யாழில் நடந்த கொடூரம்! பெண்ணொருவரை தீ மூட்டி கொலை செய்ய முயற்சி
                  
                     01 Jun,2024
                  
                  
                      
					  
                     
						
	 
	 
	 
	 யாழில் (Jaffna) குடும்பப் பெண்ணை அழைத்து சென்று தலையில் தீ மூட்டிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
	 
	குறித்த சந்தேகநபர் இன்று (1) கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
	 
	இதன்போது, சாவகச்சேரியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயே மேற்படி நபரால் எரியூட்டப்பட்டுள்ளார்.
	 
	இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 42 வயது மதிக்கத்தக்க குடும்பப் பெண் ஒருவரை ஆண் ஒருவர் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு யாழ். குருநகர் கொஞ்செஞ்சி மாதா சவக்காலைப் பகுதிக்கு அழைத்து வந்துள்ளார்.
	 
	 
	 
	இதனையடுத்து இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் குறித்த ஆண் பெண்ணின் தலையில் பெட்ரோல் ஊற்றி தீ மூட்டியுள்ளார்.
	 
	கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய இலட்சம் பெறுமதியான உயர்தர மதுபான போத்தல்கள்
	 
	இதன்போது, பெண் தீயில் எரிவதைக் கண்ட அயலவர்கள் தீயை அணைத்து பெண்ணை யாழ். போதனா வைத்தியசாலைக்கு (Jaffna Teaching Hospital) அனுப்பி வைத்துள்ளனர்.
	 
	 
	சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஆண் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.