இலங்கைக்கு தெற்கே இந்தியப் பெருங்கடலில் ராட்சத "ஈர்ப்புத் துளை" கண்டுபிடிப்புஸ
02 Aug,2023
இந்தியப் பெருங்கடலில் 3 மில்லியன் சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்ட ராட்சத "ஈர்ப்புத் துளை" எதனால் ஏற்பட்டது என்பதை இந்திய விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது.
இந்தியப் பெருங்கடலில் இலங்கைக்கு தெற்கே இந்த ராட்சத கிராவிட்டி ஹோல் ஏற்பட்டுள்ளது. இதை பெங்களூருவை சேர்ந்த ஐஐஎஸ்சி எனப்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் மைய விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். கிராவிட்டி ஹோல் ஏற்பட்டுள்ள இடத்தில் ஈர்ப்பு விசை சராசரியை விட குறைவாக உள்ளது. அதனால் கடல் மட்டம் உலக சராசரியை விட 100 -மீட்டர் குறைவாக உள்ளது.
இந்த கிராவிட்டி ஹோல் எனப்படும் ஈர்ப்புத் துளை எதனால் ஏற்பட்டது? இந்த ஈர்ப்புத் துளையால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பது குறித்து ஐஐஎஸ்சி விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அவர்கள் மேற்கொண்ட ஆய்வுகள் தொடர்பான சில அறிக்கைகள் வெளியாகியுள்ளன. அதன்படி கடந்த 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே இந்த கிராவிட்டி ஹோல் உருவாகத் தொடங்கியுள்ளதாக தெரிகிறது. மேலும் இது தொடர்பான விவரங்கள் புவி இயற்பியல் ஆய்வுக் கடிதங்கள் என்ற பெயரில் வெளியாகியுள்ளன.
ஐஎஸ்எஸ்சியைச் சேர்ந்த புவி இயற்பியல் ஆராய்ச்சியாளர் டெபன்ஜன் பால் மற்றும் ஐஎஸ்எஸ்சியின் பேராசிரியர் அட்ரீயி கோஷ் ஆகியோர் இது தொடர்பான தீவிரமான ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கூற்றுப்படி, மோல்டன் ராக் எனப்படும் இறுகிய பாறைக் குழம்பின் பற்றாக்குறை தான் இந்த ஈர்ப்புத் துளை உருவாகக் காரணம் எனக் கூறப்படுகிறது.
பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் விஞ்ஞானிகள் கடந்த 140 மில்லியன் ஆண்டுகளில் தட்டு டெக்டோனிக் இயக்கங்களை புனரமைத்து, ஈர்ப்பு துளையின் தோற்றத்தை கண்டறிய கணினி உருவகப்படுத்துதல்களை உருவாக்கியுளள்னர். டெக்டோனிக் தகடுகளின் சில பகுதிகள் ஆப்பிரிக்காவின் கீழ் உள்ள மேன்டில் வழியாக மூழ்கி, இந்தியப் பெருங்கடலுக்கு அடியில் இருந்து பிளம்களை உருவாக்குவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இந்தியப் பெருங்கடலுக்கு அடியில் உள்ள இந்த செயல்முறைகளின் தொடர்பு IOGL-ன் நிலை மற்றும் வடிவத்தை தீர்மானித்திருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் விளக்கியுள்ளனர். இந்த புளூம்கள், ஜியோயிட் லோவுக்கு அருகில் உள்ள மேன்டில் அமைப்புடன், இந்த எதிர்மறை புவியியலஒழுங்கின்மை உருவாவதற்கு காரணமாகும் என்று IISc-ஐ சேர்ந்த விஞ்ஞானி டெபன்ஜன் பால் மற்றும் அட்ரேயீ கோஷ் ஆகியோர் தங்கள் ஆய்வுக் கட்டுரையில் எழுதியுள்ளனர்.
விஞ்ஞானிகளின் ஆய்வுப் படி இந்த ஈர்ப்புத்துளை என்கிற கிராவிட்டி ஹோல் இந்தியப் பெருங்கடலில் வடக்குப் பகுதியில் 900 கிலோமீட்டர் தொலைவில் 300 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கிராவிட்டி ஹோல் பின்னாளில் ஏற்படுத்தப் போகும் விளைவுகளையும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்