அணை உடைந்து ஆயிரக்கணக்கானவர்கள் பலி- லிபியாவில் 8 அதிகாரிகள் கைது
26 Sep,2023
லிபியா
வெள்ளத்தில் சிக்கி 11 ஆயிரம் பேர் வரை பலியாகிவிட்டனர். அலட்சியத்தால் இந்த சம்பவம் நடந்ததாக கூறி 8 பேரும் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு சட்ட மந்திரி தெரிவித்துள்ளார். மேலும் படிக்க டொர்னா: லிபியா நாட்டில் சமீபத்தில் புயல் , மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
டெர்னாவில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு இருந்த 2 அணைகள் உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. இந்த வெள்ளத்தில் சிக்கி 11 ஆயிரம் பேர் வரை பலியாகி விட்டனர். இந்த நிலையில் இந்த 2 அணைகள் உடைந்தது தொடர்பாக நீர் வளத்துறையை சேர்ந்த 8 அதிகாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் 7 பேர் முன்னாள் அதிகாரிகள். ஒருவர் தற்போது பணியாற்றி வருகிறார். இவர்களின் அலட்சியத்தால் இந்த சம்பவம் நடந்ததாக கூறி 8 பேரும் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு சட்ட மந்திரி தெரிவித்துள்ளார்.