எந்த தடை வந்தாலும் உரிமை கிடைக்கும் வரை அறவழி போராட்டம் தொடரும்!
08 Oct,2023
உரிமை இழந்தோம் காணிகளையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா. தோல்வி நிலையென நினைத்தால் தன்மான தமிழன் வாழ்வை நினைக்கலாமா. எமது அறவழி போராட்டம் எமது மக்களுக்காக எந்த தடை வந்தாலும் உரிமை கிடைக்கும் வரை தொடரும் என்று இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை அகிம்சை வழி போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பொலிசாரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் பண்ணையாளர்களுடன் போராட்டக்களத்தில் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் போராட்டத்தில் ஈடுபட்ட போதே இவ்வாறு கூறினார்.