ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் சிறை செல்லும் டொனால்ட் டிரம்ப் !
01 Jun,2024
ரகசியங்களை மறைக்க நடிகைக்கு பணம் கொடுத்த புகாரில், அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ரகசியங்களை மறைக்க நடிகைக்கு பணம் கொடுத்த புகாரில், அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தன்னைப் பற்றிய ரகசியங்களை மறைப்பதற்காக ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது தம்மைப் பற்றிய ரகசியங்களை மறைப்பதற்காக, ஆபாச நடிகை ஒருவருக்கு டிரம்ப் இந்திய மதிப்பில் சுமார் 109 கோடி ரூபாய் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக டொனால்ட் டிரம்ப் 34 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கினார். இந்த வழக்கை நியூயார்க் நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என நியூயார்க் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் அமெரிக்க வரலாற்றில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட முதல் முன்னாள் அதிபர் டிரம்ப் என கருதப்படுகிறார்.
இந்த வழக்கில் ஜூலை 11 ஆம் தேதி தண்டனை வழங்கப்படும் என்றும், ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் டிரம்ப்பிற்கு அதிகபட்சமாக 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த தீர்ப்பை எதிர்த்து டிரம்ப் மேல்முறையீடு செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.