காசநோய்க்கும் ஆஸ்துமாவுக்கும் நிரந்தரத் தீர்வு உண்டா.?

09 Sep,2015
 

             


நுரையீரல் பாதிப்புகளில் மிக மோசமான நோய் காச நோய். உண்மையில் இதுவரை காசநோய்க்கு நிரந்தரமாக குணமளிக்கிற மருந்துகளோ சிகிச்சையோ கிடையாது. ஆனால், பாதிப்பில்லாமல் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிற மிகச்சிறந்த மருந்துகள் உள்ளன. காச நோய்க்கு என்புருக்கி நோய் என்று ஒரு பெயரும் உண்டு. எவ்வளவு பெரிய ஆஜானுபாகு தோற்றத்தில் இருந்தாலும் காச நோய் வந்தவர்களை இவ்வியாதி கூனி குறுக வைத்துவிடும்.

காச நோயாளிகள் சில கட்டுப்பாடுகளை கடைபிடித்தால் அவர்கள் நோயின் பாதிப்பை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதுடன் மற்றவர்களுக்கும் அவர்களின் பாதிப்பு வராமல் செய்து கொள்ளலாம். காசநோயாளிகள் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெறுதல் அவசியம். மற்றவர்களுக்கும் பரவாமல் இருக்க, சளியை கண்ட இடத்தில் துப்பாமல் ஒரு குவளையில் பிடித்து எரித்து விட வேண்டும். எப்போது இருமினாலும் வாயை ஒரு துணியால் பொத்திக்கொண்டு இரும வேண்டும்.

குழந்தைகளுக்கு கட்டாயமாக பி.ஸி.ஜி. தடுப்பூசி போடுவது அவசியம். ஏனெனில் பிற்காலத்தில் குழந்தைகளுக்கு நுரையீரல் தொடர்பான பாதிப்புகள் வராமல் இருக்க இந்த பி.ஸி.ஜி. தடுப்பூசி பயன்படும்.

காசநோயைப் போன்றே நுரையீரல் பாதிப்புகளில் மிக முக்கியமானது ஆஸ்துமா. இந்த பாதிப்பு பரம்பரை காரணமாகவும், சுற்றுப்புற சூழ்நிலை பாதிப்பினாலும், ஒவ்வாமை எனப்படுகிற அலர்ஜியினாலும் ஏற்படும்.

இந்த நோய் பாதிப்பிலிருந்து தப்பிக்க சரியான ஆலோசனை

துஷ்ட்டரை கண்டால் தூர விலகு என்பது போல் ஆஸ்துமா அலர்ஜியை ஏற்படுத்தும் பூவின் மகரந்தங்கள், முடி அதிகம் உள்ள செல்லப்பிராணிகளை வளர்ப்பது, ஒற்றடை அடிப்பது. வாசனை திரவியங்களை (சென்ட்) பயன்படுத்துவது, அனைத்து விதமான புகைகள், தூசி போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

ஆஸ்துமா வந்தவர்களுக்கு அவர்களது பாதிப்பை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சிறந்த மருந்துகள் உள்ளன. அவற்றை அவர்கள் விடாமல் சாப்பிட்டு வரவேண்டும். ஆனால் ஆஸ்துமாவை நிரந்தரமாக குணப்படுத்தும் மருந்துகள் இல்லை. எனவே ஆஸ்துமா நோயாளிகள் கட்டுப்பாட்டுடன் இருப்பது அவசியம்.


ஆஸ்துமாவிற்கு உணவு முறையே சிகிச்சை


ஆஸ்துமா என்­பது ஒவ்­வா­மையால் ஏற்­படும் நோய் என்­பது அனை­வரும் அறிந்­ததே. உடல் ஆரோக்­கியம் நன்­றாக இருக்கும் போதிலும் கூட ஆஸ்துமா தொல்­லைக்கு பலர் ஆட்­பட்டு வரு­கின்­றனர்.

சில­ருக்கு சுற்­றுச்­சூழல் நிலை­மை­க­ளாலும், சில­ருக்கு கோதுமை, முட்­டைகள், பால், சொக்­லேட்­டுகள், மாட்­டி­றைச்சி, ஆட்­டி­றைச்சி போன்ற உண­வு­க­ளாலும் கூட ஆஸ்துமா ஏற்­ப­டு­வ­தாக சில ஆய்­வுகள் தெரி­வித்­துள்­ளன.

மேலும் சில­ருக்கு மனச்­சிக்­கல்கள் கார­ண­மாக ஆஸ்துமா ஏற்­ப­டு­கி­றது. இளம் வயதில் ஆஸ்துமா ஏற்­படும் 25 சத­வீதத்­தி­ன­ருக்கு உணர்வுபூர்வ பாது­காப்­பின்மை, பெற்­றோர்களின் அன்பும் அர­வ­ணைப்பும் இன்மை ஆகிய கார­ணங்­களால் ஏற்­ப­டு­கி­றது என்று சில ஆய்­வுகள் தெரி­விக்­கின்­றன.

மேலும் பரம்­ப­ரையில் யாருக்­கேனும் சரும ஒவ்­வாமை, ஆஸ்துமா இருந்தால் அது பின்­வரும் தலை­மு­றை­யி­ன­ரையும் பாதிக்­கி­றது. ஊட்டச் சத்து குறை­பா­டு­க­ளாலும் அட்­ரி­னலின் போதா­மை­யாலும் ஆஸ்துமா ஏற்­ப­டு­கி­றது என்­கி­றார்கள் மருத்­து­வர்கள் .

உணவு பழக்க வழக்­கமே சிகிச்சை நவீன மருத்­து­வத்தில் ஆஸ்து­மாவை ஒழிக்க முடி­ய­வில்லை. தற்­கா­லிக சிகிச்­சை­களே உள்­ளன. மேலும் ஆஸ்­­துமா­விற்கு கொடுக்­கப்­படும் மருந்­துகள் நோயா­ளி­களை மருந்­த­டி­மை­க­ளாக மாற்றி விடு­கி­றது.

மேலும் இவைகள் ஆஸ்து­மாவை நிரந்­த­ர­மாக்கி விடு­கின்­றன. ஆஸ்து­மா­விற்கு பிர­தான கார­ண­மாக கூறப்­படும் அலர்­ஜியும் கூட தவ­றான வாழ்­முறை, குறையும் தடுப்­பு­சக்தி, உணவுப் பழக்க வழக்க தவ­று­களால் குலையும் உடல் ஒத்­தி­சைவு போன்­ற­வற்றின் அறி­கு­றியே.

எனவே ஆஸ்­­துமா­விற்கு உண்­மை­யான சிகிச்சை என்­பது கழி­வ­கற்ற உறுப்­பு­களின் பழுதை நீக்கி அதை நல்ல முறையில் செய­லாற்றத் தூண்­டு­வது மற்றும் முறை­யான உணவுப் பழக்க வழக்­கங்­களால் தேவையற்ற மற்றும் நச்சுப் பொருட்­களை உட­லி­லி­ருந்து அகற்­று­வ­து­மாகும். முதலில் எலு­மிச்­சை­சாறு, தேன் ஆகி­யவை மட்­டுமே உட்­கொண்டு 3 முதல் 5 நாட்­க­ளுக்கு உண்­ணா­வி­ரதம் இருக்க வேண்டும். இந்த உண்ணா நோன்பு கால­கட்­டத்தில் வெந்நீர் கொண்டு குடலை சுத்தம் செய்ய வேண்டும்.

உண்ணா நோன்­பிற்கு பிறகு உடல் நச்சுச் பொருளை அகற்ற வெறும் பழங்­களை மட்­டுமே 5 அல்­லது 7 நாட்­க­ளுக்கு உட்­கொள்­வது நலம். பிறகு சிறிது, சிறி­தாக பிற உண­வு­களைச் சேர்த்துக் கொள்­ளலாம். நோய் குண­ம­டை­வதில் முன்­னேற்றம் தெரியும் காலக்­கட்­டத்தில் சீரான இடை­வெ­ளி­களில் சிறு உண்ணா நோன்­புகள் அவ்­வப்­போது தேவைப்­பட்டால் மேற்­கொள்­வது நலம். ஆஸ்து­மா­விற்கு காய்­கறி உணவு முறை­களே சிறந்­தது. மாச்­சத்­துகள், கொழுப்­புச்­சத்­துகள் மற்றும் புரத உணவு வகை­களை குறை­வாக உட்­கொள்ள வேண்டும். பழங்கள், பச்­சைக்­காய்­க­றிகள், பழுத்த விதைகள் மற்றும் தானி­யங்­களை அதிகளவில் சேர்த்துக் கொள்­ளலாம்.

காலை உணவு: - உலர் கொடி­முந்­தி­ரி­யுடன் சிலவகை உலர் பழ வகை­களை எடுத்துக் கொள்­ளலாம்.

மதிய உணவு: - வேக வைத்த காய்­க­றி­க­ளுடன் கோதுமை ரொட்டி அல்­லது சப்­பாத்­திகள்.

இரவு உணவு-: சமைக்­கப்­ப­டாத காய்­க­றி­களால் ஆன சாலட்.

இரவு உணவை உறங்கச் செல்­வ­தற்கு 2மணி நேத்­திற்கு முன்பு எடுத்துக் கொள்­ளவும். கபம் சேரும் உணவு வகை­க­ளான அரிசி, சீனி, அவரை விதைகள் மற்றும் தயிர், வறுக்­கப்­பட்ட ஜீர­ணிக்க சிரமம் ஏற்­ப­டுத்தும் உணவு வகை­களை தவிர்க்க வேண்டும். தேநீர், கோப்பி, மது, ஊறு­காய்கள், பதப்­ப­டுத்­தப்­பட்ட போத்­தலில் அடைக்­கப்­பட்ட உண­வு­களை கை விடு­வது நல்­லது.

முதல் சில தினங்­க­ளுக்கு பால் மற்றும் பால் பொருட்­களை முற்­றிலும் தவிர்க்க வேண்டும். சிறிது குணம் தெரிந்த பிறகு சிறி­த­ளவு பால் சேர்த்துக் கொள்­ளலாம்.
ஆஸ்துமா நோயா­ளிகள் தாங்கள் சாப்­பிடும் திற­னுக்குக் கீழே சிறிய அளவில் உணவு உட்­கொள்ள வேண்டும்.

மேலும் உணவை நன்­றாக அரைத்து மென்று விழுங்க வேண்டும். தினமும் 8 முதல் 10 டம்ளர் குடிநீர் அருந்த வேண்டும், சாப்­பிடும் போது நீர் அருந்­து­வதை தவிர்க்க வேண்டும். கடு­மை­யாக ஆஸ்­துமா தாக்கும் போது, பசி­யின்மை ஏற்­படும். அப்­போது அவர்­களை சாப்­பி­டச்­சொல்லி வற்­பு­றுத்­தக்­கூ­டாது. 2 மணிக்­கொரு தரம் வெந்நீர் கொடுத்து வந்தால் போது­மா­னது.

ஆஸ்­துமா சிகிச்­சையில் தேன் முக்­கிய பங்கு வகிக்­கி­றது. மூச்சுத் திணறல் இருக்கும் போது ஒரு பாத்­தி­ரத்தில் தேனை நிரப்பி அதை மூக்கின் அருகே வைத்து மூச்சை இழுத்தால் மூச்சு விடு­தலில் உள்ள சிரமம் நீங்கும். இது ஒரு மணி நேரம் வரை தாங்கும். தேனின் வாச­னையை உள் இழுத்­தாலும், தண்ணீர் அல்­லது பாலுடன் கலந்து அருந்­தி­னாலும் நல்ல பலனை கொடுக்கும். ஆஸ்­துமா சிகிச்­சையில் தேன் ஒரு அற்­புத மருந்­தாக பரி­ண­மிக்­கி­றது. மூச்­சுக்­குழல் நோய்­க­ளுக்கு ஓராண்டு பழைய தேன் உத­வு­வ­தாக சிலர் தெரி­விக்­கின்­றனர்.

அமெ­ரிக்க வேளாண்­து­றையில் ஆராய்ச்சி செய்து வரும் டாக்டர் ரொபர்ட்டி ரெய் னால்ட்ஸ், ஆஸ்து­மாவில் விட்­டமின் பி-6 குறை­பாடு பங்­க­ளிப்பு இருந்தால், நாளொன்­றுக்கு இரு முறை விட்­டமின் பி-6 ஐ 50 மி.கி. எடுத்­துக்­கொண்டால் மூச்­சுத்­தி­ண­றலைக் கட்­டுப்­ப­டுத்தும் என்று நிரூ­பித்துக் காட்­டி­யுள்ளார். தினமும் பி-6 விட்டமின் சத்­துக்­களை சேர்ப்­பது மூச்சுத் திண­றலை ஒரு வாரத்தில் குணப்­ப­டுத்தி விடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

காற்று, சூரியன், தண்ணீர் இவை மூன்றும் மிகச் சிறந்த இயற்கை நிவாரணிகளாகும். வாரம் ஒரு முறை உண்ணா நோன்பு, எப்போதாவது குடல் சுத்தம், மூச்சுப் பயிற்சிகள், புதிய காற்று, உலர்ந்த தட்பவெப்பம், இலகுவான தேக பயிற்சிகள் ஆகியவைகளும் ஆஸ்துமாவின் நீண்ட நாளைய சிகிச்சைக்கு பங்களிக்கும்.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies