அடக்குமுறைகளைத் தடுப்பதற்கு சர்வதேசத்தின் தலையீடு தேவை - சம்­பந்தன் ஆஸி. தூதுவருக்கு வலியுறுத்தல்

30 May,2019
 

 

 

இலங்­கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்­கு­தலின் பின்னர் சிறு­பான்மை இன மக்­களைக் குறி­வைத்து அடக்­கு­மு­றைகள் தொடர்­கின்­றன. அவற்றை உட­ன­டி­யாக சர்­வ­தேச சமூகம் தடுத்து நிறுத்த வேண்டும். அப்­பாவி மக்கள் பாதிக்­கப்­ப­டு­வ­தற்கு இட­ம­ளிக்­கக்­கூ­டாது. அதே­வேளை, தாக்­கு­தலின் பின்­ன­ணியில் இருந்­த­வர்கள் மற்றும் நேர­டி­யாகத் தொடர்­பு­பட்­ட­வர்கள் என அனை­வரும் தண்­டிக்­கப்­பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.
இலங்­கைக்­கான அவுஸ்­தி­ரே­லியத் தூது­வ­ராகப் புதி­தாக நிய­மிக்­கப்­பட்­டுள்ள டேவிட் ஹொலி­வுக்கும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்­த­னுக்கும் இடையே நேற்­று­முன்­தினம் சந்­திப்பு நடை­பெற்­றது. இதன்­போதே சம்­பந்தன் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,இந்தச் சந்­திப்பில் இலங்­கையில் சிறு­பான்மை இன மக்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னைகள், காணி விடு­விப்பு, மீள்­கு­டி­யேற்றம், தமிழ் அர­சியல் கைதிகள் விடு­தலை விவ­காரம், தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு, ஐ.நா. தீர்­மா­னத்தின் பரிந்­து­ரைகள் மற்றும் இலங்கை விவ­கா­ரத்தில் அவுஸ்­தி­ரே­லி­யாவின் பங்­க­ளிப்பு தொடர்பில் விரி­வாகப் பேசினோம்.
கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி – உயிர்த்த ஞாயி­றன்று இடம்­பெற்ற தாக்­கு­தலின் பின்னர் சிறு­பான்மை இன மக்­களைக் குறி­வைத்து கைதுகள், சோத­னைகள், கெடு­பி­டிகள் மற்றும் வன்­மு­றைகள் தொடர்­கின்­றன. அவ­ச­ர­காலச் சட்­டத்தால் எமது மக்கள் ஒன்றும் செய்ய முடி­யாது அச்­சத்தில் வாழ்­கின்­றனர். எனவே, இந்த அடக்­கு­மு­றை­களை சர்­வ­தேச சமூகம் உடன் தடுத்து நிறுத்த வேண்டும். அப்­பாவி மக்கள் பாதிக்­கப்­ப­டு­வ­தற்கு இட­ம­ளிக்­கக்­கூ­டாது.
கிறிஸ்­தவ மக்கள் மற்றும் வெளி­நாட்டுப் பய­ணி­களை இலக்­கு­வைத்து நடத்­தப்­பட்ட இந்த மிலேச்­சத்­த­ன­மான தாக்­கு­தலின் பின்­னணி என்ன என்­பது தொடர்பில் உண்­மைகள் வெளிக்­கொ­ண­ரப்­பட வேண்டும். உண்­மைகள் மறைக்­கப்­ப­டக்­கூ­டாது. தாக்­கு­தலின் பின்­ன­ணியில் இருந்­த­வர்கள் மற்றும் நேர­டி­யாகத் தொடர்­பு­பட்­ட­வர்கள் அனை­வரும் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­பட வேண்டும்.
இந்தத் தாக்­கு­தலின் பின்னர் பல இடங்­களில் வன்­முறைச் சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ளன. பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்­த­வர்கள் இந்த வன்­மு­றை­களில் ஈடு­பட்­டுள்­ளதைக் காணொ­ளிகள் ஊடாகக் காண­மு­டி­கின்­றது.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்­குதல் மற்றும் அதன் பின்னர் இடம்­பெற்ற வன்­முறைச் சம்­ப­வங்கள் அர­சியல் பின்­ன­ணியில் அரங்­கே­றி­யுள்­ளதா என்ற சந்­தேகம் வலுப்­பெற்­றுள்­ளது. யார் குற்­ற­மி­ழைத்­தி­ருந்­தாலும் அவர்கள் அனை­வரும் கைது­செய்­யப்­பட்டு இன, மத, பதவி வேறு­பா­டின்றி தண்­டிக்­கப்­பட வேண்டும். இதை சர்­வ­தேச சமூ­கமும் வலி­யு­றுத்த வேண்டும் எனவும் அவுஸ்­தி­ரே­லி யாத் தூது­வ­ரிடம் எடுத்­து­ரைத்தேன்.
வடக்கு, கிழக்கில் படை­யி­னரின் கட்­டுப்­பாட்டில் இருக்கும் மக்­களின் காணிகள் தொடர்­பிலும் பேசினோம். காணிகள் பல விடு­விக்­கப்­பட்­டி­ருந்­தாலும் ஏனைய காணி­களும் விடு­விக்­கப்­பட வேண்டும் எனவும், அப்­போ­துதான் மீள்­கு­டி­யேற்றம் முழுமை பெறும் எனவும் குறிப்­பிட்டேன் என்றார்.

 



Share this:

Thailand

Malaysia

Dubai

Bali

Srilanka

Dubai

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies