீர்­வாகப் பெற்று, தம்மை திடப்­ப­டுத்­திக்­கொண்டு, அடுத்த கட்­டத்தை நோக்கி நகரும் வர­லாறு தந்த வாய்ப்பை, தமிழ்த் தேசியக் கட்­சிகள் தவற விட்டு விட்­டன. ஆகவே, இன்று மீண்டும் ஆரம்­பித்த இடத்­துக்கே வர­லாறு நம்மை கொண்டு வந்து விட்­டுள்­ளது. இந்­திய அரசு, இனிமேல் இலங்கை தமிழர் தரப்பின் பங்­கா­ளி­யாக, இலங்கை தேசிய இன பிரச்­சி­னையில் தலை­யி­டாது, செயற்­ப­டாது என்­பது எனக்கு நன்கு விளங்­கு­கி­றது’ என்று தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலைவர் மனோ கணேசன் தெரி­வித்­துள்ளார்.

‘13ஆவது திருத்­தச்­சட்டம் இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பின் ஒரு பகு­தி­யாகும். எனவே, அதனைத் தக்க வைத்து கொள்­வதா, மேம்­ப­டுத்­து­வதா, முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வதா, சீர்­தி­ருத்­து­வதா அல்­லது முற்­றிலும் நீக்­கு­வதா என்­பதை தீர்­மா­னிப்­பது இலங்­கை­யர்­களின் பொறுப்­பாகும். வடக்கு மற்றும் கிழக்­கி­லுள்ள தமிழ் அர­சியல் கட்­சிகள் இந்­தி­யா­வு­ட­னான தங்­க­ளது உறவை சரி­யான முறை­யிலும், சரி­யான நேரத்­திலும் பயன்­ப­டுத்தத் தவ­றி­விட்­டன. இலங்கை அர­சாங்­கத்தின் மீது இந்­தியா கொண்­டி­ருந்த செல்­வாக்கை பயன்­ப­டுத்தி, இணக்­க­மான அர­சியல் தீர்வை முன்­னெ­டுக்க அவர்கள் போது­மான முயற்சி எடுக்­க­வில்லை. அதேபோல், மாகாண சபை அமைப்பை பயன்­ப­டுத்தி தங்­க­ளது நிலையை முதலில் வலுப்­ப­டுத்திக் கொண்டு, பிறகு அடுத்த கட்­டத்தை நோக்கி நக­ரவும், இந்­தி­யா­வி­னது நம்­பிக்­கையை பெறவும், அவர்கள் திறம்­பட செயற்­ப­ட­வில்லை’ என்றும் மனோ கணேசன் குற்றம் சுமத்­தி­யி­ருக்­கின்றார்.

இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு விட­யத்தில் இந்­தி­யாவின் அழுத்தம் அவ­சியம் என்று தமிழ்த் தேசியக் கட்­சி­களின் தலை­வர்கள் தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்­தி­வரும் நிலையில், தமிழ் முற்­போக்குக் கூட்­ட­ணியின் தலைவர் மனோ கணேசன் அதற்கு எதிர்­மா­றான நிலைப்­பாட்டை தற்­போது வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்றார்.

ஈழத் தமிழர் விவ­கா­ரத்தில் இந்­தி­யாவின் பங்­க­ளிப்­பா­னது அன்னை இந்­தி­ரா­காந்­தியின் காலத்­தி­லி­ருந்து நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது. அன்னை இந்­தி­ரா­காந்­தியின் காலத்தில் தமிழ்ப் போரா­ளி­க­ளுக்கு இந்­தியா ஆயுதப் பயிற்­சி­களை வழங்­கி­ய­துடன் போராட்­டத்தை ஊக்­கு­விக்கும் வகையில் செயற்­பட்­டி­ருந்­தது. அன்று தமி­ழக முத­ல­மைச்­ச­ராக இருந்த எம்.ஜி.இரா­மச்­சந்­திரன் உட்­பட தமி­ழகத் தலை­வர்­களும் தமிழ் போராளிக் குழுக்­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கி­யி­ருந்­தனர்.

தமி­ழர்­க­ளது போராட்­டத்தை ஊக்­கு­விக்கும் வகையில் அன்று மத்­திய அர­சாங்கம் செயற்­பட்­ட­மைக்கு இலங்கை அர­சாங்­கத்தின் அமெ­ரிக்க ஆத­ரவு போக்கு உட்­பட பல்­வே­று­பட்ட கார­ணங்­களை கூற முடியும். ஆனாலும், தமி­ழர்­களின் போராட்­டத்­துக்கு தொடர்ச்­சி­யாக ஆத­ரவு வழங்­கிய இந்­தியா, இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு தொடர்­பிலும் அக்­கறை காட்­டி­யி­ருந்­தது. இதன் கார­ண­மா­கவே திம்பு பேச்­சு­வார்த்தை இடம்­பெற்­றது.

அதனைத் தொடர்ந்­துதான் 1987ஆம் ஆண்டு இலங்கை– இந்­திய ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டது. அதன் மூல­மாக 13ஆவது திருத்தச் சட்­டத்தின் கீழ் இணைந்த வடக்கு, கிழக்கு மாகாண சபை உரு­வாக்­கப்­பட்­டது. அன்று இந்த மாகாண சபை முறை­மையை விடு­தலைப் புலிகள் ஏற்­றிக்­கொண்­டி­ருக்­க­வில்லை. இந்­திய மத்­திய அர­சாங்கம் அவர்­க­ளுக்கு அழுத்­தத்தைக் கொடுத்தே இதற்­கான சம்­ம­தத்தை பெற்­றி­ருந்­தது.

ஆனாலும் மாகாண சபை முறைமை ஊடான அதி­காரப் பகிர்வு தமிழ் மக்­க­ளுக்கு போதி­ய­தாக இல்லை என்ற நிலைப்­பாட்டை அன்­றைய தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியும் கொண்­டி­ருந்­தது. இதன் கார­ண­மா­கவே அன்­றைய இந்­தியப் பிர­தமர் ராஜீவ்­காந்­திக்கு இந்த விடயம் தொடர்பில் தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் தலை­வர்கள் கடிதம் அனுப்­பி­யி­ருந்­தனர்.

அன்­றைய காலப் பகு­தியில் இலங்கை வந்­தி­ருந்த இந்­திய அமை­திகாக்கும் ப­டை­யி­ன­ருக்கும் விடு­தலைப் புலி­க­ளுக்கும் இடையில் மோதல் உரு­வா­ன­தை­ய­டுத்து இந்த மாகாண சபை முறை­மையின் அமு­லாக்கம் என்­பது உரிய வகையில் சாத்­தி­யப்­ப­ட­வில்லை. அன்று விடு­தலைப் புலிகள் இந்­திய அமைதிகாக்கும் படை­யி­ன­ருடன் முரண்­பட்­ட­தை­ய­டுத்தே மாகாண சபை முறை­மையை உரிய வகையில் அமுல்­ப­டுத்த முடி­யாத நிலை உரு­வா­கி­யி­ருந்­தது.

தற்­போது ஆட்­சி­யி­லுள்ள தேசிய மக்கள் சக்­தியின் பிர­தான கட்­சி­யான மக்கள் விடு­தலை முன்­னணி அன்று மாகாண சபை முறை­மைக்கு எதி­ராக போர்க் கொடி தூக்­கி­யி­ருந்­தது. தெற்கில் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் கிளர்ச்­சியும் வடக்கு, கிழக்கில் விடு­தலைப் புலி­களின் முரண்­பட்ட போக்கும் மாகாண சபை முறை­மையை அமுல்­ப­டுத்­து­வதில் அன்று தாக்கம் செலுத்­தி­யி­ருந்­தன.

அன்று, விடு­தலைப் புலி­களின் போக்­குக்குக் எதி­ராக தமிழ்த் தேசிய அர­சியல் கட்­சிகள் செயற்­பட முடி­யாத நிலைமை காணப்­பட்­டது. இதன் கார­ண­மா­கவே 13ஆவது திருத்தச் சட்­டத்தின் கீழான மாகாண சபை முறை­மையை முழு­மை­யாக ஏற்­றுக்­கொள்ள முடி­யாத நிலை தமிழ் மித­வாத கட்­சி­க­ளுக்கு ஏற்­பட்­டி­ருந்­தது. இந்த யதார்த்­தத்தை அன்று அனை­வரும் புரிந்­து­கொண்­டி­ருந்­தனர்.

உண்­மை­யி­லேயே இந்­திய – இலங்கை ஒப்­பந்­தத்தின் மூலம் 13ஆவது திருத்தச் சட்­டத்தை அமு­லுக்குக் கொண்­டு­ வ­ரு­வ­தற்கு இந்­தியா பெரும் பங்­க­ளிப்பு செய்­தி­ருந்­தது. அவ்­வாறு மாகாண சபை முறை­மையை அமுல்­ப­டுத்­திய இந்­தியா, அதனை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கான அழுத்­தங்­களை உரிய வகையில் கொடுக்க வேண்டும் என்றே தமிழ்த் தேசியக் கட்­சி­களின் தலை­வர்கள் தற்­போதும் கோரி வரு­கின்­றனர்.

இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி, இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் எஸ்.ஜெய்­சங்கர் உட்­பட்ட இந்­தியத் தலை­வர்­களை சந்­திக்கும் தமிழ்த் தேசியக் கட்­சி­களின் தலை­வர்கள், 13ஆவது திருத்தச் சட்­டத்தை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­து­வ­தற்கு அழுத்தம் கொடுக்­கு­மாறே கோரி வரு­கின்­றனர்.

இந்­தியத் தலை­வர்­களும் 13ஆவது திருத்தச் சட்­டத்தை முழு­மை­யாக அமுல்­ப­டுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்­தனர். தற்­போது தேசிய மக்கள் சக்தி ஆட்­சி­ய­மைத்த பின்னர் 13ஆவது திருத்தம் என்­பதை வெளிப்­ப­டை­யாகக் கூறாமல் அர­சி­ய­ல­மைப்பை முழு­மை­யாக அமுல்­ப­டுத்த வேண்டும் என்று மறை­மு­க­மாக தெரி­வித்து வரு­கின்­றதை காணக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது.

இலங்கை இனப்­பி­ரச்­சினை விவ­கா­ரத்தில் அன்­று­முதல் பங்­க­ளிப்பு செய்த இந்­தியா, இறுதி யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்­டு­வ­ரு­வ­தற்கும் முழு­மை­யான ஒத்­து­ழைப்பை வழங்­கி­யி­ருந்­தது. அவ்­வாறு யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்­டு­வர ஒத்­து­ழைப்பை வழங்­கிய இந்­தியா, யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­க­ளுக்கு அர­சியல் தீர்வை பெற்­றுக்­கொ­டுக்க வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். அதற்­கான தார்­மீகக் கடமை இந்­தி­யா­வுக்கு உள்­ளது. இத­னைத்தான் தமிழ்த் தேசியக் கட்­சி­களின் தலை­வர்கள் வலி­யு­றுத்­தி­ வ­ரு­கின்­றனர்.

இந்­நி­லையில் இலங்கை இனப்­பி­ரச்­சினை விவ­கா­ரத்தில் இந்­தி­யாவின் தலை­யீடு தேவை­யற்­றது என்றும், அதற்­கான சூழல் தற்­போது இல்லை என்றும் தமிழ் முற்­போக்குக் கூட்­ட­ணியின் தலைவர் மனோ கணேசன் தற்­போது கூறு­வது எந்­த­வ­கை­யிலும் ஏற்­றுக்­கொள்­ளத்­தக்க செயற்­பா­டாக தெரி­ய­வில்லை.

இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்திய அரசுக்கு ஒரு தார்மீகப் பொறுப்பு உள்ளது என்பது உண்மைதான். அந்தப் பொறுப்பு உருவாகக் காரணம் இலங்கையில் தமிழர் ஆயுதப் போராட்டத்தை செயலிழக்கச் செய்வதில் இந்தியாவின் இராஜதந்திர முயற்சிகளும் இராணுவத் தலையீடும் தீர்மானகரமான பங்குகளை வகித்ததுதான் என்று மனோ கணேசன் கூறியிருக்கின்றார். இதன் மூலம் அவர் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் இந்தியாவுக்கு தார்மீகக் கடமை உள்ளது என்பதை ஏற்றுக் கொள்கிறார். எனவே, இலங்கை தமிழர் விவகாரத்தில் இந்தியா தனது தார்மீகக் கடமையை நிறைவேற்ற வேண்டியது அவசியம் என்பதை இந்தவேளையில் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.