அமெரிக்காவை தாக்க கியூபா எல்லைக்கு ஆயுதங்களை அனுப்பும் ரஷ்யா!
09 Jun,2024
அமெரிக்காவின் படைபலத்தைக்கண்டு சர்வதேசங்கள் அஞ்சும் நிலையில், கியூபா கடற்பரப்பில் ரஷ்ய போர்க்கப்பல் நிலைநிறுத்தப்பட்டமையானது பெரும் அச்சநிலையை தோற்றுவித்துள்ளது.
அமெரிக்காவிற்கு எதிரான உலகின் அனைத்து நாடுகளுக்கும் ஆயுத உதவிகளை வழங்குவதாக ரஷ்யா அறிவித்திருந்த நிலையில், கியூபா கடற்பரப்பில் அந்நாட்டு போர்கப்பலொன்று நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
1960 ஆம் ஆண்டு கியூபாவில் சோவியத் ரஷ்யா தனது அணு ஆயுதகங்களை நிலைநிறுத்திய வரலாற்று பின்னணியின் வெளிப்பாடே தற்போதைய புடின் அரசாங்கத்தின் திட்டம் எனவும் கூறப்படுகிறது.
அமெரிக்காவில் இருந்து 145 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள கியூபாவில் சக்திவாய்ந்த அணுசக்தி நீர்மூழ்கி கசான் மற்றும் மற்ற மூன்று கடற்படை கப்பல்கள் வழக்கத்திற்கு மாறாக அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரீபியன் பிராந்தியத்தில் போர்க் கப்பல்களை அனுப்பிய ரஷ்யாவின் நகர்வுகள் எதை அடிப்படையாக கொண்டது? அமெரிக்கா அவர்களின் வருகையை அச்சுறுத்தும் வகையில் பார்க்கவில்லை என்றாலும், அமெரிக்க கடற்படை எவ்வாறான முனைப்புக்களை காட்டப்போகிறது