தமிழர்களின் மதநம்பிக்கைக்குரிய இடங்கள் மீது படையெடுப்பு .மத யுத்தம் - யாழ்ப்பாண விஜயம் குறித்து இந்திய இசைக்கலைஞர் கிருஸ்ணாவின் மனப்பதிவுகள்
2011 இல் நான் இலங்கையின் வடபகுதிக்கு விஜயம் மேற்கொண்டவேளை மூன்று தசாப்தகாலத்தின் பின்னர் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அந்த மண்ணில் இசைநிகழ்ச்சியொன்றை முதன்முதலில் நடத்திய கலைஞனாக நான் காணப்பட்டேன்.
அவ்வேளை இந்திய தூதுவராக பணியாற்றிய அசோக் காந்தாவினால் அது சாத்தியமானது.
ஆனால் அந்த எண்ணத்தை எங்கள் மனதில் விதைத்தவர் சித்தி திருச்செல்வம்-சட்டத்தரணி மனித உரிமை செயற்பாட்டாளர்-நாடாளுமன்றஉறுப்பினர் சட்டத்தரணி மனித உரிமை செயற்பாட்டாளர் நீலன்திருச்செல்வத்தின் மனைவி.
நான் 2010 இல் நீலன்திருச்செல்வம் நிதியத்திற்காக இசைநிகழ்ச்சியொன்றை நடத்தியிருந்தேன்.உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த பின்னர்.
பன்முகத்தன்மையை கொண்டாடுதல் என்பதே அதன் கருப்பொருள்.அதன் பின்னர் இடம்பெற்ற உரையாடலின் போது சித்திதிருச்செல்வம் வடபகுதிக்கான சுற்றுலா குறித்த யோசனையை முன்வைத்தார்- அசோக் காந்தா அடுத்தவருடம் அதனை சாத்தியமாக்கினார்.
ஒருவாரகாலம் நாங்கள் பேருந்தில் பணயம் செய்தோம் -கிளிநொச்சி முல்லைத்தீவு பின்னர் வவுனியாவிற்கு பின்னர் எங்கள் சுற்றுப்பயணம் கொழும்பில் இசைநிகழ்ச்சியுடன் முடிவடைந்தது.அது யுத்தம் முடிவடைந்து ஒரு வருடத்தின் பின்னர்-யுத்தத்தின் காயங்கள் மதில்கள் சுவர்களில் வீதிகளில் வீடுகளில் வெளிப்படையாக தென்பட்டன-கைவிடப்பட்ட வாகனங்கள் - சேதமடைந்த கட்டிடங்கள் நிலக்கண்ணிவெடிகள் அதிகளவிலான இராணுவபிரசன்னம்.
பொதுமக்களின் குரல்கள் அவர்கள் எதிர்கொண்டுள்ள யதார்த்தத்தை பிரதிபலித்தன-காயங்கள் புதியதாக காணப்பட்டன தொனிகள் சீற்றத்துடன் காணப்பட்டன அவர்களின் கதைகள் மனதை பதறவைப்பவையாக காணப்பட்டன அவர்களில் பலர் அவ்வேளை இன்னமும் முகாம்களிலேயே வாழ்;ந்தனர்.
அதற்கு இரண்டு வருடங்களின் பின்னர் சுவானுபவ என்ற கலை நிகழ்ச்சியை நடத்துவதற்காக யாழ்ப்பாணம் சென்றேன் யாழ்ப்பாண தமிழர்கள் நீண்டகாலமாக ரசித்த பல கலைஞர்களையும் கலைவடிவங்களையும் கொண்டுசென்றேன்.
கர்நாடக இசைக்கலைஞரும் பின்னணி பாடகருமான உன்னிக்கிருஸ்ணன் யாழ்ப்பாணத்திற்கு சென்றவேளை அது ரஜினிகாந் சென்றதுபோல காணப்பட்டது அவரது நிகழ்வில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டதால் மேலதிக பாதுகாப்பு தேவைப்பட்டது.
இந்த முயற்சிகளிற்காக என்னை விமர்சித்தவர்களும் உள்ளனர்-நான் ராஜபக்ச கைக்கூலி என குற்றம்சாட்டினர்-இவ்வாறான நிகழ்ச்சிகள் போலியான பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துவதை மக்களின் மனங்களை சாதகமாக பயன்படு;த்துவதை நோக்கமாக கொண்டவை மக்கள் வன்முறையையை கண்முன்னே காணப்படும் யதார்த்தத்தை மறக்கச்செய்யும் நோக்கத்தை கொண்டவை என மார்க்சிஸ்ட்கள் கருதினர்.
புலம்;பெயர்ந்த தமிழர்கள் சில கலைஞர்களை அழைத்து இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவேண்டாம் என கேட்டுக்கொண்டனர்-அவர்கள் அந்த நிகழ்வை இராணுவம் நடத்துவதாக தெரிவித்தனர்.
நான் இந்தியா வந்ததும் சென்னையில் எனது நிகழ்வின்போது திராவிடகழகத்தினர் ஆர்ப்பாட்டக்காரர்களை அனுப்பினர்.
வடபகுதி மக்களுடன் உரையாடியதால் எனது அனுபவமும் நான் புரிந்துகொண்ட விடயம் வேறு மாதிரியானதாக காணப்பட்டது.
அந்த இசைநிகழ்வுகள் அவர்களை எதனையும் மறக்க செய்யவில்லை எப்படி அவர்களால் அவற்றை மறக்க முடியும்?
இசையும் நடனமும் பிரமைகள் இல்லை அவை இழப்பு மரியாதை இடம் மகிழ்ச்சி பாரம்பரியம் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை ஆகியவற்றின் நினைவூட்டல்கள்.
ஒரு தசாப்தத்தின் பின்னர் இந்த ஆகஸ்டில் நான் மீண்டும் எனது நண்பர்கள் எழுத்தாளர் பெருமாள் முருகன்,வரலாற்று அறிஞர் ஏஆர் வெங்கடாச்சலபதி ஆகியோருடன் சென்றேன் - இருவரினதும் நிகழ்வுகள் யாழ்பல்கலைகழகத்தில் இடம்பெற்றன.
அந்த அமர்வுகள் கூர்மையானதாகவும் ஆய்வினை அடிப்படையாக கொண்டதாகவும் முக்கியமானதாகவும் காணப்பட்டன.மாணவர்கள் பங்கேற்றவர்களின் கேள்விகள் தடையற்றவையாக காணப்பட்டதால் நாங்கள் சிந்திக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம்.
எனது விமானம் சென்னையிலிருந்து நேரடியாக யாழ்ப்பாணம் சென்றதால் எனது மனதில் அந்த கேள்வி எழுந்தது யாழ்ப்பாணம் மாறியிருக்குமா?
வீதிகள் நன்றானவையாக காணப்பட்டன கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டிருந்தன-பெருமளவு மக்கள் வீதிகளில் காணப்பட்டார்கள் - வீடுகளில் இருந்து துப்பாக்கிசன்னங்கள் அடையாளங்கள் காணாமல்போயிருந்தன கலாச்சார பாரம்பரிய கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டிருந்தன கடற்கரை ஓரமாக நடைபாதைகள் காணப்பட்டன.
இவை அனைத்தும் அபிவிருத்தி முன்னோக்கிய நகர்வு ஆகியவற்றின் அறிகுறிகள் இல்லையா?
விடயங்கள் எவ்வளவு தூரம் முன்னேற்றமடைந்துள்ளன என்பதை பாருங்கள் என்பதே உள்ளுணர்வாக காணப்படும்,இப்படித்தான் நாம் எந்த சமூகத்தையும் நமது சொந்த இடத்தையும் மதிப்பிடுகின்றோம்.
ஆனால் இவை மக்கள் எப்படி எவ்வாறு உணர்கின்றார்கள் தங்களை எப்படி உணர்கின்றார்கள்என்பதற்கான அறிகுறியில்லை,
மேலும் இவை மிகமுக்கியமான மனிததேவையான மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதும் இல்லை.
இது மக்களின் உணர்ச்சித்தேவைகளை மேம்படுத்துவதில் இருந்து வரும் ஒரு நிலை,உணர்ச்சி இணக்கம் ஒரு சுருக்கணமான பகுத்தறிவற்ற நிலையில்லை,இது தனிப்பட்ட சமூக அரசியல் நிறைவுகளில் இருந்து தூண்டப்படுகின்றது.
இந்த முழுமை அல்லது அதனை நெருங்குவதே வாழ்வின் குறிக்கோள்.கண்ணியமாகவும் தடையற்றதாகவும் கண்ணியமாகவும், தடையற்றதாகவும், சொந்தமாக உணரவும், மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்ளவும்.
பொருளாதார வளர்ச்சி மூலம் இதனை அடைய முடியாது.ஆவை ஓரளவிற்கு வறுமையை முடிவிற்கு கொண்டுவரும். மக்களிற்கான வளங்களை வழங்கும்.மக்கள் தாங்கள் உயிர்வாழவேண்டும் சமூகநிலையில் முன்னோக்கி செல்லவேண்டும் என்பதற்காக இவற்றை பயன்படுத்திக்கொள்வார்கள் ஆனால் அதன் அர்த்தம் அவர்கள் மனநிறைவுடன் இருக்கின்றார்கள் என்பதல்ல.
அடிப்படை உட்கட்டமைப்பு அல்லது திருத்தப்பட்ட உட்கட்டமைப்பு வழங்கும் புறத்தோற்றத்திற்கு அப்பால் சென்று நாங்கள் இதனை பார்க்கவேண்டும்.
ஒடுக்குமுறை பொதுவாக சமூக கலாச்சார அபகரிப்புடன் ஆரம்பமாகின்றது.தமிழர்களை பொறுத்தவரை அது அவர்களின் மொழி கலாச்சாரத்தை அபகரிப்பதாக அது காணப்படுகின்றது மறுசீரமைப்பு முறைகள் மூலம் அவற்றிற்கு தீர்வை காணும்போது மாத்திரமமே அது முடிவடையும்.
நாங்கள் யாழ்ப்பாணத்தின் பல பகுதிக்கும் வாகனத்தில் சென்றவேளை தமிழ் இலக்கிய இசை ஆர்வலர்களை சந்தித்தவேளை இலக்கிய அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் தரித்துநின்றவேளை காணிகள் தொடர்பில் தமிழ்மக்களிற்கான உரிமை வழங்கப்படாமை கௌரவம் சமத்துவம் போன்றவை தொடர்பாகவே பேச்சுக்கள் காணப்பட்டன.நாங்கள் சாதாரணமாக கருதும் பல சிறிய விடயங்களிற்கு கூட பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவேண்டியுள்ளது , ஆனால் அந்த பேச்சுவார்த்தைகளில் சமநிலை இல்லை.
உள்நாட்டு யுத்தத்தினால் ஏற்பட்ட காயங்களில் இருந்து இன்னமும் குருதிவெளியேறுகின்றது எல்லாவற்றிற்கும் மேலாக அடக்குமுறையின் வரலாற்றை பற்றி அரசாங்கத்திடம் எந்த வருத்தமும் இல்லாதது வேதனைப்படுத்துகின்றது.
இன்று தமிழர்களின் மதநம்பிக்கைக்குரிய இடங்கள் மீது படையெடுப்பு இடம்பெறுகின்றது.மத யுத்தம் தீவிரமாக இடம்பெறுகின்றது தமிழ் மக்களின் அடிவயிற்றிலிருந்து அவர்களை திண்டுகொண்டிருக்கின்ற இழப்பின் வலிகளை என்னால் முழுமையாக புரிந்துகொள்ள முடியாது விளங்கப்படுத்த முடியாது என்பது எனக்கு தெரியும்.
ஆனால் அவர்கள் நிகழ்காலம் குறித்தும் கடந்தகாலம் குறித்தும் பேசும்போது என்னால் அதனை உணரமுடிகின்றது அவர்கள் ஒவ்வொருநாளும் பகிர்ந்துகொள்ளும் கதைகளில் ஏன் அவர்களின் சிரிப்பில் நான் அதனை அறிகின்றேன் இந்த உரையாடலில் எதிர்காலம் பற்றி எதுவும் இல்லை என்பதே பல விடயங்களை தெரிவிக்கின்றது.
தமிழீழ விடுதலைப்புலிகள் பற்றி குறிப்பிடாமல் யாழ்ப்பாணத்தில் பயணங்களின் நினைவுகள் இருக்கமுடியாது,இந்தியாவில் இருக்கும் பலர் குறிப்பாக தமிழ் சுற்றளவிற்கு வெளியே இருக்கும் புத்திஜீவிகள் விடுதலைப்புலிகளை பயங்கரவாத இயக்கமாக கருதுகின்றனர்.இந்தியாவில் தமிழர்கள் மத்தியில் விடுதலைப்புலிகள் எப்போதும் பூஜிக்கப்படுகின்றனர்.
விடுதலைப்புலிகளின் குறியீடும் தமிழீழவிடுதலைப்புலிகளின் தலைவரின் படங்களும் முச்சக்கர வண்டிகள் சுவரொட்டிகள் போன்றவற்றில் காணப்படுகின்றன சில தமிழ் அரசியல்வாதிகள் தாங்கள் தமிழர்கள் என்பதை நிரூபிக்க அவற்றை பயன்படுத்துகின்றனர்.
இவை இரண்டும் வெளியாட்களின் நிலைப்பாடுகள் .
மற்றைய பிரச்சினை என்னவென்றால் ஆங்கில எழுத்தில் இந்திய குரல்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன - சமீபகாலமாக அடுத்த தலைமுறை புலம்பெயர் எழுத்து உள்ளது ஆனால் அதுவும் ஒரு வித்தியாசமான குரல்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த பல எழுத்தாளர்கள் கதைகளையும் கவிதைகளையும் எழுதியுள்ளனர் ஆனால் சிறுகுழுக்களிற்குள்ளேயே அவர்களைவாசி;ப்பவர்கள் எண்ணிக்கை முடங்கியுள்ளது.
தங்கள் படைப்புகள் மூலம் இலங்கையின் கலைஞர்களும் பேசியுள்ளனர்.இவற்றில் பல வகைப்படுத்தல்களின் வெளிப்பாட்டின் வலைக்குள் சிக்கவில்லை,
போர் வன்முறை வரலாறு போராட்டத்திற்கு நுணுக்கமான சிக்கலான புரிதல் தேவை.
ஓவ்வொரு கருத்துக்களும் ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டு பதிலளிக்கவேண்டும்.
தீர்வுகாணப்பட்ட அல்லது தீர்க்கப்பட்ட கதையாடல் அவசியமில்லை.
வெளியாட்களாக எங்கள் பங்கு கேட்பது மாத்திரமே தீர்ப்பளிப்பது இல்லை.
தமிழர்கள் ஒரேமாதிரியான குழுவை சேர்ந்தவர்கள் இல்லை என்பதை நாங்கள் மறந்துவிடுகின்றோம் அவர்கள் வெவ்வேறு பகுதிகளில் வாழ்பவர்கள் வெவ்வேறு கலாச்சார பின்னணிகளை வரலாறுகளை பேச்சுவழக்குகளை கொண்டுள்ளனர்.அவர்கள் ஒவ்வொருவரும் அரசாங்கத்தினாலும் விடுதலைப்புலிகளாலும் வித்தியாசமாக பார்க்கப்பட்டனர் – நடத்தப்பட்டனர்.
நாங்கள் யாழ்ப்பாணத்தில் இருந்தவேளை யாழ்பல்கலைகழகம் மலையகதமிழர்களின் கதைகளை காண்பிக்கும் கண்காட்சியொன்றை நடத்தியது.
இந்த சமூகத்தினரை பிரிட்டிஸ் ஆட்சியாளர்கள் 200 வருடங்களிற்கு முன்னர் தேயிலை தோட்டங்களில் வேலைபார்ப்பதற்காக இந்தியாவிலிருந்து கொண்டுவந்தனர்.
அவர்களின் ஒடுக்குமுறை வாழ்வு குறித்த உண்மைகள் செவிமடுக்கப்படாதவைகளாக காணப்படுகின்றன.
கண்காட்சியில் சிறிய தனிப்பட்ட உடமைகள் மற்றும் நிகழ்வுகள் மூலம் கதைகள் சொல்லப்பட்டன,எங்களை வரவேற்ற இசை தனித்துவமானதாக காணப்பட்டது.
நான் யாழ்ப்பாணத்திலிருந்து வந்ததிலிருந்து யாழ்ப்பாண பயணம் எப்படியிருந்தது என பலர் என்னிடம் கேட்கின்றார்கள் என்னால் எனது அபிப்பிராயங்களை வெளிப்படுத்தமுடியவில்லை.
யாழ்பயணத்திற்காக ஒரு முழுக்கட்டுரையே எழுதிய பின்னர் நான் ஏன் இவ்வாறு தெரிவிக்கின்றேன் என வாசகர்கள் ஆச்சரியப்படக்கூடும்.
உண்மை என்னவென்றால் நான் இந்த பகுதியை மிகுந்த நடுக்கத்துடன் எழுதியுள்ளேன் .
அதற்கான காரணம் மிகவும் இலகுவானது.
ஏனென்றால் உண்மையில் எனக்கு எதுவும் தெரியாது.