சிங்கப்பூர் பிரதமர் திடீர் ராஜினாமா அறிவிப்பு.., ஊழல் குற்றச்சாட்டுகள் எதிரொலி!
16 Apr,2024
சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் மே மாதம் 15- ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளதால் அந்நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் பிரதமர் லீ சியென் லூங் ( 72) தலைமையிலான மக்கள் செயல் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. நாட்டின் 3-வது பிரதமரான இவர் கடந்த 2004 முதல் மக்கள் செயல் கட்சியின் பொதுச்செயலாளராகவும் இருந்து வருகிறார். சமீபகாலமாக இந்த கட்சியின் அமைச்சர்கள் மற்றும் எம்.பி-க்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
சிங்கப்பூரில் ஊழல் என்ற பேச்சுக்கு இதுவரை இடமில்லாத நிலையில் தற்போது ஆட்சியாளர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது அந்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான இரண்டு எம்.பி-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.