- 2022-க்குள் செயற்கை நிலவை செயல்படுத்த திட்டம்
                  
                     19 Oct,2018
                  
                  
                      
					  
                     
						
	 
	 
	உலகில் உள்ள பெரும்பாலான பொருட்களுக்கு சீனாவில் டூப்ளிகேட் மாதிரிகள் உள்ளன. அந்த வகையில், சீனாவில் தெரு விளக்குகளுக்கு பதிலாக செயற்கை நிலவை உருவாக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
	
	இயற்கை நிலவு சூரியனிலிருந்து சக்தியை பெருவது போல, இந்த செயற்கை நிலவுகளுக்கு செயற்கை கோள்கள் மூலம் சக்தி கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. இதற்கான முதல் சோதனை வெற்றிகரமாக முடிவடைந்தால், 2022-ம் ஆண்டு இந்த செயற்கை நிலவுகள் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
	 
	
	இந்த செயற்கை நிலவின் மூலம், மின்வசதி இல்லாத கிராமப்பகுதிகளிலும், பேரிடர் காலங்களில் மீட்பு நடவடிக்கைகளிலும் வெளிச்சம் பெற முடியும் என கூறப்படுகிறது. மேலும் இந்த செயற்கை நிலவானது இயற்கையான நிலவை விட 8 மடங்கு ஒளிரும் சக்தி கொண்டதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
	ஏறத்தாழ மனிதன் தயாரித்த அனைத்து பொருட்களுக்கும் சீனா டூப்ளிகேட் மாதிரி செய்துவிட்டதாக கூறப்படும் நிலையில், தற்போது செயற்கை நிலவை உருவாக்கும் முயற்சியின் மூலம் இயற்கையின் தலையிலேயே சீனா கைவைத்துவிட்டது என நகைச்சுவையாக கூறப்படுகிறது.