தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுமந்திரனது பதவி பறிப்போனது வந்தார் ரெலோ தலைவர் செல்வம்
23 Aug,2020
பதவி எம்.ஏ.சுமந்திரன் எம்.பியிடமிருந்து பறிபோனது. அந்தஇடத்துக்கு ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.நியமிக்கப்படுகின்றார்.
சுமந்திரன் பங்குபற்றாத தமிழ்த் கூட்டமைப்புத் தலைவர்களின் நேற்றிரவுக் கூட்டத்தில் வைத்து கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் தாமே தமது வாயால் இதனை முன்மொழிந்து அறிவித்தார் என நம்பகரமாக அறியவந்தது.
கட்சியின் நாடாளுமன்றக் கொறடாவாக இதுவரை இருந்த ஸ்ரீதரன் எம்.பியின் இடத்துக்கு புளொட் தலைவர் சித்தார்த்தன் எம்.பி. நியமிக்கப் படுகின்றார் என்றும் சம்பந்தன் அறிவித்தார் என்று தெரிகின்றது.
எனினும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பத்து எம்.பிக்களைப் கொண்ட நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இந்த விடயங்கள் பிரேரிக்கப்பட்டு, அங்கீகரிக் கப்பட்டு, உத்தியோகபூர்வமாக அறிவிக் கப்படும் வரையில், இவற்றைப் பகிரங் கப்படுத்துவதில்லை என்றும் நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.
நேற்று மாலை இந்தியத் தூதுவருடனான சந்திப்பின் பின்னர் நேற்றிரவு இரா.சம்பந்தனின் இல்லத்தில் இந்தக்கூட்டம் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் தமிழரசுத் தலைவர் மாவை சேனாதிராசா, ரெலோ தலைவர்செல்வம் அடைக்கலநாதன், புளொட்தலைவர் சித்தார்த்தன் ஆகியோரோடுமட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் (ஜனா) ஆகியோர் பங்கு பற்றினர்.
இந்தக் கூட்டத்தில் பங்குபற்றுமாறு சுமந்திரனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட தாயினும், அவர் அதில் கலந்து கொள்ளவில்லை என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் மூலம் அறியவந்தது.
எனினும், சுமந்திரன் இல்லாத அந்தக்கூட்டத்தில் வைத்து, கூட்டமைப்பின் புதிய பேச்சாளராக செல்வத்தை நியமிக்கவும், கட்சியின் கொறடாவாக சிறீதரனுக்குப் பதிலாக சித்தார்த்தனை நியமிக்கவும் சம்பந்தன் ஒப்புக் கொண்டார் என அறிய வந்தது.