விடுதலைப்புலிகளின் தலைவர் தொடர்பில் பல்வேறு இரகசிய தகவல்களை வழங்கிய கருணா -காலம் கடந்து வரும் தகவல்

20 Jun,2020
 

 

 
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு, அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பில் கருணா பல்வேறு இரகசிய தகவல்களை அரசாங்கத்திற்கு வழங்கினார் என அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
கருணா விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து விலகி இராணுவத்திற்கும், அரசாங்கத்திற்கும் ஒத்துழைப்பு வழங்கினார். இதன் பின்னரே இவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது.
கருணா வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே இறுதிக்கட்ட யுத்தம் குறுகிய காலத்தில் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டது.
எனவே தற்போது இவர் தெரிவித்துள்ள கருத்து இராணுவத்தில் உயிர்நீத்தவர்களின் உறவுகளுக்கு பாதிப்பினை ஏற்படுத்துவதாக காணப்படுகின்றது.
இவ்வாறான கருத்துக்களை தெரிவிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இறுதிக்கட்ட யுத்தத்தை மிக விரைவில் நிறைவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற தேவை காணப்பட்டதால் இவரது உதவியை அப்போது பெற்றுக் கொண்டோம் என மேலும் அவர் தெரிவித்தார்.
கருணாவின் பகிரங்க அறிவிப்பு! கோட்டாபயவுக்கு ஏற்பட்ட நெருக்கடி - ஸ்ரீலங்காவில் வெடித்தது சர்ச்சை
மனித குலக்திற்கெதிரான பாரதூரக் கொலைகளைச் செய்த முன்னாள் பிரதியமைச்சரும், பொதுஜன முன்னணியின் வேட்பாளருமான விநாயகமூர்த்தி முரளிதரனை கைது செய்யும்படி, சிங்கள ராவய அமைப்பு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
வன்னியில் இடம்பெற்ற போரின் போது 2000 தொடக்கம் 3000 வரையிலான ஸ்ரீலங்கா படையினரை ஆனையிறவு பகுதியில் வைத்து ஒரே இரவில் படுகொலை செய்ததாக கருணா அம்மான் நேற்றைய தினம் பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.
இக்கருத்து தற்போது தென்னிலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில்,
கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதத்த தேரர் கருணா அம்மானைக் கைது செய்யும்படி கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர்,
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளராக களமிறங்கியுள்ள விநாயகமூர்த்தி என்று சொல்லப்படும் கருணா உடலை உலுக்கும் வகையிலான மிகவும் பாரதூரமான கருத்தொன்றை வெளியிட்டுள்ளார்.
ஆனையிறவு பகுதியில் ஸ்ரீலங்கா படையைச் சேர்ந்த இராணுவத்தினர் 2000 அல்லது 3000 பேரை தான் கொலை செய்ததாக கூறியுள்ளார். இது ஸ்ரீலங்கா சட்டத்தின்படி முரணான அறிவிப்பாகும்.
கொலைக் குற்றச்சாட்டில் அவரைக் கைது செய்ய முடியும். அவரைக் குற்றவாளியாக்க முடியும். சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்க முடியும்.
ஆகவே உடனடியாக அவருக்கெதிராக நடவடிக்கை எடுக்கும் படியும் பதில் பொலிஸ்மா அதிபர், குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியோருக்கு நினைவுபடுத்துகின்றோம்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களை இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்கள் நடத்தியிருந்தன. அதனை விடவும் மனித குலக்திற்கெதிரான பாரதூரக் கொலைகளை கருணா செய்திருப்பது அவராலே சொல்லப்பட்டுள்ளது.
ஆனையிறவு பகுதியில் மட்டுமல்ல, கிழக்கு மாகாணத்தில் அரந்தலாவ பகுதியில் பிக்குமார்களை படுகொலை செய்தமை, சில கிராமங்களுக்குள் நுழைந்து அப்பாவி மக்களை வெட்டிக் கொலை செய்தமை போன்ற செயற்பாடுகளை கருணா செய்திருக்கின்றார்.
இப்போது பகிரங்கமாகவே அவரால் செய்யப்பட்ட பாவ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சஹ்ரான் செய்த குற்றச் செயல்களைப் போல கருணாவும் இனப்படுகொலையை செய்துள்ளார்.
உடனடியாக அவரைக் கைது செய்ய வேண்டும். தேர்தல் பிரசாரத்தில் வைத்து அவர் செய்துள்ள அறிவிப்பின் ஊடாக நாட்டிற்கு மிகவும் ஒரு பயங்கரமான அறிவிப்பை விடுத்து மீண்டும் ஒருமுறை கருணா ஈழத்தை கேட்கின்றாரா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
ஆகவே ஜனாதிபதி மற்றும் அதிகாரிகளிடம் கருணா அம்மான் மீதான நடவடிக்கையை எடுக்க வேண்டும்படி கோருகிறோம். பல்லாயிரக்கணக்கான கொலையை செய்தவரை நாடாளுமன்றத்திற்குள் அனுமதிக்க முடியுமா? நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு சவால் விடுத்தவரை விட்டுவைக்க முடியுமா?
அதேபோல முன்பு செய்த விளையாட்டுக்களை இப்போது செய்ய முடியாது என்பதை கருணா அம்மானுக்கு நினைவூட்டுகின்றோம்.
தற்போதைய ஜனாதிபதி நாட்டின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பவர். இன்றும் ஈழத்தை கருணா அம்மான் கோரினால் விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்ட அதே நிலையே அவருக்கும் ஏற்படும் என்பதை எச்சரிக்கின்றோமென அவர் தெரிவித்துள்ளார்.

 

விசாரணைக்கு ஆணைக்குழு அமைக்க கோரிக்கை
"ஆனையிறவில் 24 மணிநேரத்துக்குள் 2 ஆயிரம் படையினர் கொல்லப்பட்டனர் என கருணா வெளியிட்டுள்ள கருத்து பாரதூரமானது. இது தொடர்பில் விசாரணை நடத்தி உண்மைகளை கண்டறிவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று அமைக்கப்படவேண்டும்" என ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
நுவரெலியாவில் இன்று (20.06.2020) மாலை ஐக்கிய தேசியக்கட்சியின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு,
கருணா என்ற புலி உறுப்பினர் வெளியிட்டுள்ள கருத்து பாரதூரமானது. 1977 முதல் ஆனையிறவை ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கம் பாதுகாத்தது. 2000 ஆம் ஆண்டு சந்திரிக்கா ஆட்சியின் போதே ஆனையிறவு வீழ்ந்தது. இவ்வாறு ஆனையிறவு வீழ்ந்தபோது ஒரே நாளில் 2 ஆயிரம் படையினரை கொன்றதாக கருணா அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் எமக்கு கூட தெரியாது. அப்படியானால் இந்த நாட்டில் தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளன. 2000 பேரை எப்படி 24 மணிநேரத்துக்குள் கொல்வது? அப்படியெனில் அங்கு அப்பட்டமாக மனித உரிமை மீறல் இடம்பெற்றிருக்க வேண்டும்.
2000 பேர் கொல்லப்பட்டனர் என்ற தகவலை தற்போதுதான் அறிகின்றேன். உண்மையிலேயே என்ன நடந்துள்ளது, நாட்டுக்கு தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளனவா அல்லது சூழ்ச்சியா?
இராணுவத்தில் இருந்த ஒருவரே ஜனாதிபதியாக பதவி வகிக்கின்றார். அவருக்கு இராணுவத்தின் மீது பற்று உள்ளது. எனவே, இவை தொடர்பில் விசாரிப்பதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை அமைக்குமாறு ஐக்கிய தேசியக்கட்சி கேட்டுக்கொள்கின்றது. கருணாவிடமும் விசாரணை நடத்தப்பட்டு, என்ன நடந்தது என்பது அறியப்படவேண்டும்." - என்றார்.

 



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies