உக்ரைனுக்கு(Ukraine) எதிரான தனது போரில் பிரித்தானியா(Britan) நேரடியாக தலையிட்டுள்ளதாக குற்றஞ்சாட்டிய விளாடிமிர் புடின் பழிவாங்குவது உறுதி என தெரிவித்துள்ளார்.
மேலும், “பிரித்தானிய ஆயுதப் படைகள் ரஷ்ய இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகளைக் குறிவைப்பதாகவும், சர்வதேச பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலின் போது குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், ரஷ்யாவின் நிலைகளை குறிவைக்க அமெரிக்காவும் பிரான்சும் தனது ஆயுதப் படைகளைப் பயன்படுத்துகின்றது ரஷ்யாவின்(Russia) இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு அச்சுறுத்தலுக்கு இலக்கானால் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவேன்.
உக்ரைன் வீரர்கள் தொடர்பில் தமக்கு தெரியும் என்றும், தொலை தூர ஏவுகணைகளை பயன்படுத்தி அவர்களால் தனித்து தாக்குதல் தொடுக்க முடியாது அதற்கான அடுத்ததடுத்த நிலைகள் என்ன என்பது தமக்கு தெரியும்.
இதன் பின்னணியில் கண்டிப்பாக மேற்கத்திய நாடுகளின் ஈடுபாடு பதிவாகியுள்ளது.இந்த ஆயுதங்களை வழங்கியவர்களால் மட்டுமே, அதற்கான வழி முறைகளை உருவாக்க முடியும்.
ATACMS என்றால் அமெரிக்கா அதில் ஈடுபட்டிருக்கும் என்றும் Storm Shadow என்றால் அதில் பிரித்தானியா ஈடுபட்டிருக்கும்.” என புடின் தெரிவித்துள்ளார்.
ஜோ பைடன் உக்ரைன் அதிபரிடம் பகிரங்கமாக மன்னிப்பு: வெளியான காரணம்
உக்ரைன் அதிபரிடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) இன்று (7) முதல் முறையாக பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வோலோடிமிர் செலென்ஸ்கியை, பைடன் பாரிஸில் சந்தித்த போதே மன்னிப்பை கோரியதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்கா ஏற்கனவே உக்ரைனுக்காக அனுமதித்த இராணுவ உதவி இன்னும் உக்ரைனுக்கு அனுப்பப்படாமை தொடர்பிலேயே இந்த மன்னிப்பைக் கோரியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உக்ரைனுக்கான 61 பில்லியன் டொலர் இராணுவ உதவிப் பொதியை காங்கிரஸில் பழமைவாத குடியரசுக் கட்சியினர் ஆறு மாதங்களாக நிறுத்தி வைத்துள்ளனர்.இதற்காக தாம் மன்னிப்பை கோருவதாக பைடன் கூறியுள்ளார்.
இருப்பினும், அமெரிக்க மக்கள் தொடர்ந்தும் உக்ரைனுக்கு ஆதரவாகவே செயற்படுகிறார்கள் எனவும் நாங்கள் தொடர்ந்தும் முழுமையாக உங்களுடன் இருக்கிறோம் என்றும் பைடன் செலென்ஸ்கியிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.