இலங்கைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான மருந்துகளை எடுத்துச் செல்லுமாறு!
04 Dec,2022
இலங்கையில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தனது பிரஜைகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி இலங்கைக்கு சுற்றுலா செல்வதாக இருந்தால் உங்களுக்கு தேவையான மருந்துகளை நீங்கள் கையுடன் எடுத்துச் செல்லுமாறு அமெரிக்க மக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கொழும்பிற்கு வெளியே மருத்துவ வசதிகள் குறைவாக இருப்பதாக அமெரிக்கத் தூதரகம் கூறியுள்ளது.
கொழும்பு நகரில் கூட ஆறு பெரிய மருத்துவமனைகள் மட்டுமே இருப்பதாகவும், அந்த 6 மருத்துவமனைகளில் 3 மருத்துவமனைகளில் மட்டுமே அவசர சேவைகள் இருப்பதாகவும் தனது நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளது.