கொரோனா இல்லாத ஆட்களையும் தூக்கி உள்ளே வைத்த இலங்கை
08 May,2020
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைகழக ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட கொவிட் சோதனைகளில் பாரிய தவறுகள் இடம்பெற்றுள்ளதாக இலங்கையின் மருத்துவ ஆய்வக விஞ்ஞான கல்லூரி சுட்டிக்காட்டியுள்ளது. ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைகழக ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட கொவிட் சோதனைகளில் நோயாளிகள் என அறிவிக்கப்பட்ட பலர் பின்னர் நோயாளிகள் இல்லை என்பது தெரியவந்துள்ளதாக மருத்துவ ஆய்வக விஞ்ஞான கல்லூரியின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இன் நிலையில் இப்படி எத்தனை பேரை பிழைகாக பரிசோதித்து, கொண்டு போய் தடுப்பு முகாம்களில் போட்டுள்ளார்கள் என்ற கணக்கு விபரம் தெரியவில்லை. இவர்கள் கொடுத்த தவறான அறிக்கையால். கொரோனா தொற்று இல்லாத நபர்களை கூட அரசு தடுப்பு முகாம்களுக்கு அனுப்பி. அங்கே கொரோனாவோடு இருந்த நபர்களோடு சேர்த்து விட்டு. அவர்களுக்கும் கொரோனாவை தொற்ற வைக்க பார்த்துள்ளது என்கிறார்கள் விடையம் அறிந்தவர்கள்.
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைகழக ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனைகள் குறித்த அறிக்கைகள் சரியானவையா என்பது குறித்து பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளன, இந்த நோயாளிகளை சுகாதார அமைச்சின் ஆய்வுகூடங்களில் மீண்டும் சோதனைக்கு உட்படுத்தியவேளை இந்த தவறுகள் தெரியவந்துள்ளதுடன் பலரிற்கு நோயில்லை என்பது உறுதியாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.பிலியந்தல மீன் வியாபாரிக்கு முதலில் கொரோனா வைரஸ் என சோதனைகள் முடிவுகள் மூலம் தெரியவந்ததையும்,பின்னர் அவர் நோயாளியில்லை என்பது உறுதியானதையும் மருத்துவ ஆய்வக விஞ்ஞான கல்லூரியின் தலைவர்உறுதிசெய்துள்ளார்.