கொரோனாவை எதிர்த்து போராட  கூடுதல் நிதியை அமெரிக்கா ஒதுக்கியுள்ளது.
                  
                     28 Mar,2020
                  
                  
                     
					  
                     
						
	 
	¨'
	 
	 
	 
	உலகம் முழுவதையும் பீடித்துள்ள  கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராட, இந்தியாவுக்கு 2.9 மில்லியன் டாலர் உட்பட, 64 நாடுகளுக்கு 174 மில்லியன் டாலர் நிதி உதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது.  தொற்றுநோயின் அபாயம் அதிகம் உள்ள நாடுகளில், நோய் பரவுவதை கட்டுக்குள் வைக்க, கூடுதல் நிதியுதவியை அறிவித்துள்ளது.
	
	இந்தியாவிற்கான இந்த நிதியுதவி, ஆய்வகங்களை உருவாக்கவும், பாதிக்கப்பட்டவர்களை விரைவாக கண்டறியவும், தொழில்நுட்ப வல்லுநர்களை தயார்நிலையில் வைத்திருப்பதற்காகவும் வழங்கப்படுகிறது.   இதேபோல்,  இலங்கைக்கு 1.3 மில்லியன் டாலர், நேபாளத்திற்கு 1.8 மில்லியன் டாலர் வங்கதேசத்திற்கு 3.4 மில்லியன் டாலர், ஆப்கானிஸ்தானிற்கு 5 மில்லியன் டாலர் வரை  அமெரிக்கா நிதி உதவியை அறிவித்துள்ளது.