சிறைக்குள் வெள்ளம் 100 கைதிகள் தப்பி ஓட்டம்
25 Apr,2024
நைஜீரியாவில் நேற்று முன்தினம் இரவு தொடர்ந்து பல மணி நேரம் கனமழை பெய்தது. இதன் காரணமாக சுலேஜாவில் உள்ள சிறை வளாகத்துக்குள் வெள்ளம் புகுந்தது. இதன் காரணமாக சிறையின் பாதுகாப்பு வேலி சேதமடைந்தது.
இதனை பயன்படுத்திய கைதிகள் சிறையில் இருந்து தப்பிச்சென்றனர். சுமார் 110 பேர் சிறையில் இருந்து தப்பி சென்ற நிலையில் 10 கைதிகளை சிறை காவலர்கள் மீண்டும் பிடித்து சிறையில் அடைத்தனர். தப்பி சென்ற கைதிகளை பிடிப்பதற்காக அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகின்றது.