சமூக வலைத்தளங்களில் முக்கியமான அரசியல்வாதிகளில் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு அதில் நான்கு நபர்களின் புகைப்படங்கள் அடையாளமிடப்பட்டு காட்டப்பட்டுள்ளன.
குறித்த நபர்கள் யாரெனில் ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களாவர்.மீதியான நபர்கள் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையிலே, தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா இன்று காலை (10) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு எதிர்வரும்12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, 9 மில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் சகோதரர் சரத் வீரவன்சவிற்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.




