இன­அ­ழிப்பு ஆதா­ரங்­களால் சர்­வ­தேசம் அதிர்ச்சி ஜெனீ­வா­வி­லி­ருந்து தமிழர் மர­பு­ரி­மைகள் பேர­வையின் இணைத்­த­லைவர் நவ­நீதன்

20 Mar,2019
 

 
பொறுப்­புக்­கூ­ற­லுக்­காக கால அவ­காசம் வழங்­கு­வதால் இலங்கை அர­சாங்கம் சர்­வ­தே­சத்­தி­னையும், ஐ.நா.மனித உரி­மைகள் பேர­வை­யையும் ஏமாற்றி அதனை தட்டிக் கழிப்­ப­தற்கே வழி வகுக்கும் என தமிழர் மர­பு­ரி­மைகள் பேர­வையின் இணைத்­த­லைவர் வி.நவ­நீதன் ஜெனீ­வா­வி­லி­ருந்து வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வியின் போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அச்­செவ்­வியின் முழு வடிவம் வரு­மாறு,
கேள்வி:- ஐ.நா.மனித உரி­மைகள் பேரவை கூட்­டத்­தொ­டரில் தமிழர் மர­பு­ரி­மைகள் பேரவை பங்­கேற்­ப­தற்கு தீர்­மா­னித்­த­மைக்­கான காரணம் என்ன?
பதில்:- தமிழர் மர­பு­ரி­மைகள் பேர­வை­யா­னது, கடந்த வருடம் ஆவணி 28ஆம் திகதி சிங்­களக் குடி­யேற்­றங்கள், பௌத்­த­ம­ய­மாக்கல் உள்­ளிட்ட ஆக்­கி­ர­மிப்புச் செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ராக முல்­லைத்­தீவு மாவட்­டத்­திலே பாரிய ஜன­நா­யகப் போராட்­ட­மொன்றை முன்­னெ­டுத்­தி­ருந்தோம். இந்தப் போராட்­டத்­தினை அடுத்து எமது கோரிக்­கைகள் அடங்­கிய மக­ஜரை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­டத்தில் சமர்ப்­பித்­தி­ருந்தோம்.
ஆனாலும், ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் ஓர­ணியில் திரண்டு முன்­னெ­டுத்த அத்­த­கைய போராட்டம் உட்­பட தொடர்ச்­சி­யாக தமிழர் தாய­கத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்ட போராட்­டங்கள் தொடர்பில் உரிய கவனம் எடுக்­கப்­ப­ட­வில்லை. இந்த நிலையில் தான் தொடரும் ஆக்­கி­ர­மிப்பை சர்­வ­தே­சத்தின் கவ­னத்­திற்கு கொண்டு வரு­வ­தற்­காக மனித உரி­மைகள் பேர­வையில் தற்­போது நடை­பெற்றுக் கொண்­டி­ருக்கும் 40ஆவது கூட்­டத்­தொ­டரில் பங்­கேற்­றுள்ளோம்.
கேள்வி:- ஜெனீ­வாவில் எத்­த­கைய விட­யங்­களை பிரஸ்­தா­பித்­துள்­ளீர்கள்?
பதில்:- 40ஆவது கூட்­டத்­தொ­டரில் எழுத்­து­மூ­ல­மான ஆவ­ணங்­களை சமர்ப்­பிப்­ப­தற்கு ஐ.நா. கால அவ­கா­சத்­தினை வழங்­கி­யி­ருந்­தது. அவ்­வா­றான காலத்தில் இலங்­கையில் இருந்­த­வாறே ஆயி­ரத்து ஐந்­நூறு சொற்­க­ளுக்கு உட்­பட்­ட­தாக கட்­ட­மைக்­கப்­பட்ட இன அழிப்பு தொடர்­கின்­ற­மையை உறு­திப்­ப­டுத்தும் வகை­யி­லான சான்­றா­தா­ரங்கள் உள்­ள­டங்­கிய ஆவ­ணத்­தினை சமர்­ப்பித்­தி­ருந்தோம்.
அவ்­வா­றான நிலையில் தற்­போது அந்த ஆவ­ணத்தின் விரி­வான அறிக்­கையை ஐ.நா.மனித உரி­மைகள் பேர­வை­யிலும், அங்­க­த்­துவ நாடு­க­ளுக்கும், ஆணை­யாளர் அலு­வ­ல­கத்­திற்கும் சமர்ப்­பித்­துள்ளேன். இத­னை­வி­டவும் நான் கலந்­து ­கொண்ட பிர­தான நிகழ்­வுகள் மற்றும் பக்க நிகழ்­வுகள் பல­வற்­றிலும், புலம்­பெயர் தரப்­பி­ன­ரு­ட­னான கலந்­து­ரை­யா­டல்­களின் போதும் யுத்­தத்தின் பின்­ன­ரான சூழலில் கட்­ட­மைக்­கப்­பட்ட இன அழிப்பு சம்­பந்­த­மான விட­யங்­களை தெளி­வு­ப­டுத்தி உறு­தி­யான கருத்­துக்­களை முன்­வைத்து வரு­கின்றேன்.
கேள்வி:- உங்­க­ளது விரி­வான அறிக்­கை­யிலும், ஏனைய சர்­வ­தேச தரப்­பி­ன­ரு­ட­னான சந்­திப்­புக்­க­ளிலும் நீங்கள் எத்­த­கைய விட­யங்­களை வலி­யு­றுத்திக் கூறி­யுள்­ளீர்கள்?
பதில்:- மூன்று விட­யங்­களை பிர­தா­ன­மாக குறிப்­பிட்­டுள்ளோம். அதில் முத­லா­வ­தாக, அபி­வி­ருத்தி என்ற போர்­வையில் எல்­லைக்­கி­ரா­மங்­களில் முன்­னெ­டுக்­கப்­படும் சிங்­களக் குடி­யேற்­றங்­களை ஆதா­ரங்­க­ளுடன் நிரூ­பித்­துள்ளோம். இரண்­டா­வ­தாக இனப்­ப­ரம்­பலை மாற்றும் செயற்­பாடு தொடர்பில் கிழக்கு மாகா­ணத்­து­ட­னான புள்­ளி­வி­ப­ரத்­துடன் ஒப்­பிட்டு எடுத்துக் கூறி­யுள்ளோம்.
உதா­ர­ண­மாக கிழக்கில் கல்­லோயா அபி­வி­ருத்தித் திட்­டத்தின் மூலம் எவ்வாறு இனப்­ப­ரம்பல் மாற்­றி­ய­மைக்­கப்­பட்­டதோ அது­போன்­ற­தொரு நிலை­மையே வடக்­கிலும் நடை­பெ­று­கின்­றது. மூன்­றா­வ­தாக, தொல்­லியல் திணைக்­களம் பிர­க­ட­னப்­ப­டுத்­திய வர­லாற்றுப் பிர­தே­சங்­களில் 50சத­வீ­த­ மா­னவை வட­மா­கா­ணத்தில் இருப்­ப­துடன் அவை வெளிப்­ப­டை­யான ஆய்­வு­க­ளின்றி திட்­ட­மிட்டு பௌத்த மதத்­தினை முன்­னி­லைப்­ப­டுத்தும் உள்­நோக்­கத்­துடன் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­ற­மையை கள ஆய்வுத் தர­வு­க­ளுடன் குறிப்­பிட்­டுள்ளோம்.
வன­வ­ளப் ­பா­து­காப்பு மற்றும் வன­ஜீ­வ­ரா­சிகள் திணைக்­க­ளத்தால் பொரு­ளா­தார ரீதி­யாக தமி­ழர்­களை மலி­னப்­ப­டுத்தும் வகையில் காணி­களை ஆளு­கைக்கு உட்­ப­டுத்­துதல் சம்­பந்­த­மாக எடுத்­து­ரைத்­துள்ளோம். முக்­கி­ய­மாக 15 ஆயிரம் ஏக்கர் நிலம் தொடர்பில் பொது­மக்­க­ளி­டத்தில் ஆவ­ணங்கள் இருந்தும் அவை கைய­ளிக்­கப்­ப­டாது இந்த திணைக்­க­ளங்­களால் கைய­கப்­ப­டுத்­தப்­பட்டிருக்கின்றது என்­பதை கூறி­யுள்ளோம்.
கேள்வி:- சர்­வ­தேச தரப்­பு­க­ளி­டத்தில் கட்­ட­மைக்­கப்­பட்ட இன­அ­ழிப்பு தொடர்­பான ஆதா­ரங்­களை முன்­வைக்­கின்­ற ­போது அவர்­களின் நிலைப்­பா­டுகள் எவ்­வாறு உள்­ளன?
பதில்:- ஐ.நா. மனித உரிமை பேர­வையின் உறுப்பு நாடு­களின் பிர­தி­நி­திகள் உட்­பட சர்­வ­தேச தரப்­பி­ன­ரி­டத்தில் கட்­ட­மைக்­கப்­பட்ட இன­ அ­ழிப்பு தொடர்­பான எமது அறிக்­கையை முன்­வைத்து விப­ரிக்­கின்­ற­போது அவர்கள் அபி­வி­ருத்தி என்ற பெயரில் நடை­பெ­று­கின்ற இத்­த­கைய இன அழிப்பு தொடர்பில் அதிர்ச்சி அடைந்­த­தோடு தமது அதி­ருப்­தி­யையும் வெளி­யிட்­டி­யி­ருந்­தனர். மேலும் முதற்­த­ட­வை­யாக இத்­த­கைய அறிக்­கை­யொன்று தமக்கு கிடைக்கப் பெற்­றுள்­ள­தா­கவும் அந்த தரப்­பி­னர்கள் எம்­மி­டத்தில் தெரி­வித்­தனர்.
கேள்வி:- சர்­வ­தேச தரப்­புக்கள் அதிர்ச்­சி
­ய­டைந்து அதி­ருப்தி வெளி­யிட்­டுள்­ள­தாக நீங்கள் கூறி­யுள்ள நிலையில் அதன் பிர­தி­ப­லிப்­புக்கள் நிறை­வேற்­றப்­ப­ட­வுள்ள பிரே­ர­ணையில் தாக்­கத்­தினை செலுத்த வாய்ப்­புக்கள் உள்­ள­னவா?
பதில்:- சர்­வ­தேச தரப்­புகள் உட­ன­டி­யாக எத்­த­கைய முடி­வு­களை எடுக்கும் என்று எம்மால் உறு­தி­யாக கூற­மு­டி­யாது. ஆனால், எமது அறிக்­கை அவர்­களின் மனச்­சாட்­சியை நிச்­சயமாக சீண்டும். விசே­ட­மாக பேர­வையின் ஆசிய பசுபிக் பிராந்­திய அலு­வ­லக அதி­கா­ரி­க­ளுடன் சந்­திப்­புக்­களை நடத்­தி­யி­ருந்­த­போது மனித உரி­மை மீறல்கள், காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்களின் விட­யங்கள் உள்­ளிட்­ட­வற்­றையும் விரி­வாக எடுத்துக் கூறி­யி­ருந்தோம். இவற்றின் கார­ணத்­தாலும் பாதிக்­கப்­பட்ட தரப்பின் சார்பில் கலந்­து­கொள்ளும் ஏனைய தரப்­புக்­களின் பிர­தி­ப­லிப்­புக்கள் எதிர்­கா­லத்தில் ஏற்­ப டும் என்ற நம்­பிக்­கையும் எமக்­குள்­ளது.
கேள்வி:- இலங்­கையின் பொறுப்­புக்­கூ­ற­லுக்­காக இரண்­டு­வ­ருட கால அவ­காசம் வழங்­கப்­ப­டு­வது தொடர்பில் பிரே­ர­ணையை முன்­ன­கர்த்­த­வுள்ள தரப்­பி­ன­ருடன் பேச்­சுக்­களை நடத்­தி­னீர்­களா?
பதில்:- ஆம், அவர்­க­ளுடன் மட்­டு ­மல்ல ஏனைய உறுப்பு நாடுகள் மற்றும் ஆணை­யாளர் அலு­வ­ல­கத் ­த­ரப்­புக்­க­ளு­டனும் கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொண்­டுள்ளோம். பொறுப்­புக்­ கூறல் விட­யத்தில் இலங்கை அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களை தெளி­வு­ப­டுத்தி தொடர்ந்தும் கால அவ­காசம் வழங்­கு­வ­தற்கு முன்­மொ­ழி­யப்­பட்­டுள்­ளமை குறித்து எமது ஆழ்ந்த கவ­லையை வெளிப்­ப­டுத்­தினோம்.
குறிப்­பாக, இலங்கை அர­சாங்­கத்தின் பொறுப்­புக்­கூறல் செயற்­பா­டுகள் தொடர்பில் விசேட சர்­வ­தேச கண்­கா­ணிப்பு மற்றும் நிகழ்ச்­சித்­திட்டம் அவ­சியம் என்­பதையும் வலி­யு­றுத்­தினோம். அவ்­வா­றான நிபந்­த­னை­க­ளின்றி வெறு­மனே கால அவ­காசம் வழங்­கப்­ப­டு­வ­தா­னது,
இலங்கை அர­சாங்கம் சர்­வ­தே­சத்­தையும், ஐ.நாவையும் மீண்டும் ஏமாற்­று­வ­தற்கே வழி வகுக்கும் என்­பதை சுட்­டிக்­காட்­டி­யுள்ளோம். மேலும் சில அர­சியல் கட்­சிகள் கால அவ­காசம் வழங்­கு­வதை ஏற்­றுக்­கொண்­டாலும் ஒட்­டு­மொத்­த­மாக பாதிக்­க­ப்பட்ட மக்கள் தமது கண்­டன ஆர்ப்­பாட்­டங்கள், பேர­ணிகள் மூலம் மேலும் கால அவ­காசம் வழங்­கு­ வதை விரும்­ப­வில்லை என்ற விட­யத்­தி­னையும் காணா­மல்­போ­ன­வர்கள் பற்றிய அலு­வ­ல­க­மா­னது வெறு­மனே ஏமாற்றும் விடயம் என்­ப­தையும் திட­மாக குறிப்பிட்டுள்ளோம்.
கேள்வி:- பொறுப்புக்கூறலுக்காக கால அவகாசம் வழங்கக் கூடாது என்ற விடயத்தினை வலுவாக முன்வைக்கின்றபோது அவர்களின் பிரதிபலிப்புக்கள் எவ்வாறு இருந்தன?
பதில்:- ஆணையாளர் அலுவலகம் இலங்கை விடயத்தில் தெளிவாக உள்ளது. கள நிலைமைகளை துல்லியமாக கொண்டுள்ளது. ஆனாலும் பேரவையின் உறுப்பு நாடுகள் முன்வைக்கின்ற பிரேரணையை நடைமுறைப்படுத்துவதற்குரிய செயற்பாடுகளை முன்னெடுப்பதே அதன் பணியாக இருக்கின்றது. அவ்வாறான நிலையில் ஆணையாளரின் அபிப்பிராயங்களும் பேரவைக்கு முன்வைக்கப்படுகின்றன.
இருப்பினும் உறுப்பு நாடுகளே தீர்மானத்தினை மேற்கொள்கின்றன. ஆகவே உறுப்பு நாடுகளிடத்தில் வலுவாக எமது நிலைப்பாடுகளை முன்வைக்க வேண்டியுள்ளது. தற்போதைய நிலையில் சர்வதேச மேற்பார்வையொன்று இரண்டு வருடங்களுக்கு நீடிக்கின்றதே என்பது பிரேரணையை கொண்டுவருகின்ற நாடுகளின் நிலைப்பாடாக இருக்கின்றது. எனினும் பாதிக்கப்பட்ட மக்கள் அதனை விரும்பவில்லை என்பதை அவர்களிடத்தில் நேரடியாகவே கூறியுள்ளோம்.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies