யாழில் 283 ஏக்கர் நிலப்பரப்பில் நவீன வசதிகளுடன் கூடிய பெரு நகரம்!

16 Feb,2019
 

 



 
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் 283 ஏக்கர் நிலப்பரப்பில் நவீன வசதிகளுடன் கூடிய பெரு நகரம் ஒன்றை அமைப்பதற்கான யாழ்.மாநகர சபையின் யோசனையை பிரதமா் ரணில் விக்கிரமசிங்க கொள்கையளவில் ஒப்புதல் வழங்கியதுடன், அதற்கான நிதி மூலத்தை தேடுவதற்கும் இணக்கம் தெரிவித்தார்.
வடமாகாணத்திற்கு 3 நாள் பயணமாக யாழ்ப்பாணத்துக்கு நேற்று காலை வருகை தந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, யாழ்ப்பாண மாவட்டத்தின் அபிவிருத்தி முன்னேற்றங்கள் குறித்து ஆராய்ந்தார். இதுதொடர்பான கூட்டம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது யாழ்ப்பாண மாநகர முதல்வா் இ.ஆனல்ட் இந்த திட்டத்திற்கான மாதிரி வரைபை சமா்பித்திருந்ததுடன், பிரதமா் ரணில் விக்கிரம சிங்கவுக்கும் பிரதி ஒன்றை வழங்கியிருந்தாா்.
“இந்த நவீன நகர திட்டம் சிறந்த யோசனையாகும். முதல்வரைப் பாராட்டுகின்றேன். அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவைப்படும் நிதியைப் பெறுவதற்கான மூலங்களை தேடுவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்படும்” என்று பிரதமர் தெரிவித்தார்.
தொடா்ந்து கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மாநகர முதல்வா் இ.ஆனல்ட், “யாழ்ப்பாணம்- செம்மணி பகுதியில் சகல வசதிகளுடனும் கூடிய நவீன நகரம் ஒன்றை சுமாா் 293 ஏக்கா் நில பரப்பில் அமைப்பதற்கான திட்டம் ஒன்றை தீட்டியிருக்கிறோம்.
இதற்கு தேவையான 293 ஏக்கா் நிலப்பகுதி வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் ஆளுகைக்குள் இருந்தது. இந்நிலையில் கடந்த முறை பிரதமா் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணம் வந்தபோது இந்த திட்டம் குறித்த முன்னோட்டத்தினை முன்வைத்தோம்.
அப்போதே அதனை வரவேற்ற பிரதமா், உடனடியாக தன்னை வந்து சந்தித்து உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு கேட்டிருந்தாா். அதற்கமைய பாராளுமன்ற உறுப்பினா்கள் மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் மற்றும் யாழ்.மாவட்ட செயலா் என்.வேதநாயகன் ஆகியோருடன் நானும் பிரதமரை சந்தித்து திட்டம் தொடா்பாக விரிவான கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தோம்.
அதில் எமது திட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையான நிலம் வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் ஆழுகைக்குள் இருப்பதனையும் சுட்டிக்காட்டியிருந்ததற்கு அமைவாக, பிரதமருடனான கலந்துரையாடல் நிறைவடைந்து 2 வாரங்களிலேயே வனவள பாதுகாப்பு திணைக்களம் எமக்கு தேவையான 293 ஏக்கா் நிலத்தை தமது ஆழுகைக்குள் இருந்து விடுவித்து கொடுப்பதற்கு இணக்கம் தெரிவித்தது.
அதற்கமைய கொழும்பிலிருந்து நிபுணா்களை அழைத்துவந்து அந்த காணிகளை அள வீடு செய்துள்ளதுடன் நவீன நகருக்கான மாதிரி ஒன்றையும் தயாா் செய்துள்ளோம்.
அதனை இன்று பிரதமா் தலமையில் நடைபெற்ற கூட்டத்தில் சமா்பித்தபோது, பகிரங்கமாக வரவேற்ற பிரதமா் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த தேவையான நிதி மூலத்தை தேடுவதற்கு இணக்கம் தெரி வித்துள்ளாா் என்றார்.
இதேவேளை இந்த நவீன நகரத்திற்குள் குடியிருப்புக்கள், கலாச்சார வலயம், கல்வி வலயம், சுகாதார அல்லது மருத்துவ வலயம், விளையாட்டு வலயம், தொழில் ஸ்தாபனங்கள், கலப்பு அபிவிருத்தி வலயம், விடுதிகள், உணவகங்கள் என சகல வசதிகளும் உள்ளடக்கப்பட்டு, தரம்வாய்ந்த வடிகால்கள், வீதிகள் உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்படும் என நவீன நகரம் தொடா்பான உத்தேச திட்டவரைபில் கூறப்பட்டிருக்கின்றது

 



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies