ட்ரம்ப்பின் ஒப்­பந்தம் ஹமாஸை ஏமாற்றி நிரா­யுத பாணி­யாக்கும்

 

அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப், 2026 ஜூலை 31 ஆம் திகதி ஹமாஸ் மீது திணிக்­கப்­பட்ட 15 அம்சத் திட்­டத்தின் ஒரு பகு­தி­யாக, ஹமாஸை நிரா­யு­த­பாணி ஆக்­கு­வ­தற்­கான ஓர் உடன்­பாட்டை எட்­டி­ய­தாக அறி­வித்தார். அமெ­ரிக்­க-­-பி­ரித்­தா­னிய மற்றும் அரபு சர்­வா­தி­கா­ரிகள் துணை­யோடு பலஸ்­தீ­னர்கள் மீதான இஸ்­ரே­லிய இனப் படு­கொ­லையை ஆத­ரித்த போர்க் குற்­ற­வா­ளிளை உள்­ள­டக்­கிய “சமா­தான சபை” என்று ஒன்றை உரு­வாக்கி அதன் மூலம் இந்த இலக்கை எட்டி உள்­ள­தா­கவும் அவர் அறி­வித்­துள்ளார்.

இந்தத் திட்­டத்தில் படிப்­ப­டி­யாக ஆயுதக் குறைப்பு, ஆட்சி மாற்றம் மற்றும் இஸ்­ரே­லிய இரா­ணு­வத்தை மீளப் பெறுதல் என்­பன அடங்கி உள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. எவ்­வா­றா­யினும், கிட்­டத்­தட்ட ஒரு நூற்­றாண்டு கால­மாக முழு பிராந்­தி­யத்­திலும், அதற்கு அப்­பாலும் அழி­வு­களை ஏற்­ப­டுத்­திய பல யுத்­தங்கள், படு­கொ­லைகள் மற்றும் அழி­வு­க­ளுக்கு மூல கார­ண­மாக விளங்­கிய இஸ்­ரேலை நிரா­யு­த­பாணி ஆக்கும் திட்டம் எதுவும் அறி­விக்­கப்­ப­ட­வில்லை.

ட்ரம்ப்பின் வெட்­கக்­கே­டான இந்த நட­வ­டிக்­கைகள் மீது அவ­ருக்­கி­ருந்த அனைத்து நம்­பிக்­கை­க­ளையும் தவி­டு­பொ­டி­யாக்கும் வகையில் இஸ்­ரேலின் பிர­தமர் பெஞ்­சமின் நெதன்­யாஹு இந்தத் திட்­டத்தை நிரா­க­ரித்­துள்ளார். “நான் பிர­த­ம­ராக இருக்கும் வரை, காஸா­விலோ அல்­லது யூதேயா மற்றும் சமா­ரி­யா­விலோ, மேற்குக் கரை­யிலோ பைபிளின் பெயரைப் பயன்­ப­டுத்தி ஒரு பலஸ்­தீன அரசு நிறு­வப்­ப­டு­வதை அனு­ம­திக்க மாட்டேன்” என்று நெதன்­யாஹு அறி­வித்­துள்ளார்.

பிர­பல கட்­டு­ரை­யாளர் கிறிஸ் ஹெட்ஜஸ், காஸா­வுக்­கான ட்ரம்ப்பின் சமா­தானத் திட்டம் ஒரு கானல்நீர், அது ஒரு மாயா­ஜாலம் என்று வர்­ணித்­துள்ளார்.

 

காஸாவில் தற்­போது யுத்த நிறுத்தம் இல்லை. நடை­மு­றையில் செயல்­படும் ஒரு “சமா­தான சபையும்” அங்கு இல்லை. பலஸ்­தீன அரசை உரு­வாக்­கு­வ­தற்­கான திட்­டங்கள் எதுவும் அங்கு இல்லை. இனப் படு­கொலை அல்­லது அதற்­கான பொறி­மு­றையை முடி­வுக்குக் கொண்டு வரு­வ­தற்­கான வரைவுத் திட்­டங்கள் எதுவும் அங்கு இல்லை.

ட்ரம்பின் திட்டம் மோதலை முடி­வுக்குக் கொண்டு வரு­வ­தற்­காக வடி­வ­மைக்­கப்­ப­ட­வில்லை. இது பலஸ்­தீ­னர்­க­ளுக்கு சம­மான தீர்வை வழங்­கு­வ­தற்­காக வடி­வ­மைக்­கப்­ப­ட­வில்லை. இது தற்­போது நடை­பெற்று வரும் பெரிய அள­வி­லான படு­கொ­லை­களைத் தடுக்க வடி­வ­மைக்­கப்­ப­டவும் இல்லை. மாறாக சியோ­னிச கனவின் உச்ச கட்­ட­மாக இஸ்ரேல் மேற்­கொண்டு வந்த, பலஸ்­தீ­னர்கள் மீதான அதன் இனப் படு­கொ­லை­களை முடி­வுக்கு கொண்டு வரவும், தப்­பிப்­பி­ழைத்த பலஸ்­தீன மக்­களை, தங்கள் தாய­கத்­தி­லி­ருந்து மீண்டும் விரட்­ட­வுமே இது வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையில், இஸ்ரேல் காஸா மீதான தாக்­கு­தல்­களை நிறுத்த வேண்டும்,மேலும் எதிர்­கால அரசின் ஒரு பகு­தி­யாக இருக்க வேண்டும் என்று பலஸ்­தீ­னர்கள் வலி­யு­றுத்தும் பிராந்­தி­யத்­தி­லி­ருந்து இஸ்ரேல் முற்­றாக பின்­வாங்க வேண்டும். இவை நடந்தால் மட்­டுமே ஆயு­தங்­களைக் களைவோம் என்று ஹமாஸ் கூறி­யுள்­ளது.

காஸாவில் பலஸ்­தீ­னர்­களை இனப்­ப­டு­கொலை செய்யும் நிலைமை தற்­போது மேலும் மோச­ம­டைந்து, 2023 அக்­டோபர் 7, முதல் இந்தப் பகு­தியை ஒரு பலிபீட­மாக மாற்­றி­யுள்­ளது.

அரபு சர்­வா­தி­கா­ரிகள், சர்­வ­தேச சமூகம் மற்றும் தங்­க­ளது சொந்த தலை­மை­களால்,தொடர்ந்து ஏமாற்­றப்பட்டு வரும் பலஸ்­தீன மக்­களில் பலர் 75 ஆண்­டு­க­ளுக்கும் மேலான போர், துன்­பு­றுத்தல், அச்­சு­றுத்தல் மற்றும் தனி­மைப்­ப­டுத்­தலில் இருந்து ஏதோ ஒரு வகையில் தப்பிப் பிழைத்து வாழு­கின்­றனர்.

தங்­க­ளுக்கு ஆத­ர­வாக ஏரா­ள­மான ஐக்­கிய நாடுகள் சபையின் தீர்­மா­னங்கள் இருந்த போதிலும், அந்த மக்கள் முன்­னரை விட, தற்­போது தங்கள் தாய­கத்­தி­லி­ருந்து இன­ரீ­தி­யாக துடைத்து எறிய முற்­படும், ஒரு இனப்­ப­டு­கொலை நட­வ­டிக்­கைக்கு முகம் கொடுத்து வரு­கின்­றார்கள். ஒரு பாசிச இஸ்­ரே­லிய அர­சாங்­கத்தால் அவர்­க­ளுக்கு எதி­ரான கடு­மை­யான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்ட போதிலும், மீண்டும் மீண்டும் எழுந்து நின்று போரா­டு­வதை தவிர பலஸ்­தீ­னர்­க­ளுக்கு வேறு தெரி­வு­களும் இல்­லாமல் இல்லை.

14 மில்­லி­ய­னுக்கும் அதி­க­மான எண்­ணிக்­கையை கொண்ட பலஸ்­தீன மக்கள், ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட பலஸ்­தீ­னத்­துக்கும், புலம்­பெ­யர்ந்த பலஸ்­தீ­னர்­க­ளுக்கும் இடையில் கிட்­டத்­தட்ட பாதி­யாகப் பிரிக்­கப்­பட்­டுள்ள நிலையில், பலஸ்­தீன மக்கள் அர­சியல் வரை படத்­தி­லி­ருந்து மறைந்­து­வி­டவோ அல்­லது அவர்­களை மறைத்து விடவோ வாய்ப்­பில்லை.

அவர்­களின் நிலை­மை­களைக் கருத்தில் கொண்டு, பலஸ்­தீ­னர்கள் தங்கள் தேசிய உரி­மை­களை அடை­வ­தற்­கான சிறந்த வழி, இஸ்­ரே­லிய காட்­டு­மி­ராண்­டித்­த­னத்­துக்கு எதி­ரான அந்த மக்­களின் நீடித்த எதிர்ப்பே ஆகும். இந்த விட­யத்தில் கடந்த இரண்டு ஆண்­டு­களில் கணி­ச­மாக வளர்ந்­துள்ள அவர்­க­ளுக்­கான சர்­வ­தேச ஒற்­றுமை மற்றும் மக்கள் ஆத­ரவு என்­ப­ன­வற்­றி­லி­ருந்து அவர்கள் பய­ன­டைந்து கொள்­ளலாம்.

 

இதற்­கி­டையில், பல ஆண்­டு­க­ளாக யசீர் அர­பாத்தின் பலஸ்­தீன விடு­தலை அமைப்­பான, பி. எல். ஓ, ஓர் ஓரங்க நாட­க­மாக மாறி உள்­ளது. பரந்த அள­வி­லான நிதி ஊழல், உற­வி­னர்­க­ளுக்­கான ஆத­ரவு, இஸ்­ரே­லையும், அதன் அமெ­ரிக்­க-­-ஐ­ரோப்­பிய ஆத­ர­வா­ளர்கள் மற்றும் அரபு சர்­வா­தி­கா­ரி­க­ளையும் மகிழ்­விக்க, பலஸ்­தீன மக்­களின் உரி­மை­களில் சம­ரசம் செய்­த­தாக அரபாத் மீது பர­வ­லாக குற்றச் சாட்­டுக்கள் உள்­ளன.

அரபாத் மற்றும் அவ­ரது பி.எல்.ஓவின் நட­வ­டிக்­கை­களால் விரக்­தியும் சோர்வும் அடைந்த, பலஸ்­தீன மக்கள் மத்­தியில் பர­வ­லான மதிப்பை பெற்­றி­ருந்த ஷேக் அஹமத் யாசின், 1987 டிசம்­பரில் பலஸ்­தீன சுதந்­திர இயக்­க­மான ஹமாஸை நிறு­வினார்.

இது முதல் இன்­தி­பாதா (இஸ்­ரே­லிய ஆக்­கி­ர­மிப்­புக்கு எதி­ரான முதல் பலஸ்­தீன எழுச்சி) வெடித்த போது எகிப்தின் முஸ்லிம் சகோ­த­ரத்­துவ இயக்­கத்தின் ஒரு கிளை­யாகக் கரு­தப்­பட்­டது. அதன் பிர­தான பாதை இஸ்­ரே­லுக்கு எதி­ரான வன்­முறை கலந்த போராட்டம், பத்தா இயக்­கத்­து­ட­னான அர­சியல் போட்டி மற்றும் காஸா பகு­தியின் ஆட்சி ஆகி­ய­வற்றை உள்­ள­டக்­கி­யது. கொள்­ளை­ய­டிக்­கப்­பட்ட பலஸ்­தீன நிலங்­களில் இஸ்ரேல் இருப்­பதை அது வன்­மு­றை­யோடு நிரா­க­ரிக்­கின்­றது.

ஒரு வருடம் கழித்து ஹமாஸ் தனது முத­லா­வது சாச­னத்தை வெளி­யிட்­டது. வர­லாற்று சிறப்­பு­மிக்க பலஸ்­தீ­னத்தில் ஒரு இஸ்­லா­மிய அரசை நிறு­வு­வ­தற்கும், இஸ்­ரேலை அழிப்­ப­தற்கும் ஹமாஸ் அழைப்பு விடுத்­தது.

பலஸ்­தீனம் ஒரு இஸ்­லா­மிய தாயகம் என்றும், அதை ஒரு­போதும் முஸ்லிம் அல்­லா­த­வர்­க­ளிடம் ஒப்­ப­டைக்க முடி­யாது என்றும், இஸ்­ரே­லி­ட­மி­ருந்து பலஸ்­தீ­னத்தை மீட்டு அந்தப் பகு­தியை கட்­டுப்­ப­டுத்த புனிதப் போரை நடத்­து­வது பலஸ்­தீன முஸ்­லிம்­களின் மதக் கட­மை­யாகும் என்றும் ஹமாஸ் சாசனம் வலி­யு­றுத்திக் கூறி­யது.

இந்த நிலைப்­பாடு ஹமாஸை, 1988 இல் இஸ்­ரேலின் இருப்­புக்­கான உரி­மையை அங்­கீ­க­ரித்­தி­ருந்த, பலஸ்­தீன விடு­தலை அமைப்­புடன் மோதிக் கொள்ளும் நிலைக்கு கொண்டு வந்­தது. ஹமாஸ்,

இஸ்­ரே­லிய வீரர்­க­ளுக்கு எதி­ரான தனது முத­லா­வது தாக்­கு­தல்­களை 1989 ஆம் ஆண்டில் நடத்­தி­யது. இதன் விளை­வாக இஸ்ரேல் ஹமாஸ் மீது ஒரு தற்­கா­லிக ஒடுக்­கு­மு­றையை மேற்­கொண்­டது. இந்த நட­வ­டிக்­கையின் போது ஹமாஸ் நிறு­வுனர் ஷேக் அஹமத் யாசின் இஸ்­ரேலால் கைது செய்­யப்­பட்டார்.

1990களில் ஒஸ்லோ உடன்­ப­டிக்­கை­க­ளையும் இஸ்­ரே­லுக்கும் மதச் சார்­பற்ற பலஸ்­தீன விடு­தலை அமைப்­புக்கும் (பி. எல். ஓ) இடை­யி­லான சமா­தானப் பேச்­சு­வார்த்­தை­க­ளையும் ஹமாஸ் எதிர்த்­தது.

 

1993 – 2000 ஆண்­டு­க­ளுக்கும் இடையில் ஹமாஸ் இஸ்­ரே­லுக்குள் ஏரா­ள­மான உயர்­மட்ட தற்­கொலை குண்­டு­வெ­டிப்­புகள் மற்றும் தாக்­கு­தல்­களை நடத்­தி­யது. இதன் விளை­வாக அமெ­ரிக்கா உட்­பட பல நாடுகள் ஹமாஸை ஒரு பயங்­க­ர­வாத அமைப்­பாக பிர­க­டனம் செய்­தன.

2006 ஆம் ஆண்டில் பலஸ்­தீன சட்­ட­மன்ற சபைக்­கான தேர்­தலில் ஹமாஸ் பங்­கேற்­றது. இந்த் தேர்­தலில் பத்தாஹ் இயக்­கத்தை எதிர்த்து ஹமாஸ் ஆச்­ச­ரி­ய­மான வெற்­றியைப் பெற்­றது. ஹமாஸ் 2007 ஆம் ஆண்டில் காஸா பகு­தியின் கட்­டுப்­பாட்டைக் கைப்­பற்­றி­யது. 2008 ஆம் ஆண்டில் அது இஸ்­ரேலை நோக்கி ரொக்­கெட்­டு­களை ஏவி­யது. இஸ்ரேல் அதற்கு இரா­ணுவ நட­வ­டிக்கை மூலம் பதி­லடி கொடுத்­தது.

2012 முதல் 2021 வரை ஹமாஸும் இஸ்­ரேலும் பல மோதல்­களில் ஈடு­பட்­டன. “ஹமாஸ் இது­வரை நிறைய இரா­ணுவ பின்­ன­டை­வு­களை சந்­தித்து உள்­ளது. இருந்­தாலும் அது இன்னும் தன்னை மறு­சீ­ர­மைத்துக் கொள்ளும் ஆற்­ற­லையும் திற­னையும் கொண்­டுள்­ளது. மேலும் அது தனது கட்­டளை மற்றும் கட்­டுப்­பாட்டு கட்­ட­மைப்பைத் தக்க வைத்துக் கொண்டும் உள்­ளது” என்று லண்­டனில் உள்ள கிங்ஸ் கல்­லூ­ரியின் யுத்த ஆய்­வுகள் துறையின் ஆராய்ச்­சி­யா­ள­ரிடம் மெரினா மைரோன் என்­பவர் கூறி உள்ளார்.

காஸாவின் குறு­கிய கட­லோரப் பகு­திக்குள், இஸ்­ரே­லிய படை­களால் தற்­போது சுற்றி வளைக்­கப்­பட்­டுள்ள ஹமா­ஸுக்கு மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட இரா­ணுவ தெரி­வு­களே உள்­ளன. அதன் போரா­ளிகள் நகரக் கூடிய புவி­யியல் எல்­லைகள் குறு­கி­ய­தாக உள்­ளன. மேலும் இஸ்­ரே­லிய மற்றும் அமெ­ரிக்க இலத்­தி­ர­னியல் கண்­கா­ணிப்பின் அளவைக் கருத்தில் கொண்டு, இஸ்­ரே­லிய படை­க­ளுடன் ஒரு பெரிய மோத­லுக்கு தயா­ராகும் வாய்ப்பு இப்­போது ஹமா­ஸுக்கு இல்லை. இருந்­தாலும்

கூட, ஒரு அமைப்­பாக, காஸா­வுக்கு வெளியே உள்ள தலை­வர்­க­ளு­டனும், மேற்குக் கரை உட்­பட ஏனைய பகு­திகள் முழு­வதும் உள்ள ஆத­ர­வா­ளர்­களின் ஒத்­து­ழைப்­போடு, ஹமாஸ் நீண்ட காலத்­துக்கு இஸ்­ரே­லிய படை­க­ளுக்கு தொல்­லை­களை கொடுக்க முடியும்.

இஸ்ரேல் காஸா முழு­வ­தையும் மீண்டும் ஆக்­கி­ர­மித்து, ஹமாஸின் செயற்­பா­டு­க­ளுக்கு கார­ண­மாக இருந்த எஞ்­சி­யுள்ள சுரங்­கங்­களை அழிக்காத வரைக்கும் அதன் நிலை ஆபத்தானதே. பலஸ்தீன மாநிலத்தை அங்கீகரிக்கும் ஒரு சமாதான ஒப்பந்தத்தின் பின்னணியில், இஸ்ரேலை அங்கீகரிப்பதற்கான விருப்பத்தை ஹமாஸ் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் சுட்டிக்காட்டியுள்ளது. ஓர் அரசியல் ஒப்பந்தம் மட்டுமே இதற்கான முன்னேற்றப் பாதையாக அமையலாம்.

ஈரான் இஸ்லாமிய குடியரசைத் தவிர, அனைத்து அரபு மற்றும் முஸ்லிம் பெரும் பான்மை நாடுகளும் பலஸ்தீன மக்களை முழுமையாக கைவிட்டு விட்டன. அரபுலக நாடுகள் இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளைக் கொண்டுள்ளன அல்லது பலஸ்தீன விடயத்தில் வெறுமனே கண்மூடித்தனமாக உள்ளன.

காஸாவின் நிலைமை எப்படி முடிவடையும் என்பது தற்போது இடம்பெற்று வரும் ஈரானுக்கும் அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டணிக்கும் இடையிலான போரின் முடிவுகளையே பெரும்பாலும் சார்ந்திருக்கும். தெஹ்ரானும் அதன் நட்பு நாடுகளும் வெற்றி பெற்றால், ஒரு தீவிரமான தீர்வுக்கான நிலை உருவாகலாம் என்ற நம்பிக்கை உள்ளது.