நோர்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் காலமானார்!

 

நோர்வேயின் மன்னர் ஐந்தாம் ஹரால்ட் தனது 89 ஆவது வயதில் காலமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒஸ்லோவிலுள்ள தேசிய வைத்தியசாலையில் இன்று (28) காலை 6:35 மணியளவில் அவர் காலமானதாக நோர்வே அரச மாளிகை அறிவித்துள்ளது.

அரிய வகை இரத்த நோய் காரணமாக கடந்த வாரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவின் மிகவும் வயதான நாட்டின் தலைவராக இருந்த ஐந்தாம் ஹரால்ட், மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நோர்வே நாட்டின் அரசராகப் பணியாற்றியுள்ளார்.

அத்துடன் 14ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் நோர்வேயிலேயே பிறந்த முதல் நோர்வே மன்னர் என்ற சிறப்பையும் இவர் பெற்றிருந்தார்.

இந்தநிலையில் மன்னரின் மறைவு காரணமாக முழு நாடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளதாக நோர்வே பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஐந்தாம் ஹரால்ட் மன்னரின் மறைவைத் தொடர்ந்து, அவரது மகனான இளவரசர் ஹாகன் (Haakon), நோர்வேயின் புதிய அரசராக பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.