: இந்தியில் பிரபலமான கும்கும் பாக்யா சீரியலில் நடித்து பிரபலமானவர் சஞ்சிதா உகலே. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வந்த அவர் ஜூன் 14ம் தேதி இரவு தற்கொலை செய்து கொண்டார். படுக்கையறையில் இருந்த மின்விசிறியில் சேலை மூலம் தூக்கு போட்டுக் கொண்ட சஞ்சிதாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் முன்பே அவர் இறந்துவிட்டார்.
சஞ்சிதா அப்பா: இந்நிலையில் என்.டி.டிவிக்கு பேட்டி அளித்திருக்கிறார் சஞ்சிதாவின் தந்தை மச்சிந்திரா உகலே. மச்சிந்திரா கூறியதாவது, என் மகள் ரொம்ப அப்செட்டாகவே இருந்து வந்தார். ஆனால் அதற்கான காரணத்தை எங்களிடம் சொல்லவில்லை. சந்தோஷமாக இருக்கும்போது கூட டிப்ரஷனுக்கு போயிடுவார். அவரிடம் இந்த மாற்றம் ஏற்பட்டதை நாங்கள் கவனித்துவிட்டோம். அதனால் தான் சஞ்சிதா எங்கு சென்றாலும் கூடவே செல்வோம். அவரை தனியாகவே விட மாட்டோம். யாராவது ஒரு ஆள் துணைக்கு இருப்போம்.
எங்க தப்பு: ஜூன் 14ம் தேதி ஒரு 30 நிமிடங்கள் அவருடன் யாரும் இல்லை. அந்த நேரத்தில் தான் இப்படி நடந்துவிட்டது. இது நாங்கள் செய்த தவறு என்று கூட சொல்லலாம். ஆனால் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அவர் தீவிரமான மன அழுத்தத்தில் இருந்தது தெரியாமல் போய்விட்டது.
சஞ்சிதாவை டார்ச்சர் செய்திருக்கிறார்கள். பணம் மற்றும் பிற விஷயங்கள் தொடர்பாக யாராவது அவருக்கு பிரச்சனை கொடுத்துக் கொண்டே இருந்திருக்கிறார்கள். அதனால் எப்பொழுதும் பிரஷரில் இருந்திருக்கிறார். என் மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
2 பேர் தற்கொலை: சீரியல்களுக்கு ஆட்களை தேர்வு செய்யும் காஸ்டிங் ஆட்கள் சஞ்சிதாவுக்கு தொல்லை கொடுத்து வந்ததாக அவரின் அண்ணன் ஆகாஷ் சதீஷ் உகலே செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் பாலிவுட்டில் வெற்றிகரமானவராக இருந்து வந்த சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்து கொண்ட அதே ஜூன் 14ம் தேதி தன் தங்கையும் இறந்துவிட்டார் என்றார்.
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் இறந்து 6 ஆண்டுகள் கழித்து அதே தேதியில் சஞ்சிதா உகலேவும் தற்கொலை செய்து கொண்டது மக்களை பேச வைத்திருக்கிறது. அதிகாரத்தில் இருப்பவர்களால் தன் தங்கை அப்செட்டாக இருந்தார் என்றார் ஆகாஷ்.
சஞ்சிதா டான்ஸ்: சஞ்சிதா உகலேவின் கடைசி இன்ஸ்டாகிராம் போஸ்ட் மற்றும் ரீல்ஸ் குறித்தும் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்படுகிறது. ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடி அதுவும் சந்தோஷமாக ரீல்ஸ் போட்டிருக்கிறார் சஞ்சிதா. இறப்பதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பு இன்ஸ்டாவில் சஞ்சிதா வெளியிட்ட ரீல்ஸ் வைரலாகிவிட்டது.
வாழ்ந்தது போதும் என்று நினைத்து தற்கொலை முடிவில் இருக்கும் யாரும் இந்த அளவுக்கு சிரித்து சந்தோஷமாக ரீல்ஸ் போட மாட்டார்கள். சஞ்சிதாவின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. மகிழ்ச்சியாக இருந்தவர் திடீரென்று இறக்க நிச்சயம் ஏதோ காரணம் இருக்கிறது.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
அவரை இந்த முடிவுக்கு தள்ளியவர்களை சும்மா விடக் கூடாது என்று சின்னத்திரை ஆட்களும், ரசிகர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே மன அழுத்தமாக இருந்தால் தனியாக இருந்தால் மேலும் ஒரு மாதிரி இருக்கும். அதனால் குடும்பத்தாருடன் இருக்கவும். அது தான் நல்லது. நம்மை சுற்றி ஆட்கள் இருந்தால் ஆறுதலாக இருக்கும் என்று நடிகை ஆன்சல் குரானா தெரிவித்துள்ளார்.




