மக்கள் தற்போது பெரும் சிரமத்தில் வாழ்ந்து வருவதாகவும், அன்றாட உணவைப் பெறுவதே மக்களுக்கு ஒரு நெருக்கடியாகிவிட்டது என்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இன்று (13) களுத்துறையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களிடம் பேசியபோது முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டைக் காப்பாற்றும் வலிமை
இந்தச் சூழ்நிலையிலிருந்து நாட்டைக் காப்பாற்றும் வலிமை, சிறிலங்கா பொதுஜன பெரமுன என்ற வகையில், தனக்கும் தனது குழுவிற்கும் உண்டு என்று மகிந்த ராஜபக்ச கூறினார்.
” அதிகாரத்தைக் கொடுத்தால் அதைக் காட்டும் வலிமை தமக்கு உண்டு,” என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.




