ஷார்ஜாவில் இருந்து புறப்பட்ட பாகிஸ்தான் சரக்கு விமானம் மாயம்

 

ஷார்ஜாவில் இருந்து கராச்சி நோக்கிப் புறப்பட்டிருந்த பாகிஸ்தானுக்குச் சொந்தமான போயிங் 737 ரக சரக்கு விமானம், இந்து சமுத்திரத்தின் மேல் பறந்து கொண்டிருந்தபோது திடீரென ரேடார் தொடர்பிலிருந்து விலகி காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த விமானத்தில் ஐந்து பேர் பயணம் செய்திருந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதையடுத்து, சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விமானம் காணாமல் போனதற்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், மேலதிக தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.