இடிக்கப்படும் பிள்ளையார் கோயில்: நிறுத்தாவிட்டால் போராட்டம்; சிவாஜிலிங்கம் எச்சரிக்கை!

25 May,2019
 

 

 
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள அச்சமான சூழ்நிலைகளை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு தமிழர் தாயகமாக வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்திக்கின்றார்.
திருகோணமலை மாவட்டத்திலுள்ள தமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்கும் நடவடிக்கையில் தொல்பொருள் திணைக்களம் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ள சிவாஜிலிங்கம், வரலாற்றுச் சிறப்பு மிக்க கன்னியா வெந்நீர் ஊற்று கிணறுகள் அமைந்துள்ள பகுதியிலுள்ள பிள்ளையார் கோயில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று ஏழு கிணறுகள் அமைந்துள்ள இடத்துக்கு அருகில் பிள்ளையார் ஆலயத்தின் அத்திவாரம் புத்த பிக்கு ஒருவரின் தலைமையில் கடந்த ஒருவார காலமாக உடைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த இடத்தை தொல்பொருள் திணைக்களம் கையகப்படுத்தியிருந்த நிலையில் பிள்ளையார் ஆலயத்தின் அத்திவாரம் உடைக்கப்படுகின்றது. அத்துடன் கன்னியா வெந்நீரூற்று கிணறுகளுக்கு அருகிலுள்ள சிவன் ஆலயத்தின் தீர்த்தக் கேணியும் உடைக்கப்படுவதாக சிவாஜிலிங்கம் யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா கன்னியா வென்நீர் ஊற்று பகுதியிலுள்ள பிள்ளையார் கோயில் இடிக்கப்படுவதை நிறுத்தாத பட்சத்தில் எதிர்வரும் வாரம் ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டமொன்றை நடத்தவுள்ளதாகவும் சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழரின் பழம்பெரும் பூமிக்கு வந்த பேராபத்து; தமிழ் சட்டவாளர்களிடம் அவசர கோரிக்கை!
கன்னியா வெந்நீரூற்று பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனர்நிர்மானப்பணிகளின் போது அங்கு காணப்பட்ட இந்துக்கோவிலின் அஸ்திவாரமாந்து உடைக்கப்பட்டு அதற்கு அருகே உள்ள சிவன் ஆலயத்தின் அருகே இடிந்து வீழ்ந்துள்ள கிணற்றினை நிரப்பியதன் காரணமாக குறித்த பகுதியில் நேற்று முதல் பதற்ற நிலை ஏற்பட்டது.
அதனை அடுத்து இன்று மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ. புஷ்பகுமார வருகைதந்து அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் கலந்தாலோசித்தார்.
கன்னியா வெந்நீரூற்று ஏழு கிணறுகள் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் பிள்ளையார் ஆலயத்தின் அத்திவாரம் உடைக்கப்பட்டு குறித்த இடத்தில் தொல்பொருள் திணைக்களத்தினரால் கடந்த ஒருவார காலமாக புனர்நிர்மாணப் பணிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே குறித்த இடம் தொல்பொருள் திணைக்களத்திற்கு கையகப்படுத்தியிருந்த நிலையில் இவ் விடயம் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபருக்கு தெரியப்படுத்தியதனூடாக குறித்த பணிகளை நேற்றுடன் உடனடியாக நிறுத்துமாறு மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்திருந்த நிலையில் நேற்றையதினம் மீண்டும் அவ் அத்திவார உடைப்புப்பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த பகுதியில் இன முரண்பாடுகள் ஏற்படக்கூடும் எனும் காரணத்தால் அப்பகுதியின் புனரமைப்புப் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு மாவட்ட அரசாங்க அதிபர் பணிப்புரை விடுத்ததோடு இது தொடர்பாக திருகோணமலை மாவட்ட செயற்குழுக்கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பாக தொல் பொருள் திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் எஸ்.டபிள்யூ. சுமணதாச கரு த்துத் தெரிவிக்கையில்,
“கன்னியா பகுதியில் 5.7 ஏக்கர் காணிப்பகுதியானது அரசினால் தொல்பொருள் திணைக்களத்திற்கு அரச சுற்றுநிருபத்தின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டிருக்கின்றது. அப்பகுதியில் நாம் கடந்த 2016ம் ஆண்டு அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டபின்னர், புனர் நிர்மாணப்பணிகளை மேற்கொள்ள இருந்த வேளை, போதிய நிதிப்பற்றாக்குறை காரணமாக குறித்த பணிகள் பிற்போடப்பட்டு அவை மீண்டும் இப்போது ஆரம்பிக்கப்படுள்ளன. இதன்போதே குறித்த பகுதியில் எமது பணிகளை முன்னெடுப்பதற்கு தமிழ் சமூகத்தினரால் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.” என தெரிவித்தார்.
இது இவ்வாறிருக்க தனது பேரனின் காலத்திலிருந்து 8ஏக்கரும் 22பேர்ச் அளவுடைய குறித்த காணியானது தம்மால் பராமரிக்கப்பட்டு வருவதாகவும், அதற்காண காணி உறுதிப்பத்திரமும் தம்வசம் இருப்பதாகவும் குறித்த காணியின் உரிமையாளர் கணேஸ் கோகிலறமணி தெரிவித்தார்.
1985 களில் குறித்த பிள்ளையார் கோவிலானது பதிவுசெய்யப்பட்டிருந்ததுடன் 2002ம் ஆண்டு புனர்நிர்மாணப் பணிக ளுக்காக குறித்த கோவிலானது இடிக்கப்பட்டபோது வில்கம் விகாரையின் பிக்குவால் இடையூறுகள் ஏற்படுத் தப்பட்டு சுமார் நான்கு வருடங்களாக அது தொடர்பான வழக்கு திருகோணமலை நீதிமன்றத்தில் நடைபெற்றதா கவும் தெரிவித்தார்.
குறித்த வழக்கின் பிரதான சாட்சியாளரான தேரர், குறித்த வழக்கிற்கு வருகை தராததன் காரணமாக வழக்கானது தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு நான்கு வருடத்தின் பின்னர் குறித்த காணி தொல்பொருள் திணைக்களத்தினரால் சுவீகரிக்கப்பட்டதென அவர் குறிப்பிட்டார்.
அரசினால் எந்தவொரு காணியும் கைப்பற்றப்பட முன்னர் குறித்த காணியின் உரிமையாளாருக்கு அது தொடர் பிலான அறிவுறுத்தல் வழங்கப்பட வேண்டுமெனினும் இது தொடர்பிலான எந்தவொரு அறிவித்தலும் தமக்கு வழங்கப்படாது அடாத்தாக குறித்த காணி தம்மிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளதென குறிப்பிட்டார்.
இதற்கு எதிராக வழகு தொடர்வதற்கு தமக்கு நீதித் துறையில் சிரேஷ்ட நிபுணர்களது உதவி தேவைப்படுவதாக அவர் தெரிவித்தார்.

 

 

 

 



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies