பேஸ்புக் சமூக வலைதளத்தை நிர்வகிக்கும் மெட்டா நிறுவனத்தில் 3000 பேர் பணி நீக்கம்
09 Feb,2025
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களை நிர்வகித்து வரும் மெட்டா நிறுவனம் 3,000 பணியாளர்களை பணி நீக்கம் செய்யவிருக்கிறது. ஆட்குறைப்பு நடவடிக்கைகள் நாளை முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய சமுகவலைத்தளமான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை நிர்வகிக்கும் மெட்டா நிறுவனம் உலகளாவிய தனது ஊழியர்களை படையில் குறிப்பிட்ட எண்ணிக்கையை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கைகளை தொடங்க உள்ளது.
இது குறித்த அறிவிப்பை நிறுவனத்தின் மனிதவள துணை தலைமை அதிகாரி ஜெனெல் கேல் வெளியிட்டுள்ளார். இந்த நிறுவனத்தில் 72,000 பேர் பணிபுரிகின்றனர். அதில் குறைந்த செயல் திறன் கொண்ட 5 சதவீத (கிட்டத்தட்ட 3,000) ஊழியர்கள் இந்த நடவடிக்கையினால் பாதிக்கப்படுவர்.
பெரும்பாலான நாடுகளில், உள்ளூர் நேரப்படி நாளை அதிகாலை 5 மணி முதல் பணிநீக்க அறிவிப்புகள் ஊழியர்களுக்கு இமெயிலில் வழங்கப்பட உள்ளன. ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லந்து ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்கள் மட்டும் உள்ளூர் விதிமுறைகள் காரணமாக ஆட்குறைப்பால் பாதிக்கப்படமாட்டார்கள். ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கக் கண்டங்களில் உள்ளோர் இம்மாதம் 11ம் தேதி முதல் 18ம் தேதி வரை ஆட்குறைப்பு அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.