ரஷ்யா - உக்ரைன் போர்; வெற்றி யாருக்கு?

18 Apr,2022
 

 
 
53 வது நாளாக தொடரும்உக்ரைன் ரஷ்யா போர்
ரஷ்யா உக்ரைன் இடையோன போர் துவங்கி இன்றுடன் 53 நாளாக தொடர்கிறது. தற்போதைய சூழ்நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ்-ல் ரஷ்ய படைகள் புதைத்து வைத்துள்ள கண்ணிவெடிகளை கண்டறிந்து அகற்றும் பணியில் உக்ரைன் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
 
17 Apr 2022
4:33 PM IST
தாக்குதல் தீவிரம்
உக்ரைனின் மரியூபோல் நகரில் ரஷ்யபடை தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளது. இதில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சரண் அடைய ரஷ்யா வலியுறுத்தி வருவதாக தெரிகிறது.
 
16 Apr 2022
2:37 PM IST
ரஷ்யா மீண்டும் புதிய தாக்குதல் !
 
உக்ரைன் தலைநகர் கியூவில் 16 இடங்களில் ரஷ்யா புதிய தாக்குதல் நடத்தியிருப்பதாகவும் , இதில் ராணுவ கிடங்குகள் சில தகர்க்கப்பட்டதாகவும் தெரிகிறது . உயிர்ச்சேதம் குறித்த தகவல் இல்லை.
 
7:43 AM IST
ஆயுதங்கள் வழங்க வேண்டாம்; ரஷ்யா எச்சரிக்கை
 
 
உக்ரைன் நாட்டிற்கு போர் தளவாட ஆயுதங்களை அனுப்பி வரும் அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகளுக்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
 
ரஷ்யா தங்கள் நாட்டின் மீது அணுகுண்டு தாக்குதலை நடத்தலாம் என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி உலக நாடுகளுக்கு தெரிவித்துள்ளார்.
 
15 Apr 2022
4:50 PM IST
தாக்குதலை அதிகரிப்போம்; ரஷ்யா எச்சரிக்கை
 
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ரஷ்யாவில் தாக்குதல் நடத்த உக்ரைன் திட்டமிட்டாலோ அல்லது சதி செய்தாலோ, கீவ் நகரில் ஏவுகணை மூலம் கடுமையான தாக்குதல் நடத்துவது அதிகரிக்கப்படும். கீவ் நகருக்கு வெளியே உள்ள ராணுவ தொழிற்சாலைகள் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தின. இதில், கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள், நீண்ட தூரம் மற்றும் குறுகிய தூர விமானங்களை தாக்கிஅழிக்கும் ஏவுகணைகள் அழிக்கப்பட்டன.
 
ரஷ்யாவின் கிலிமோவா பிராந்தியத்தில் பொது மக்கள் மீது தாக்குதல் நடத்த வந்த உக்ரைனின் எம்ஐ- 8 ஹெலிகாப்டர்களை,எஸ்-400 ஏவுகணை அமைப்பு தாக்கி வீழ்த்தியது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
4:49 PM IST
ரஷ்யா மீது தாக்குதல்
இரு நாட்டு எல்லையில் உள்ள பிரைன்ஸ்க் பகுதியில் வெடிகுண்டுகளை வீச உக்ரைன் ஹெலிகாப்டர்களை அனுப்பி வைத்ததாகவும், அதில் 8 பேர் காயமடைந்ததாக நேற்று(ஏப்.,14) ரஷ்யா குற்றம்சாட்டியது. அதேநாளில் ரஷ்யாவின் பெ்கோரோட் பகுதி உயர் அதிகாரி கூறுகையில், எல்லை பகுதியில் உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தியது. அங்கு மற்றும் அண்டை கிராமங்களில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.ஆனால், இதனை மறுத்த உக்ரைன், ரஷ்யாவில் உக்ரைனுக்கு எதிர்ப்பு மனநிலையை அதிகப்படுத்த அந்நாடு முயற்சி செய்வதாக குற்றம்சாட்டினார்.
 
1:33 PM IST
கியூவில் ரஷ்ய ராணுவம் தாக்குதல்
 
உக்ரைன் தலைநகர் கியூவில் பல இடங்களில் ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக அங்கிருந்து வரும் தவகல்கள் தெரிவிக்கின்றன. பலத்த சபத்தத்துடன் இந்த தாக்குதல் இருந்ததாகவும், நகரின் பல பகுதிகளில் ஆம்புலன்ஸ் வாகனம் சைரன் சப்தத்துடன் சென்று வருவதாகவும் கூறப்படுகிறது.
 
10:07 AM IST
ரஷ்ய கப்பல் மீது தாக்குதல் வெற்றி
 
கருங்கடலில் ரஷ்ய ஆயுத கப்பல் ஏவுகணை தாக்குதலில் அழிந்தது. இதனை உக்ரைன் அரசு உறுதி செய்துள்ளது. தாங்கள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் தான் இந்த கப்பல் அழிக்கப்பட்டது என அறிவித்துள்ளது.
 
14 Apr 2022
3:38 PM IST
ரஷ்ய போர்க்கப்பல் கடும் சேதம்
 
 
கருங்கடல் பகுதியில், உக்ரைன் கடற்கரை நகரங்கள் மீது தாக்குதல் நடத்திய போர்க்கப்பல் ஆயுதங்கள் வெடித்ததில் பலத்த சேதமடைந்துள்ளது. இதற்கு, உக்ரைன் ராணுவம் நடத்திய தாக்குதலே காரணம் என அந்நாட்டின் மாகாண கவர்னர் கூறியுள்ளார்.
 
இது தொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அளித்த விளக்கத்தில், தீவிபத்தின் விளைவாக வெடிமருந்துகள் வெடித்தது. இது குறித்து விசாரணை நடக்கிறது. கப்பலில் இருந்தவர்கள் மீட்கும் முயற்சிகள் நடப்பதாக தெரிவித்துள்ளது. இந்த கப்பலில் இருந்து தான், மரியபோல், ஒதீசா உள்ளிட்ட கடற்கரை நகரங்களை ரஷ்யா தாக்குதல் நடத்தியது.
 
3:33 PM IST
ரஷ்யா எச்சரிக்கை
ரஷ்யா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட அதிகார மையங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
3:33 PM IST
7 வது வாரமாக ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொண்டு வரும் உக்ரைனுக்கு, ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட ராணுவ ரீதியில் 800 கோடி டாலர் மதிப்பில் உதவி வழங்குவதாக அமெரிக்க அதிபர் பைடன் அறிவித்துள்ளார்.
 
3:30 AM IST
துறைமுக நகரமான மரியுபோல், ரஷ்ய வீரர்களால் சுற்றி வளைக்கப்பட்டு உள்ளது. இதனால், அங்கிருந்து மக்கள் வெளியேற முடியாத சூழல் நிலவுகிறது. அங்கு, ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் சிக்கி உள்ளதாக மேயர் வாடிம் பொய்சென்கோ தெரிவித்து உள்ளார்.
 
13 Apr 2022
3:32 PM IST
சரண்
 
 
மரியுபோல் நகரில், உக்ரைன் ராணுவ வீரர்கள், 1,026 பேர், சரணடைந்துள்ளதாக ரஷ்ய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
 
2:58 PM IST
கீவ் நகரில் இருந்து வெளியேறிய ரஷ்ய படையினர், நாட்டின் கிழக்குப் பகுதிகளில், தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர். கார்கிவ் நகரில், ரஷ்ய படையினர் நேற்று நடத்திய பீரங்கித் தாக்குதலில், ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்; 22 பேர் காயமடைந்துள்ளனர்.
 
1:51 PM IST
தனிமைப்படுத்த முடியாது
ரஷ்ய அதிபர் புடின் கூறுகையில் , உக்ரைன் கிழக்கு பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாக்கவும், ரஷ்யாவின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தாக்குதல் நடத்துவதை தவிர வேறு வழியில்லை. தாக்குதல் முழுமை பெறும் வகையிலும், நிர்ணயிக்கப்பட்ட பணிகள் முழுமை பெறும் வரையிலும் போர் தொடரும். ரஷ்யாவை தனிமைப்படுத்த முடியாது எனக்கூறினார்.
 
1:50 PM IST
விசாரணை
கிழக்கு பகுதியில் உள்ள டோன்போஸ் நகரிலும் தாக்குதல் நடக்கிறது. அங்கு, தங்கள் நாட்டு வீரர்களை குறிவைத்து விஷவாயு வீசப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ள உக்ரைன், அது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளது.
 
6:58 AM IST
இனப்படுகொலை; பைடன் விமர்சனம்
 
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முதன் முறையாக உக்ரைனில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இனப்படுகொலை செய்துள்ளதாக விமர்சனம் செய்துள்ளார்.
 
12 Apr 2022
4:39 PM IST
சிறை
 
உக்ரைன் பத்திரிகையாளர்களை ரஷ்யா சிறை வைத்துள்ளதாக உக்ரைன் துணை பிரதமர் இரினா வெரேஸ்சுக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
 
2:01 PM IST
பெண்களை பலாத்காரம் செய்த ரஷ்ய வீரர்கள்
 
உக்ரைனில் போர் நடத்திய வீரர்கள் மீது செக்ஸ் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கியூ நகரில் பல பெண்களை பலவந்தப்படுத்தி அந்த செயலில் ஈடுபட்டதாகவும் பல பெண்களே கூறியுள்ளனர். அதே நேரத்தில் சில மனைவிகள் கண்முன்னே கணவனை சுட்டு கொன்று பின்னர் பெண்களை பலாத்காரம் செய்ததாகவும் சிலர் கூறியுள்ளனர்.
 
11:37 AM IST
உக்ரைன் மக்கள் 20 ஆயிரத்தை தாண்டும் !
 
மரியூபோல் நகர மேயர் வாடீம்பாய்ஷென்கோ கூறியுள்ளதாவது; இந்நகரில் இது வரை 10 ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது. இன்னும் தெருக்களில் பிணங்கள் சிதறி கிடக்கிறது. மொத்தம் 20 ஆயிரத்தை இறந்தவர்கள் எண்ணிக்கை தொடலாம் என்றார். நட்புநாடுகள் முன்கூட்டியே கூடுதல் ஆயுதங்கள் தந்திருந்தால் உயிரிழப்பை தவிர்த்திருக்கலாம் என உக்ரைன் ஆளும் கட்சி குறை கூறியுள்ளது.
 
7:05 AM IST
உக்ரைன் கிழக்கு பகுதியில் ரஷ்ய ராணுவம் தீவிரம்
 
உக்ரைனின் கிழக்கு பகுதிகளில் ரஷ்யா அடுத்த தாக்குதலுக்காக ஆயிரக்கணக்கான வீரர்களை குவித்து வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
மரியுபோல் நகரில் ரஷ்யப் படைகள் ரசாயண ஆயுதங்களை கொண்டு தாக்கியுள்ளதாக வந்த செய்திகளை ஆய்வு செய்துவருவதாக அமெரிக்க மற்றும் பிரிட்டன் கூறியுள்ளது.
 
 
11 Apr 2022
2:55 PM IST
ரஷ்யாவை எதிர்க்க உக்ரைன் வியூகம் !
 
உக்ரைனின் கிழக்கு பகுதியில் ரஷ்யா ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ டாங்குககளை நிறுத்தி உள்ளது. மேலும் தாக்குதல் அதிகரிக்கக்கூடும் என உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கர்மாடோஸ், செர்னிகிவ், மக்கோரியு பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேறுமாறு உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்ய படைகளை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் உக்ரைன் கூறியுள்ளது. நேட்டோ நாடுகள் வழங்கிய கூடுதல் ஆயுதங்கள் உக்ரைனுக்கு கூடுதல் தைரியத்தை தந்துள்ளது.
 
10 Apr 2022
11:38 PM IST
மிகப்பெரிய போருக்கு உக்ரைன் தயார்!
 
ரஷ்யாவுக்கு எதிராக மிகப்பெரிய போருக்கு உக்ரைன் தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் ஆலோசகர் மைக்கெலோ பொடொல்யாக் தேசிய தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலூம், இரு பிரிவினைவாத பகுதிகளை உள்ளடக்கிய கிழக்கு டோன்பாஸ் பிரதேசத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ரஷ்யப் படைகளை உக்ரைன் முறியடிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
 
12:53 PM IST
உக்ரைன் சென்றார் பிரிட்டன் பிரதமர் போரீஸ்
 
ரஷ்ய படை தாக்குதல் ஒரு பக்கம், சாலைகளில் பிணங்கள் , பல எரிந்து சாம்பலான கட்டடங்கள் , மறு புறம் படைகள் குவிப்பு என பதட்டம் நிலவும் சூழலில் பிரிட்டன் பிரதமர் ஜான் போரீஸ் உக்ரைன் சென்றார். அங்கு அவர் உக்ரைன் நாட்டு அதிபர் செலன்ஸ்கியுடன் முக்கிய சந்திப்பு நடத்தினார். தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பாதுகாப்பு படையினருடன் சென்று பார்வையிட்டனர். போரீஸ் வருகையால் செலன்ஸ்கி கூடுதல் உற்சாகம் அடைந்துள்ளார்.
 
09 Apr 2022
1:27 PM IST
போர் தலைமை ஜெனரல் மாற்றம்
உக்ரைனில் போரை வழிநடத்தி வரும் போரை தலைமை ஏற்று நடத்தும் கவர்னர் மாற்றப்பட்டுள்ளார். ஜெனரல் அலெக்சாண்டர் டி வோர்னிகோவ் பொறுப்பேற்க உள்ளதாக ஐரோப்பிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது . இவர் சிரிய மீதான போர் நடவடிக்கைக்கு பொறுப்பேற்று நடத்தியவர் ஆவார்.
 
08 Apr 2022
4:10 PM IST
பிரிட்டன் தடை
உக்ரைன் மீது தாக்குதலை கண்டித்து, ரஷ்ய அதிபர் புடின் மகள் மீது அமெரிக்கா தடை விதித்துள்ள நிலையில், பிரிட்டனும் தடை விதித்து, அவர்களின் சொத்துகளை முடக்கியுள்ளது.
 
4:10 PM IST
35 பேர் பலி
ரஷ்யாவின் தாக்குதல் தொடர்பாக ரயில்வே நிறுவனம் வெளியிட்ட அறிக்கை; இந்த தாக்குதலில் குறைந்தது 35 பேர் உயிரிழந்துள்ளனர்.100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். ரயில் நிலையத்தில், பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்காக மக்கள் காத்திருந்த நிலையில், இந்த தாக்குதல் நடந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 
2:06 PM IST
கிழக்கு பகுதியில் தாக்குதல் துவக்கம்
 
உக்ரைனின் கிழக்கு பகுதியில் ரஷ்ய தாக்குதல் துவங்கியதாக அங்கிருந்த வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்குள்ள 2 ரயில் நிலையங்களில் ரஷ்ய ஏவுகணை தாக்குதல் நடந்ததாகவும், இது குறித்த சேதம் ஏதும் வெளியாகவில்லை.
 
12:31 PM IST
போர் சட்ட மீறல் எத்தனை ?
 
உக்ரைனில் ரஷ்யா போர்குற்றம் புரிந்துள்ளது என உக்ரைனின் நட்பு நாடுகள் தொடர்ந்து கூறி வருகின்றன. இதற்கிடையில் ரஷ்ய நடத்திய போர்குற்றங்களை பட்டியலிட்டுள்ளது. இதன் சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு தகவலில்: ரஷ்யா இது வரை மொத்தம் 5,149 போர் குற்றம் புரிந்துள்ளது. உக்ரைன் தேசிய பாதுகாப்பு படையினருக்கு எதிராக குற்றம் புரிந்தததாக 2,541 வழக்குகளும், மிக முக்கிய போரகொடூர குற்றம் 432 என்றும் தெரிவித்துள்ளது. இதுபோல் 169 குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும், 306 குழந்தைகள் காயமுற்றதாகவும் இந்த விவரத்தில் கூறப்பட்டுள்ளது. போர் சட்டங்களை மீறிய ரஷ்யா , உக்ரைன் நாட்டு சட்டங்களை மீறியதாகவும் தெரிவிக்கிறது சட்ட அமைச்சகம்.
 
9:50 AM IST
உக்ரைன் படையினர் ஆய்வு
 
போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் மக்கள் மாற்று இடம் நோக்கி நகர்ந்து செல்கின்றனர். கியூ மற்றும் மரியுபோல், புச்சா உள்ளிட்ட நகரங்களை விட்டு ரஷ்ய படையினர் வெளியேறி உள்ளனர். இந்த பகுதிகளில் வெடிகுண்டுகள் ஏதும் உள்ளதா என உக்ரைன் படையினர் மோப்ப நாய் உதவியுடன் தேடி வருகின்றனர்.
 
07 Apr 2022
9:43 PM IST
ஐ.நா., மனித உரிமை அமைப்பில் இருந்து ரஷ்யா இடை நீக்கம்
நியூயார்க்: ஐ.நா., மனித உரிமை அமைப்பில்இருந்து ரஷ்யா இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
3:11 PM IST
கூடுதல் ஆயுதங்கள் தாருங்கள்
 
ரஷ்யாவுடன் போரிட எங்களுக்கு கூடுதல் ஆயுதங்கள் தேவைப்படுகிறது. எனவே நேட்டோ நாடுகள் விரைந்து ஆவன செய்ய வேண்டும் என உக்ரைன் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
 
8:48 AM IST
உக்ரைன் மக்களுக்கு துணிச்சல்: அமெரிக்கா பாராட்டு
 
ரஷ்யாவுடனான போரில் உக்ரைன் நிச்சயம் வெற்றி பெறும், வெற்றி பெற வேண்டும் என அமெரிக்க பென்டகன் செய்தி தொடர்பாளர் ஜான்கிர்பி கூறியுள்ளார். ரஷ்யாவுக்கு எதிராக தங்களின் நாட்டை காப்பாற்ற உக்ரைன் மக்கள் துணிச்சலுடன் போராடி வருகின்றனர்.
 
7:35 AM IST
ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தலாம்; உக்ரைன் துணை பிரதமர்
 
உக்ரைன் நாட்டின் லுஹான்ஸ்க், கார்கிவ் மற்றும் டொனெட்ஸ்க் பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு உக்ரைன் துணை பிரதமர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஏனெனில் ரஷ்யா அப்பகுதிகளில் தாக்குதலை தீவிரப்படுத்தும் என்ற அச்சம் நிலவுகிறது.
 
06 Apr 2022
11:33 AM IST
இந்தியா வலியுறுத்தல்
உக்ரைனின் புச்சா நகரில் பொது மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, இந்த சம்பவம் தொடர்பாக சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக்கூறியுள்ளது.
 
11:29 AM IST
பிரிட்டன் பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், உக்ரைனின் மரியபோல் நகரில், கடுமையான மோதல் நடந்து வருகிறது. விமானப்படைகள் மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்து வருகிறது. அங்கு சூழ்நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது என தெரிவித்துள்ளது.
 
11:28 AM IST
உக்ரைனுக்கு இன்னும் ஆதரவு அளிப்பது தொடர்பாக நேடோ அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள், பிரஸ்ஸல்ஸ் நகரில் ஆலோசனை நடத்த உள்ளனர்.
 
11:07 AM IST
3இல் 1 வது புகைப்படம்
Photo Gallery
Photo Gallery
Photo Gallery
Next
11:06 AM IST
சோகத்தை ஏற்படுத்திய படம்
 
உக்ரைன் நாட்டவர்களை ரஷ்ய வீரர்கள் சித்ரவதை செய்து, கொலை செய்து உடல்களை சாலைகளில் வீசியுள்ள படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சமூக வலைதளங்களில் வெளியான படம் ஒன்று போரின் சோகத்தை உணர்த்தியுள்ளது.தன் சிறு குழந்தையின் முதுகில் தாய் தன் பெயர், தொலைபேசி எண் ஆகியவற்றை எழுதியுள்ளார். ஒருவேளை தான் ரஷ்யப் படைகளால் கொல்லப்பட்டால் அல்லது பிரிய நேரிட்டால், குழந்தையால் குடும்பம் குறித்த விபரங்களை தெரிவிக்க முடியாது என்பதால், அதன் முதுகில் எழுதியுள்ளதாக அந்த தாய் தெரிவித்துள்ளார். இதுபோல, பல பெற்றோர், தங்களுடைய விபரங்களை குழந்தைகளின் முதுகில் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.
 
11:06 AM IST
'ஆசிட் டேங்கர்' வெடிப்பு
 
உக்ரைனின் கிழக்கே உள்ள லுஹான்க்ஸ் பகுதி மக்களுக்கு அந்தப் பிராந்திய அரசு புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில், 'நைட்ரிக் ஆசிட்' ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி வெடித்துச் சிதறியுள்ளது. இதனால், நச்சுப் புகை பரவும் அபாயம் உள்ளது. அதனால், ஜன்னல் உள்ளிட்டவற்றை மூடி மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமபடி, பிராந்திய அரசு எச்சரித்துள்ளது.
 
11:06 AM IST
பயங்கரவாத நாடு
ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி நேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ரஷ்யாவின் போர் நடவடிக்கை, எந்தவொரு பயங்கரவாத அமைப்பின் நடவடிக்கைகளுக்கும் சற்றும் குறைவில்லாததாக இருக்கிறது. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக உள்ள ஒரு நாடே இதுபோன்ற பயங்கரவாதத்தில் ஈடுபட்டுள்ளது. ஆனால், உக்ரைனில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை உலக நாடுகள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை.இவ்வாறு அவர் பேசினார்.
 
11:05 AM IST
குற்றச்சாட்டு
உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் இருந்து படைகளை திரும்பப் பெறும் நிலையில், நாட்டின் தென்கிழக்கு பிராந்தியத்தில் தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
 
5:21 AM IST
எந்த போர் குற்றத்தையும் செய்யவில்லை; ரஷ்யா
 
ரஷ்யா எந்தவொரு போர் குற்றத்தையும் செய்யவில்லை. புச்சா பகுதியில் கிடக்கும் உடல்கள், ரஷ்ய படையினரால் கொல்லப்படவில்லை என ஐக்கிய நாடுகள் சபைக்கான ரஷ்ய தூதர் தெரிவித்துள்ளார்.
 
04 Apr 2022
3:07 PM IST
உக்ரைனுக்கு பிரிட்டன் பிரதமர்
 
பிரிட்டன் பிரதமர் போரீஸ் வெளியிட்டுள்ள வீடியோவில்; உக்ரைன் மக்களின் எழுச்சியை புடின் தடுக்க முடியாது. அது போல் அவரால் உக்ரைனை கைப்பற்றவும் முடியாது. நாங்களும் ஆயுதம் உள்ளிட்ட எங்களால் முடிந்த உதவிகளை வழங்கியுள்ளோம். உக்ரைன் மக்கள் மீண்டு வருவர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 
12:15 PM IST
கைகள் கட்டப்பட்ட நிலையில் பிணங்கள்
 
உக்ரைனின் புச்சா நகரில் ஒரு இடத்தில் 10 க்கும் மேற்பட்ட பிணங்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் நெற்றியில் சுடப்பட்டு கிடந்தன.
 
11:40 AM IST
மொத்தமாக பிணங்கள் புதைப்பு
 
உக்ரைனின் புச்சா நகரில் நூற்றுக்கணக்கான பிணங்கள் சிதறி கிடப்பதாகவும், பல பிணங்கள் ஒரே இடத்தில் புதைக்கப்படுவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் மொத்தமாக புதைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
 
7:39 AM IST
போர்க்குற்றம்; உலக நாடுகள் கண்டனம்
 
கொடூரமான போர்க் குற்றம் நடந்துள்ளது; ஜெர்மனி கண்டனம். போர்க்கள காட்சிகளின் படங்கள் தாங்க முடியாத அளவில் இருக்கிறது என பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் தெரிவித்துள்ளார். போர்க்குற்றத்துக்கு ஆதாரமாக வெறுக்கத்தக்க தாக்குதல் நடந்துள்ளது என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.
 
 
03 Apr 2022
3:52 PM IST
உக்ரைனின் கிழக்கு பகுதியில் தாக்குதல்
 
உக்ரைனின் கிழக்கு பகுதியில் ரஷ்யா புதிய தாக்குதலை துவக்கி இருக்கிறது. துறைமுக நகரான ஓடேசாவில் ரஷ்யா இன்று ஏவுகணை தாக்குதலை நடத்தி இருக்கிறது. இங்கு பலத்த சப்தத்துடன் பெரும் குண்டு வெடித்தாதாகவும் தொடர்ந்து கரும்புகை கிளம்பி வான் அளவை தொட்டதாகவும் அங்குள்ள உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இங்குள்ள எண்ணெய் கிடங்கை அழிக்கும் நோக்கில் ரஷ்யா ஏவுகணையை வீசியிருக்கலாம் என கூறப்படுகிறது.
 
8:41 AM IST
ராணுவ பணி கட்டாயம் !
 
உக்ரைனில் வசிக்கும் மக்களை ராணுவத்தில் இணைந்து பணியாற்றுமாறு கட்டாயப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இஐ.டி. மாணவன் இவான் என்பவர் இந்த புகாரை கூறியுள்ளார். வாழ்வில் துப்பாக்கியை கையில் ஏந்தாத என்னை துப்பாக்கி எடுக்க சொல்கின்றனர் என்கிறார்.
 
7:30 AM IST
கீவ் நகர் முழுவதும் உக்ரைன் கட்டுப்பாட்டில் வந்தது
 
 
உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து ரஷ்யப் படைகள் வாபஸ் பெறப்பட்டு வருவதால், உக்ரைன் படைகள் கிவ் நகரைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளன என்று உக்ரைன் துணைப் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
02 Apr 2022
2:59 PM IST
பிரிட்டனும் தாக்கியது !
 
உக்ரைனில் ரஷ்ய போர் துவங்கியதில் இருந்து இரு படையினர் இடையேகடும் போராட்டம் நடந்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நேட்டோ நாடுகள் தங்களின் ஆதரவை தெரிவித்து கூடுதல் ஆயுதங்களை வழங்கி வருகிறது. இதற்கிடையில் உக்ரைனின் கிழக்கு லுகான்ஸ்க் ரஷ்யாவின் எம்.ஐ28என்ற ஹெலிகாப்டரை பிரிட்டன் ஏவுகணை தாக்கி வீழ்த்தியது.
 
8:32 AM IST
ரஷ்யாவின் எண்ணை நிறுவனம் மீது தாக்குதல்
உக்ரைனின் எல்லை பகுதியில் அமைந்துள்ள ரஷ்ய பெல்குரோட் என்ற பகுதியில் உக்ரைன் ஹெ லிகாப்டர்கள் சென்று குண்டுகளை போட்டதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது. இதனை ரஷ்ய, உக்ரைன் படையினர் உறுதி செய்யவில்லை .
 
01 Apr 2022
10:57 AM IST
நேட்டோ அதிகாரிகள் கவலை
 
உக்ரைனில் மீண்டும் ரஷ்யா தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக நேட்டோ அதிகாரிகள் கூறியுள்ளனர். உக்ரைன் கிழக்கு பகுதியை தாக்கக்கூடும் என்றும் அச்சம் தெரிவித்துள்ளது. மேலும் 2 ஆயிரம் பேர் கொண்ட ராணுவ வீரர்களை அனுப்ப ரஷ்யா தயாராகி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
31 Mar 2022
3:09 PM IST
அச்சமுறும் ஆலோசகர்கள்
 
உண்மையை சொல்ல ரஷ்ய அதிபர் புடினின் ஆலோசகர்கள் அஞ்சுவதாக அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்று தெரிவிக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் புடினின் முக்கிய ஆலோசகர் ஒருவர் பதவி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
10:28 AM IST
ராணுவ தளபதி -புடின் இடையில் மோதலா ?
 
உக்ரைன் மீது நடத்திய போரில் எதிர்பார்த்த அளவுக்கு பலன் கிட்டவில்லை என்பதால் ரஷ்ய ராணுவ தளபதிகள், அதிபர் புடின் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான உளவுத்துறை தகவல் அமெரிக்காவுக்கு கிடைத்துள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரம் தெரிவிக்கிறது. போரை நடத்த சில தளபதிகளே முன்மொழிந்ததாகவும், இதனை புடின் புறக்கணித்திருக்கலாமோ என்று தற்போது சிந்திப்பதாகவும் கூறப்படுகிறது.
 
9:04 AM IST
மரியூபோல் நகரில் ஒரு நாள் போர் நிறுத்தம்
 
உக்ரைனின் மரியூபோல் நகரில் இன்று மனிதாபிமான அடிப்படையில் இன்று (மார்ச்.31) ஒரு நாள் மட்டும் போர் நிறுத்தம் செய்யப்படுகிறது. மக்கள் வெளியேறுவதற்கு ஏதுவாக ராணுவ நடவடிக்கை நிறுத்தப்படுவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. மரியூபோல் நகரம் ரஷ்ய கட்டப்பாட்டுக்குள் இருப்பதாகவும் ஒரு தகவல் தெரிவிக்கிறது.
 
7:11 AM IST
யூரோக்களையே அனுமதிக்க வேண்டும்; ஜெர்மனி
 
 
ரஷ்யாவிடமிருந்து ஐரோப்பிய நாடுகள் வாங்கும் இயற்கை எரிவாயுவிற்கு ஈடாக யூரோக்களையே செலுத்த ரஷ்யா அனுமதிக்க வேண்டும். மாறாக ரூபில்களை செலுத்தச் சொல்வது, அச்சுறுத்துவது போல் உள்ளது என ஜெர்மனி தெரிவித்துள்ளது.
 
6:25 AM IST
உக்ரைன் மீது தாக்குதலை தொடரும் ரஷ்யா
கீவ்: ராணுவ நடவடிக்கைகளை குறைத்துக் கொள்வதாக ரஷ்யா கூறியிருந்த நிலையில் உக்ரைனின் வடக்கு பகுதியில் தாக்குதலை மீண்டும் துவங்கி உள்ளது. செனிசிவ் மற்றும் கீவ் நகரங்களில் புதன் இரவு முதல் தாக்குதலை ரஷ்யா துவங்கியுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது
 
30 Mar 2022
5:15 PM IST
முன்னேற்றமில்லை
 
ரஷ்யா அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், தாங்கள் என்ன முன்மொழிகிறோம் என்பதை எழுத்துப்பூர்வமாக அளிப்பதாக உக்ரைன் கூறியுள்ளது மட்டுமே சாதகமாக விஷயம். தற்போது வரை அதனை எங்களால் பெற முடியவில்லை. மற்ற விஷயங்களை தற்போது எதுவும் கூற முடியாது. தற்போதைய நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை.
 
5:15 PM IST
நிபந்தனை
பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் ரஷ்ய அதிபர் புடின் தொலைபேசியில் பேசினார். அப்போது, உக்ரைன் வீரர்கள் சரணடைந்தால், மரியபோல் நகர் மீதான தாக்குதல் நிறுத்தப்படும் என புடின் கூறியதாக ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.அதேநேரத்தில், அந்நகரில் சிக்கியுள்ள மக்களை மீட்பதற்கு உதவும் திட்டம் குறித்து பரிசீலனை செய்வதாக புடின் உறுதி அளித்துள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
 
8:55 AM IST
அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு
ரஷ்யாவில் இருக்கும் தங்கள் நாட்டினர் உடனே வெளியேற அமெரிக்க வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. ரஷ்யா தடுத்து வைக்கலாம் என்பதால் அமெரிக்கர்கள் உடனே வெளியேற வேண்டும். ரஷ்யாவுக்கு பயணம் செய்வதை அமெரிக்கர்கள் தவிர்க்க வேண்டும் எனவும் அமெரிக்க வெளியுறுவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
 
29 Mar 2022
8:48 PM IST
நேட்டோ உச்சி மாநாட்டிற்கு உக்ரைன் அழைப்பு
ஏப்ரல் 6-7 தேதிகளில் திட்டமிடப்பட்ட நேட்டோ உச்சிமாநாட்டிற்கு உக்ரைன் அழைத்துள்ளது. இந்த உச்சிமாநாடு பிரஸ்ஸல்ஸில் நடைபெறவுள்ளது. ஜார்ஜியா, பின்லாந்து, ஸ்வீடன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான் மற்றும் கொரியா குடியரசு ஆகியவை உறுப்பினர் அல்லாத பிற நாடுகள் அழைக்கப்படுகின்றன.
 
5:49 PM IST
படைகளை குறைக்கும் ரஷ்யா
உக்ரைன் தலைநகர் கீவ் அருகே செர்னிகிவ் பகுதியில் ரஷ்யா படைகளை குறைக்க உள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. மேலும், துருக்கியில் நடைபெற்ற பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்ததாக ரஷ்ய குழுவினர் தகவல் தெரிவித்தனர்.
 
3:04 PM IST
பிற நாடுகளிடம் ஆயுதம் கேட்கிறார்
 
ரஷ்யாவுக்கு அஞ்சி பிற நாட்டவர்கள் எங்களுக்கு உதவுவதில் அஞ்ச வேண்டாம். மாஸ்கோவுக்கு பதிலடி கொடுத்திட தைரியமான ஆயுதங்களை வழங்குங்கள். அச்சம் சிலரை கட்டிப்போடுகிறது. ஆயுதங்கள் வரவில்லை என்பதால் உக்ரைனியர்கள் சாகக்கூடாது. இவ்வாறு உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கூறியுள்ளார்.
 
2:17 PM IST
நாய், பூனை கறி சாப்பிடும் ரஷ்ய படையினர் ?
 
கார்கோவ்: போர் நடந்து வரும் உக்ரைன் நாட்டில் 30 லட்சத்திற்கும் மேலானவர்கள் அகதிகளாக சென்றுள்ளதாக ஐ .நா., புள்ளி விவர அறிக்கை தெரிவிக்கிறது. இவர்கள் உடமைகளை கொண்டு செல்லவே சிரமப்படும் போது பாசமாக வளர்த்த வீட்டு பிராணிகளை பிரிய மனமில்லாமல் பெரும் கவலைக்குள் சிக்கி உள்ளனர். இதனை கண்ட போலந்து நாட்டில் கார்கோவ் நகரில் தன்னார்வலர் தம்பதியினர் வீட்டு வளர்ப்பு பிராணிகளுக்கென ஒரு முகாம் அமைத்துள்ளார். இதில் அகதிகள் பிராணிகளை விட்டு செல்லலாம். இலவசமாக பத்திரமாக பார்த்து கொள்கின்றனர். அதிலும் ரஷ்யா படையினர் உணவு தட்டுப்பாடு காரணமாக நாய், பூனை, எலியை கொன்று சாப்பிட துவங்கி இருப்பதாகவும் பரவுகிற ஒரு தகவல் வீட்டு பிராணி வளர்ப்போரை பெரும் அதிர்ச்சிக்குள் தள்ளியுள்ளது.
 
10:16 AM IST
ரஷ்யா, உக்ரைன் 6 வது சுற்று பேச்சு
ரஷ்யா , உக்ரைன் இடையிலான 6 வது சுற்று பேச்சு இன்று துருக்கியில் நடக்கிறது. இதற்கான பேச்சு குழுவினர் இன்று காலையில் துருக்கியில் கூடினர்.
 
28 Mar 2022
3:17 PM IST
பிரிட்டன் வர்த்தகம் தொடர்பான உத்தரவு
 
ரஷ்யாவுடன் பொது நிறுவனங்கள் எந்தவொரு வர்த்தக தொடர்பையும் வைத்து கொள்ள வேண்டாம். என பிரிட்டன் அரசு உத்தரவிட்டுள்ளது.
 
1:39 PM IST
கியூ நகரில் ஆன்லைன் வகுப்புகள்
 
ஒரு புறம் போர் நடந்தாலும் மாணவர்கள் பள்ளி படிப்பை கருதி ஆன்லைனில் பாடம் துவக்கி இருப்பதாக கியூ நகர மேயர் விட்டாலி கிளிட்ஸ்கோ கூறியுள்ளார். ராணுவ சட்டங்கள் நடைமுறையில் இருந்தாலும் கல்விப்பணி மிக முக்கியமானதாகும். என்றும் தெரிவித்துள்ளார் மேயர்.
 
11:49 AM IST
அமைதியை எதிர்நோக்கி.,
 
கடும் போர் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருப்தால் ரஷ்யா உக்ரைனுடன் உடனடி பேச்சு நடத்த வேண்டும். தாமதிக்காமல் அமைதியை நிலைநாட்ட பேச்சு மிக அவசியம். அமைதியை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கூறியுள்ளார்.
 
6:22 AM IST
உக்ரைனின் விவ் நகரில் ரஷ்யா தொடர் ஏவுகணை தாக்குதல்
விவ்: உக்ரைன் ரஷ்யா இடையே 33 நாட்களாக போர் நீடித்து வருகிறது. உக்ரைன் நகரின் விவ் நகரில் ரஷ்யா நடத்திய தொடர் ஏவுகணை தாக்குதலில் பலத்த சேதம் ஏற்பட்டது. அந்நகரில் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே துகுக்கியில் பேச்சுவார்த்தை நடக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
27 Mar 2022
8:05 PM IST
உக்ரைனை இரண்டாக உடைக்க ரஷ்யா முயற்சி
உக்ரைனை இரண்டாக உடைக்க ரஷ்யா முயற்சி செய்யலாம் என்று உக்ரைனின் ராணுவ உளவுப்புரிவு தலைவர் கைரிலோ புடானோவ் தெரிவித்துள்ளார்.
 
3:14 PM IST
சீயோலில் ஆர்பாட்டம்
 
ரஷ்ய அதிபர் புடினுக்கு எதிராக தென்கொரியா தலைநகர் சீயோலில் ஆர்பாட்டம் நடந்தது.
 



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies