அலி கமேனி இறுதிச் சடங்கு:ஈரானில் 3,000 கல்லறைகள் தோண்டப்பட்டது ஏன்?கசிந்தது ரகசியத் திட்டம்!

 

ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனியின் இறுதிச் சடங்குகளை ஈரான் அரசு அமைதியாக நடத்துவது போலக் காட்டிக்கொண்டாலும், பின்னணியில் மிகப்பெரிய அசம்பாவிதம் ஏதேனும் நடந்துவிடுமோ என்ற கடுமையான அச்சத்தில் அதிகாரிகள் உறைந்து போயுள்ளனர்.

அமெரிக்கா வான்வழித்தாக்குதலில் ஈரானின் உச்சத் தலைவர் அலி கமேனி மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் சிலர் உயிரிழந்தனர். கமேனி உயிரிழந்து 2 மாதங்களாகியும் அவரது உடல் அடக்கம் செய்யப்படாமல் இருந்தது. இதற்கு காரணம் தொடர் போர் சூழல் தான். கமேனி மேலும் கமேனி இறுதி சடங்கிற்கு லட்சணக்கான மக்கள் வருகை தருவார்கள், அப்போது தாக்குதல் நடந்தால் உயிரிழப்புகள் அதிகமாகும் என்ற காரணத்தை காட்டி இறுதிச்சடங்கு நடத்தப்படாமல் இருந்து.

இந்த நிலையில் இன்று அலி கமேனி இன்று நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான மக்கள் திரளப்போகும் இந்த இறுதி ஊர்வலத்தில், கூட்ட நெரிசலால் 1,500 முதல் 3,000 பேர் வரை உயிரிழக்க வாய்ப்புள்ளதாக ஈரான் அதிகாரிகள் அவசரக் காலத் திட்டங்களைத் தீட்டியுள்ளதாக ஜெர்மனியின் பிரபல ‘டி வெல்ட்’ (Die Welt) நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தயார் நிலையில் ஆயிரக்கணக்கான கல்லறைகள்
ஊர்வலத்தின் போது உயிரிழப்பவர்கள் மற்றும் காணாமல் போவோரைக் கையாள்வதற்காகவே அதிகாரிகள் தனிக் குழு ஒன்றை அமைத்துள்ளனர். இதுமட்டுமன்றி, தலைநகர் தெஹ்ரானில் உள்ள ‘பெஹெஷ்ட்-இ ஜஹ்ரா’ மயானத்தில் ஆயிரக்கணக்கான புதிய கல்லறைகள் அவசர அவசரமாகத் தோண்டப்பட்டுத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க திட்டம்! தவெக வியூகம் Explained

பாதுகாப்பு காரணங்களுக்காகப் பெயர் குறிப்பிட விரும்பாத தெஹ்ரான் நகராட்சி ஊழியர் ஒருவர் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். அவர் கூறுகையில், “கல்லறைகள் தோண்டப்பட்டுள்ளது உண்மைதான். இந்த இறுதி ஊர்வலத்தில் 3,000 பேர் வரை இறந்தாலும் பரவாயில்லை (அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்) என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய கூட்டமும், கொளுத்தும் வெயிலும் இருக்கும்போது என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது,” எனப் பீதியுடன் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமையன்று தெஹ்ரானில் தொடங்கிய கமேனியின் இறுதிச் சடங்குகள், புனித நகரான கோம் (Qom) வழியாக, ஈராக்கின் நஜாஃப் மற்றும் கர்பாலா நகரங்களுக்கும் கொண்டு செல்லப்படவுள்ளது. இறுதியாக, வரும் வியாழக்கிழமை மஷாத் (Mashhad) நகரில் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.

முடக்கப்பட்ட தெஹ்ரான்
ஈரான் சமீபத்திய ஆண்டுகளில் கண்டிராத மிகப்பெரிய பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் தற்போது செய்யப்பட்டுள்ளன. தெஹ்ரான் முழுவதும் வாகனப் போக்குவரத்துக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மக்களை ஏற்றி வர ஆயிரக்கணக்கான பேருந்துகள், தற்காலிக சமையல் கூடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வெளி ஊர்களிலிருந்து வரும் மக்கள் தங்குவதற்காகப் பள்ளிகளும், மசூதிகளும் தங்கும் விடுதிகளாக மாற்றப்பட்டுள்ளன. கடுமையான வெயிலும், கட்டுக்கடங்காத கூட்டமும் சேர்ந்து நிலைமையை மோசமாக்கிவிடக் கூடாது என்பதில் அதிகாரிகள் தீவிரமாக உள்ளனர்.

தொடரும் இறுதி ஊர்வல சோகங்கள்
ஈரானில் இறுதி ஊர்வலங்களின் போது மக்கள் இறப்பது இது முதல் முறையல்ல. கடந்த 2020-ல் ஈரானிய தளபதி காசிம் சுலைமானியின் இறுதி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 56 பேர் உயிரிழந்தனர், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதற்கு முன்பாக, 1989-ல் ருஹொல்லா கொமேனியின் இறுதி ஊர்வலத்திலும் பெரும் குழப்பம் ஏற்பட்டு 8 பேர் உயிரிழந்தனர்.

தாக்குதல் நடத்தப்படலாம் எனப் பயம் ஏன்?
கூட்ட நெரிசல் ஒருபுறமிருக்க, வெளிநாட்டுத் தாக்குதல் ஏதேனும் நடந்துவிடுமோ என்ற பயமும் ஈரானுக்கு உண்டு. இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், ஈரானின் அடுத்த உச்ச தலைவராகக் கருதப்படும் மொஜ்தாபா கமேனியை “மரணப் பட்டியலில்” உள்ளதாகக் குறிப்பிட்டதைத் தொடர்ந்து, புரட்சிகர காவல்படை (IRGC) எச்சரிக்கை விடுத்துள்ளது.
முக்கியத் தலைவர்கள் மற்றும் லட்சக்கணக்கான மக்கள் கூடும் இடத்தில் ஒரு சிறிய தாக்குதல் நடந்தாலும் அது பேரழிவை ஏற்படுத்தும் என்பதால், தெஹ்ரான் வான்வெளி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தெருக்களில் ராணுவத்தினர் தீவிரப் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வான்வழியாகவோ அல்லது தரைவழியாகவோ அச்சுறுத்தல் வரலாம் என்பதால் ஈரான் எதையும் அதிர்ஷ்டத்திற்கு விட்டுவிட விரும்பவில்லை என இஸ்ரேல் ராணுவ உளவுத்துறையின் முன்னாள் அதிகாரி டேனி சிட்ரினோவிட்ஸ் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அச்சுறுத்தல்கள்
இஸ்ரேல், அமெரிக்கா போன்ற வெளிநாடுகள் மட்டுமன்றி, ஈரானுக்குள் செயல்பட்டு வரும் குர்திஷ் ஆயுதக் குழுக்கள், அரபு மற்றும் பலூச் பிரிவினைவாதிகள் மற்றும் ஈரானிய அரசால் தடை செய்யப்பட்ட முஜாஹிதீன்-இ கல்க் (MeK) போன்ற உள்நாட்டு அமைப்புகளாலும் ஆபத்து இருப்பதாக ஈரான் அரசு சந்தேகிக்கிறது.

இருப்பினும், இவ்வளவு ஆபத்துகளுக்கு மத்தியிலும், ஈரானின் முக்கியத் தலைவர்கள் இந்த ஊர்வலங்களில் பொதுவெளியில் பங்கேற்கவுள்ளனர். தங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் அசைக்க முடியாதவை என்பதை உலகிற்குக் காட்ட ஈரான் அரசு முயன்று வருகிறது.