தனிமைப்படுத்தப்பட்ட தங்கும் விடுதிகள் அதிகரிப்பு: பயணிகளுக்கு அதிமான விருப்பத் தேர்வு!60பேர் உயிரிழந்துள்ளனர்.
04 Mar,2021
கூட்டாட்சி அங்கீகாரம் பெற்ற தனிமைப்படுத்தப்பட்ட வசதிகளை பட்டியலிடும் கனடா அரசாங்க வலைத்தளம் இதனை உறுதிசெய்துள்ளது.
மொத்தத்தில், கனடாவின் நான்கு முன்னணி சர்வதேச விமான நிலையங்களிலிருந்து உள்வரும் பயணிகளை ஏற்றுக்கொள்ள 47 வசதிகள் இப்போது உள்ளன.
சமீபத்திய புதுப்பிப்பு ஒன்றாரியோ மற்றும் கியூபெக்கின் தங்கும்விடுதி எண்களை கணிசமாக அதிகரித்தது. கிடைக்கக்கூடிய வசதிகளின் எண்ணிக்கை முறையே 17 மற்றும் 13 ஆக உயர்ந்தது.
கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் இரண்டாயிரத்து 812பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 60பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், எட்டு இலட்சத்து 75ஆயிரத்து 559பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 22ஆயிரத்து 5பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 29ஆயிரத்து 930பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 572பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், இதுவரை எட்டு இலட்சத்து 23ஆயிரத்து 524பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.